180901 Penance of Devaki and Yashoda 14×20” arches 300 gsm wcol lr

ஒருத்தி கருத்தரிக்க வேறொருத்தி காத்த
கருத்த நிறக்கண்ணன் நின்போல் -பிறப்பில்
அனாதை ஆனாலும் ஆய்ச்சியர் அன்பால்
அனாதி அவன்கதை ஆச்சு….!

திரும்ப சிறையில் பிறந்து சிரித்து
விரும்பி வ்ரஜமண் விரைந்து -கறந்த
பசுக்கள் பால்மடி பச்சிளங் கன்று
ருசிக்கும்முன் உண்ணகண்ணா ரா….!

வேண்டுதல் வெண்பா….!
———————————————————————

ஒருத்தி கருத்தரிக்க வேறொருத்தி காத்த
கருத்தநிறக் கண்ணனனே, கோட்டை – திருச்சியில்
மாது பிளஸ்டூவில் சாக்லேட் கிருஷ்ணாவில்
தாதவிழ் பூவாய் மலர்….!

எங்குநாம் சென்றாலும் அங்கவன் முன்னம்போய்
தங்கு தடைகள் தவிர்த்திடுவான் -செங்கண்மால்
தாளிரெண்டைப் பற்றித் துதிப்போர்தம் தீவினை
தாளிரெண் டாகும் தெறித்து….!

கண்ணிநுண் தாம்பினால் கட்டுண்ட காரணம்
அன்னையின் அன்பினாலா அல்லது -கண்ணனே
ஓயாத லீலையின் மாயா வசப்பட்டு
ஆயாசம் ஆனதா லா….!

திரும்ப சிறையில் பிறந்து சிரித்து
விரும்பி வ்ரஜமண் விரைந்து -கறந்த
பசுக்கள் பால்மடி பச்சிளங் கன்று
ருசிக்கும்முன் உண்ணகண்ணா ரா….!

பள்ளிதனைக் கொண்டதால் பிள்ளை பெறுவதால்
வெள்ளலைப் பாற்கடல் உள்ளமால் -புள்ளேறும்
கார்மேக வண்ணனும் ஓர்மகன் அன்னையும்
நேர்நிகர் ஆவார் நமக்கு….கிரேசி மோகன்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *