கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
”எங்கிருந்(து) ஆரம்பம், எங்கெதில் சங்கமம்,
இங்கணம் இவ்வுயிரை நன்குணர்ந்தோர் -இங்கிலர்:
ஆதலால் பாண்டவா, வேதனை வேண்டாம்வல்,
சூதினைக் கொல்லல் சிறப்பு”….கிரேசி மோகன்….!
”ARCHER அருச்சுனா TORTUREநீ பண்ணாதே,
PREACHERஎன் சொற்படி(கீதை)போப் பாண்டவா, -ஓர்ச்சரம்(ஒற்றை அம்பினால்)
கொண்டந்த நூறைக் குலைநடுங்கச் செய்திடுவாய்,
உண்டந்த சொர்கம் உனக்கு’’….கிரேசி மோகன்