கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

”புழக்கடை தோட்டத்துப் பூக்களைகேட் டுப்பார்
வழக்கிடும் தூங்காய் வனிதா, -கிழக்கிடை
ஆதித்யன் தோன்றிவிட்டான் அம்பலம் சென்றோது
சோதிவட்டச் சங்கன் சிறப்பு’’….கிரேசி மோகன்….!
’’சோதிவட்டம் -சுழலும் சுதர்ஸனத் திகிரி’’….!
சங்கன் -சங்கு உடையவர்….!
”சங்குக் கழுத்தினள், சாரங்க நாணிடையாள்,
பொங்கோதப் பாற்கடல் பேச்சுடையாள் , -பொங்காக்கண்(இரவெல்லாம் விழித்து எழுதியும் ‘’பொங்காக்கண்’’….!)
மைகொண்ட மாதாண்டாள் மாதவர்மேல் காதலுற்றாள்,
வைகுண்ட வாசல் விரி’’….கிரேசி மோகன்….!