சென்னை விமான நிலையத்தின் மற்றுமொரு மைல்கல்!
பவள சங்கரி
தலையங்கம்
விமானம் ஓடு பாதையில் விமானங்கள் 75 முதல் 80 வினாடிகளில் பறந்துவிட வேண்டும் என்றிருந்ததை இனி 70 வினாடிகளுக்குள் பறந்துவிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இது மேலும் 60 வினாடிகளாகக் குறைப்பதே நமது விமான நிலையத்தின் குறிக்கோளாக உள்ளது. சென்னை விமான நிலையத்திலிருந்து ஒரு மணிக்கு 32 விமானங்கள் என்று இருப்பதை இனி ஒரு மணிக்கு 36 விமானங்கள் பறகும். இது நமது சென்னை விமான நிலையத்தின் பொருளாதார வளர்ச்சியையும், பாதுகாப்பையும் மேம்படுத்துவதாக உள்ளது.
விமானத்தில் நுழைவதற்கு இருக்கை எண்ணுடன் கூடிய அனுமதிச்சீட்டு (boarding pass) முறை இரத்து செய்யப்படவிருப்பதால் கால தாமதங்கள் குறைய வாய்ப்பாகிறது.