
‘போலெ’ன்(று) உவமை புகல முடியாது
மாலென் றனரோ மகாகவிகள் -கேளொன்று
சிந்தனை தேவையா சித்திரத்திற்(கு) ஓவியா
எந்தனை வேறுவடி வாக்கு”….!
”பிறந்து புவியில் பிருந்தா வனத்து
விருந்தைப் பறிமாற வாராய் -மறந்துபோய்
எங்குநீ தோன்றினும் ஏழைநான் ஏங்கிடும்
மந்தை வெளியிலிரு வந்து”….கிரேசி மோகன்….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.