மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

++++++++++++++

jaya

 

நேற்று எனது
தொல்லைகள் எல்லாம் தெரிந்தன,
வெகு வெகு
தூரத்தில் இருப்பதாய்!
இப்போது அவை எல்லாம்
நிலைக்கப் போவதாய்
கலக்கு தென்னை!
நேற்றைய தினத்தை நம்பிக்
கிடந்தேன்!

திடீரென முன்பு இருந்ததில்
அரை மனிதனாய்க் கூட நானில்லை!
ஒரு கரிய நிழல் என்மீது
படர்ந்துளது!

அந்தோ!  திடீரென
நேற்றைய தினம் வந்தது என் முன்னால்!
ஏனவள் போக வேண்டுமென
நானறியேன்! ஏன்
அவளிங்கு தங்க வில்லை!
தவறாய் ஏதும் சொல்லி விட்டேனா?
இப்போது நான் ஏங்கித் தவிப்பது
நேற்றைய தினத்துக்கு!

காதல் விளையாட் டெனக்கு எத்தனை
எத்தனை எளிதாய் இருந்தது,
நேற்றைய தினத்தில்
இப்போது நான் ஒளிந்து கொள்ள
இடம் ஒன்று தேவை!
அந்தோ!
நேற்றைய தினத்தை நான்
நம்பினேனே!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *