கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

Sometimes the Krishna and his consort compete with each other to rush to grace the devotee and in that haste, there is a delay in blessing them.
கண்ணாடிப் பொய்கையில், கட்டிய மாலையை
முன்னாடி சூடி மகிந்தவள்நான், -என்னாடி!(விளிச்சொல் -சக்களத்தி போல்)
’’பள்ளிகொள்ள ரங்கனுக்கு பாம்பிருக்கப்(ஆதி சேடன்) பாய்மடியா!’’
கிள்ளை(கிளி)கொள் கோதையின் காண்டு(கோபம்)’’….
”நப்பின்னை போலவே நானும் அழகுதான்
அப்பெண் அகமுடையாள் ஆனாற்போல், -இப்பெண்நான்
பின்னாடி வந்தாலும் ”ப்ரோச்சேவா”, பக்தியில்
முன்னாடி நின்றேன் முகுந்து(செல்லமாய்)”….கிரேசி மோகன்….!
”பாஸுரமுக கரிராஜுலு(யானை கஜேந்திரன்) ப்ரோச்சின(காப்பாத்தின)
த்யாகய்யர் கீர்த்தனை” ப்ரோச்சேவா எவருரா” வாசித்ததில்….!ஆண்டாள்
தன்னை மணம்புரிந்து காப்பாத்துமாறு கண்ணனிடம் கோருகிறாள்….
தான் பத்தினி நப்பின்னையைப் போல் அழகானவள் என்பதை கண்ணாடி காட்டி
CONFIRM செய்கிறாள் கோதை….!
