கிரேசி மோகன்

 
தாளமது வேதாளமாகினால்
முருங்கையின் உச்சியில் விக்ரமனே
ஏனோ ஜீவா இந்த விசாரம்
ஆன்மனாகிநீ ஆள் உலகை….

கண்ணனின் உன்னத கீதையினாலே
குருஷேத்ரமே கலங்கியதே
ஏனோ ஜீவா இந்த விசாரம்
ஆன்மனாகிநீ ஆள் உலகை..

சொப்பனம், ஜாக்ரத்,சுஷூப்தி மூன்றுக்(கு)
அப்பால் உள்ளது அது துரியம்
ஏனோ ஜீவா இந்த விசாரம்
ஆன்மனாகிநீ ஆள் உலகை….!

கனவினில் கொண்ட தாகம் தீர்க்கும்
கனவுநீரது கானல் நீர்
ஏனோ ஜீவா இந்த விசாரம்
ஆன்மனாகிநீ ஆள் உலகை..

கனவுக்கும் நனவுக்கும் உள்ள வித்யாசக்
கடுகளவைப் போய் கடலளவாய்
ஏனோ ஜீவா இந்த விசாரம்
ஆன்மனாகிநீ ஆள் உலகை….!

காண்போன், காண்பது, காட்சிகள் யாவையும்
வீண்போம் விழித்து எழுந்தக்கால்
ஏனோ ஜீவா இந்த விசாரம்
ஆன்மனாகிநீ ஆள் உலகை..

எதுதான் கனவு எதுதான் நனவு
யாரறிவார் இவ்வியனுலகில்
ஏனோ ஜீவா இந்த விசாரம்
ஆன்மனாகிநீ ஆள் உலகை..

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.