181003 – goverdhanadhari watercolour 24×32 cms lr

அழைக்கும் குரலைக்கேட்(டு) ஆடா(து) அசங்காது
உழைக்கவரு வானவர் ஓடி -மழைக்குக்
குடையாய் மலையேந்தி கோகுலம் காத்த
இடையன் இணைப்பில் இரு….!

ஆவுக்காய் குன்றேந்தி பாவ்லாவைக் காட்டினாலும்
காவுக்கோ இந்திர கர்வபங்கம் -தேவு
அவதாரமாய் வந்த அரிமாலர் என்று
சிவதாரம் காளியின் சொல்’’…!

”குன்றுகோ வர்த்தனமும் கண்ணன்!, மழைகாக்கும்
சுண்டு விரல்கண்ணன் கண்ணனே!, -இந்திர
கர்வமும் கண்ணனே! கர்வபங்கம் கண்ணனே!
மர்மமே கண்ணனாய் மால்’’….கிரேசி மோகன்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *