நாங்குநேரி வாசஸ்ரீ

106. இரவு

குறள் 1051

இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்
அவர்பழி தம்பழி அன்று

குடுக்குத அருகத இருக்கவருகிட்ட கையேந்துதல தப்பு ஒண்ணுமில்ல. அப்பம் ஒளிச்சிவச்சிக்கிட்டு இல்லன்னு சொன்னாவன்னா பொல்லாப்பு அவருக்குதானேதண்டி கையேந்துதவனுக்கு இல்ல.

குறள் 1052

இன்பம் ஒருவற் கிரத்தல் இரந்தவை
துன்பம் உறாஅ வரின்

கையேந்தி கேக்குத பொருள மனசு சங்கடமில்லாம அந்தாக்ல தந்தாகன்னா அப்டி கையேந்துததும் சந்தோசம் தான்.

குறள் 1053

கரப்பிலா நெஞ்சிற் கடனறிவார் முன்னின்
றிரப்புமோர் ஏஎர் உடைத்து

ஒளிவுமறைவு இல்லாம பொறுப்பா தருதவுக முன்ன நின்னு வறும அண்டுத நேரம் பொருளக் கேட்டு கையேந்துததும் அழகு தான்.

குறள் 1054

இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
கனவிலும் தேற்றாதார் மாட்டு

வச்சிக்கிட்டே இல்லன்னு கைய விரிக்குத குணத்த கனவுல கூட நெனையாதவுக கிட்ட கையேந்துததும் மத்தவுகளுக்கு தானம் தருத ஒசந்த கொணத்துக்கு சமானம் தான்.

குறள் 1055

கரப்பிலார் வையகத் துண்மையாற் கண்ணின்
றிரப்பவர் மேற்கொள் வது

தாருங்கன்னு கையேந்தி நிக்கவங்க ஏன் அதச்செய்யுதாகன்னா இல்லன்னு சொல்லாம கொடுக்கவுக இந்த ஒலகத்துல இருக்கதாலதான்.

குறள் 1056

கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பை
யெல்லா மொருங்கு கெடும்

வச்சிக்கிட்டு இல்லன்னு சொல்லுத நோய் இல்லாதவுகளப் பாத்தாலே வறுமையால கையேந்த நெனையுதவங்களோட சங்கடமெல்லாம் அழிஞ்சு போவும்.

குறள் 1057

இகழ்ந்தெள்ளா தீவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்
உள்ளுள் உவப்ப துடைத்து

எளக்காரஞ்செய்யாம தாழ்ச்சியா நெனையாம பொருளக் குடுக்குதவங்களக் கண்டா கையேந்தி நிக்கவங்க மனசுக்குள்ளார சந்தோசம் பொங்கும்.

குறள் 1059

ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்
மேவார் இலாஅக் கடை

பொருள் இல்லன்னு கையேந்தி நிக்கவங்க அறவே அத்துப்போவுத நேரம் குடுக்குத மனசு உள்ளவங்களுக்கு எங்ஙன புகழ்ச்சி உண்டாவும்.

குறள் 1060

இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை
தானேயும் சாலும் கரி

இல்லைன்னு வெரட்டுதவன்கிட்ட பொருளக் கேட்டு கையேந்துதவன் கோவப்படக் கூடாது. தன் நெலைம அவனுக்கும் இருக்கலாம்னு புரிஞ்சிக்கிடுததுக்கு வறும உதாரணமா இருக்கே.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *