கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

“அந்தணர், மந்திரம், ஆடம் பரமின்றி,
சந்திர வம்சத்து ஸ்ரீரங்கன்,-நந்தனின்,
வீட்டுச்சேய் பால்வெளியில், வேந்தனாய் ஆவதைக்,
காட்டிய கேசவ் கவி”….!
“ராம கிரணமாய் ,ராத்திரி வந்தவனுக்கு,
நாம கரணம் நடக்கும்முன், -காமதேனு,
பால்சுரக்கப் போச்சு, பழையரா மாயணங்கள்,
மால்பிறப்பு பாகவத மாச்சு”….கிரேசி மோகன்….!
பசு பறந்து கொசுவானது….இந்த கொசு கடிக்காது, மடிப்பாலை மாலவர் மீது சுரக்கிறது….சபாஷ் கேசவ்….!
அந்தணர், மந்திரம், ஆடம் பரமின்றி,
மந்தா கினியாக மாடு்பால் -தந்திட:
மாட்டினார் மன்னராய், மாடுகள் மேய்ப்பவர்,
காட்டிய கேசவ் கவி”….!
மந்தாகினி -ஆகாஸகங்கை….!
“பாலா பிஷேகமே பட்டா பிஷேகமாய்
கோலோ கலமாகக் கொண்டாடும் -மாலோலர்;
ஆவிந்தன் பாலில் அபிஷேக நீராடி
கோவிந்தன் கொண்டார் குளிப்பு”….கிரேசி மோகன்….!