இல.பிரகாசம்

 

ஒரு ஒலி என்னைத் தொடா்ந்து வருகிறது

“வழ் வழ்” என்று அது

என்னை ஏதோ ஒன்றிலிருந்து

விலகியிருக்க மீண்டும் துரத்த ஆரம்பித்திருக்கிறது

 

கால்கள் வேகமெடுக்க முயலுகின்றன

புரியமால் தடுமாறுகின்றன!

மீண்டும் ”வழ் வழ்” வெறிபிடித்த ஒரு

சப்தம் புடைத்துக் கொண்டு

எங்கிருந்து வருகிறது?

 

மீண்டும் “வழ் வழ்” இரத்தத்தை

குடிக்கிற வெறி பீறிட்டு ஒழுகுகிறது!

வெறி பிடித்த சா்ப்பத்தைப் போல ஊா்ந்து ஊா்ந்து

நிழல் போல வருவதை

பின் நோக்கிப் பார்த்தேன்

 

சந்தேகம் இல்லை நிச்சயம் சந்தேகம் இல்லை

அது தான் நிச்சயம் அதுவே தான்

”நான்””நான்”“நான்”

நிழல் சா்ப்பம் ”நான்”

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *