உலகின் முதல் பெண் பொறியியலாளர்!

0

உலகின் முதல் பெண் பொறியியலாளர் எலிசா லியோனிடா சம்பிரியசுவிற்கு இன்று 131 ஆம் பிறந்த நாளைக்கொண்டாடுகிறது கூகிள். யார் இவர்? எலிசா லியோனிடா, உரோமானியரான, 1887 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் தேதி பிறந்த இவர் உலகின் முதல் பெண் பொறியியலாளர்களில் ஒருவராக வரலாற்றை உருவாக்கியுள்ளவர்.

தனது 86 வருட வாழ்க்கையில், ஆண் ஆதிக்கத்தினால் பெண் கல்வி முற்றிலும் மறுக்கப்பட்ட காலகட்டத்தில், புவியியல் ஆய்வகங்களின் தலைமை பொறுப்போடு, உரோமானிய கனிம வளங்களைப் பற்றியும் ஆய்ந்தறிந்தார்.

இவர் இந்த அளவிற்கு மதிக்கப்படுவதற்கான காரணங்கள் உள்ளன:

பெண் கல்விக்கு எதிரான காரணத்தால் ஆரம்பப் பள்ளிக் கல்வியிலிருந்தே நிராகரிக்கப்பட்டவர் இவர். 10 உடன்பிறப்புகளுடன் வளர்ந்த இவர் போராடி, உயர்நிலைப் பள்ளி பட்டம் பெற்றபின்னரும் பாலினம் காரணமாக உயர் கல்வியை தாம் விரும்பிய School of Bridges and Roads in Bucharest இல் பயில நிராகரிக்கப்பட்டார்.

சற்றும் மனம் தளறாதவர், பெர்லினின் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் என்று அழைக்கப்படும் சார்லட்டன்பர்க், ராயல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் இயந்திர பொறியியல் கல்வி பயின்று, 1912 இல் பட்டமும் பெற்றார். ஐரோப்பாவிலேயே முதல் பெண் பொறியியலாளர்களில் ஒருவர் என்ற பெருமையையும் பெற்றார்.

எலிசா லியோனிடா, உரோமானிய மற்றும் செருமனிக்கு இடையே 1917 இல் உரோமானியப் படையில் நடந்த முதலாம் உலகப் போரின் இறுதிப் போரின்போது செஞ்சிலுவைச் சங்கத்தில் சிறிய நகரமான மாரெயிஸ்டி என்னும் இடத்தின் மருத்துவமனையில் மேலாளராகப் பணியாற்றினார்.

காலையிலிருந்து மாலை வரை ஓய்வில்லாமல் முழுநேரமும் பணிபுரிந்த ஒரு தனித்தன்மை மிக்க, நவீன சிந்தனைகள் கொண்டவராக, தமது ஆய்வகத்தின் தலைவராக, புதிய வழிமுறைகளையும் புதிய பகுப்பாய்வு நுட்பங்களையும் கொண்டு தண்ணீர், நிலக்கரி மற்றும் எண்ணெய் போன்ற கனிமங்களையும், பொருட்களையும் ஆய்வு செய்ய உதவியுள்ளார். தமது 75 அகவை வரை ஓய்வின்றி உழைத்தவர்.

அனைத்திற்கும் மேலாக, அணு ஆயுத அச்சுறுத்தலை மையமாகக் கொண்ட இலண்டன் லான்காஸ்டர் இல்லத்தில் நடைபெற்ற ஆயுதக் குழுவில் இதுபற்றி புகார் அளித்ததோடு, சர்வதேச ஆயுதக்குறைப்பிற்கான ஒரு வழக்கறிஞராகவும் வாதாடியுள்ளார்..

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *