Tag: நாகினி

  • சிக்கல் சிக்னல்…?

    -நாகினி

    ஆழ்கடல் வேதனையை
    எதிர்த்து நம்பிக்கை
    நீச்சல் பயணத்தில் நீந்தி
    விண்ணிற்கும் மண்ணிற்கும்
    அறிவுப் பாலம் கட்டிக்  கரைசேர்ந்த
    அறிவியல் வெற்றித்  தொடர்
    அறிவு வாழ்க்கைப் பயணம்…
    அவநம்பிக்கை மூடநம்பிக்கை எனும்
    இரு துருவச் சிக்கல் சிக்னலில்
    சிக்கித் தடம்(தடும்) மாறுதல்
    பகுத்தறிவுப் பிறவியின்
    ஆரோக்கிய மேன்மையோ..!?

    Share
  • வளர்க மக்கள்…

    -நாகினி

    நிற்க இடமில்லை
    மரங்களைச் சாய்த்து
    எழுந்தன குடியிருப்புகள்…

    ****

    பெருக்கெடுக்கும் வெள்ளம்
    குறையவே இல்லை
    பிறவி மழை…

    ****
    போக்குவரத்து நெரிசல்
    போகாத வலி(ழி)யில்
    ஆட்டோ ஈன்றது மகவு…

    ****
    வயல்வெளி குடியிருப்பு வளாகமாக
    முளைத்தும் குறையவில்லை
    நடைபாதை வசிப்பிடம்…!!

    Share
  • திருவள்ளுவர்

    -நாகினி

    குறள் வெண்பாவில்
    மருள் நீக்கிடும்                                                         thiruvalluvar
    அருள் பாக்களை
    முப்பாலில் இலக்கியச்சுவை
    குன்றா நயமோடு வழங்கியோன்…!

    கல்வி கேள்விகளில்
    கருத்தாய்ச் சிறந்து
    கண்ணியமுடன் அரசு
    கடமை ஆற்றும் பண்பைக்
    கல்லில் எழுத்தெனப் பதித்தோன்…!

    களவு கற்பு எனத்
    திருமணவாழ்வுக்கு முன் பின்
    காதல் உணர்வைத்
    தரமான சொற்கோ(ர்)வையால்
    களங்கமற்ற பாமாலையாக்கிக்
    கபடறியா உண்மைக் காதலைத்
    தரணிக்கு உணர்த்தியோன்…!

    பாரில் மனிதம் நிலைக்க,
    பகுத்தறிவு மனிதர் நற்பண்புகளைப்
    பாங்குடன் கடைப்பிடிக்கவே
    பக்குவமாய் நல்நெறிகளைப்
    பசுமரத்தாணியென அறைந்தோன் …!

    அறம்பொருள்இன்பம் எனும் முப்பாலை
    133 அதிகாரம் என வகுத்து
    ஒவ்வொன்றிலும் 10 பாக்கள் கூட்டி
    1330 குறட்பாக்களாகப் பெருக்கெடுத்து
    உலகோர் மனதில் குடிகொண்டுள்ள
    பெருந்தகை திருவள்ளுவர் பதம் நினைந்து
    நாளும் திருக்குறள் படித்து
    நலமாய் வாழ்வில் உயர்ந்திடு தம்பி…!!

    Share