Tag: கண்ணதாசன்

  • கண்ணதாசன் பாடலில் பிற்போக்கான கருத்துகள்

    கண்ணதாசன் பாடலில் பிற்போக்கான கருத்துகள்

    அண்ணாகண்ணன்

    கண்படுமே பிறர் கண்படுமே நீ வெளியே வரலாமா? – உன்
    கட்டழகான மேனியை ஊரார் கண்ணுக்குத் தரலாமா?

    என்ற பாடலை இன்று வானொலியில் கேட்டேன். 1962ஆம் ஆண்டு வெளியான காத்திருந்த கண்கள் திரைப்படத்தில், ஜெமினி கணேசன், சாவித்திரி ஆகியோர் நடிப்பில், கண்ணதாசன் எழுதிய பாடலுக்கு, எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி இசையமைக்க, பி.பி. ஸ்ரீனிவாஸ் பாடியுள்ளார்.

    பிற்போக்கான பல கருத்துகள், இந்தப் பாடலில் உள்ளன.

    ஆடவர் எதிரே செல்லாதே
    அம்பெனும் விழியால் கொல்லாதே
    காரிருள் போல் உன் கூந்தலைக் கொண்டு
    கன்னி உன் முகத்தை மூடு – தமிழ்க்
    காவியம் காட்டும் ஓவியப் பெண்ணே
    மேகத்துக்குள்ளே ஓடு

    என்றும்

    புண்படுமே புண்படுமே புன்னகை செய்யலாமா?

    என்றும்

    கண்ணாடி முன்னால் நில்லாதே – உன்
    கண்ணாலும் உன்னைக் காணாதே

    என்றும்

    இந்த
    மானிடர் உலகில் வாழ்கிற வரைக்கும்
    தனியே வருவது பாவம்

    என்றும் இதில் வரும் வரிகள், பெண்கள் மீதான அடக்குமுறையை எடுத்துக் காட்டும் வரிகள்.

    பெண்கள் வெளியே வரக் கூடாது, சிரிக்கக் கூடாது, தங்கள் அழகைக் காட்டக் கூடாது, ஆண்களின் எதிரே செல்லக் கூடாது, கண்ணாடி பார்க்கக் கூடாது, முகத்தை மூட வேண்டும், தனியே வெளியே செல்லக் கூடாது என அன்று இருந்த பல்வேறு கட்டுப்பாடுகளை இந்தப் பாடல் எடுத்துக் காட்டுகிறது. அன்றைய சமூக நிலையைப் படம் பிடித்துக் காட்டும் பாடல். அதே நேரம் இன்றைய காலத்துக்குப் பொருந்தாத பாடல். நாம் கடந்து வந்த தூரத்தைக் காட்டும் பாடல்.

    சில பிரிவினருக்குள் இன்றைக்கும் இந்தக் கட்டுப்பாடுகள் பலவும் அப்படியே இருக்கின்றன. இது, செய்திகளின் வாயிலாக நமக்குத் தெரிய வருகிறது. ஆயினும், இப்படியான கட்டுப்பாடுகளை உடைத்தெறிந்து பெரும்பான்மைப் பெண்கள் இன்று வெளியே வந்துவிட்டார்கள். ஆணுக்குப் பெண் சரிநிகர் சமானமாக வாழத் தொடங்கிவிட்டார்கள். வீறுகொண்டு விழித்தெழுந்த பெண்ணினத்தின் ஒப்பற்ற ஒளியின் முன்னால், வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப்போம் என்ற விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்.

    Share
  • கவியரசர் பாடல்களும் ஆன்மீக அறிவியலும் – 8

    கவியரசர் பாடல்களும் ஆன்மீக அறிவியலும் – 8

    சக்தி சக்திதாசன்

    கண்ணதாசன் எனும் கவிதைப் பெருங்கடலின் உள்ளே நீச்சலடிக்கும் ஒரு தருணமிது .

    ஆயிரமாய்ப் பாடல்கள்கவிதைகள்கட்டுரைகள் எனப் படைப்புகளின் அத்தனை அங்கங்களினுள்ளும் தனது முத்திரையைப் பதித்தவர் எம் கவியரசர்.

    ஆண்டுகள் பல பத்து கடந்து போயிடினும் தமிழர் மனங்களில் அழியாது நிலைத்திருக்கும் வகையான படைப்புகளைத் தந்தவர் கவியரசர்.

    அன்றாட வாழ்க்கையிலே ஆண் பெண் இருபாலருக்கும் இடையில் ஏற்படும் விரக தாபங்கள் விரக்தி இந்த உணர்வுகளை அதற்குரிய அழுத்தங்களோடு எமக்கு எளிமையான வரிகளில் தந்தவர் கண்ணதாசன்.

    இந்தப் பதிவில் நாம் பார்க்கப் போகும் பாடல் இல்லறம்துறவறம் என இரண்டுக்கும் இடையிலான ஒரு விவாதக் களம் போன்று அமைத்திருக்கிறார் கவியரசர்.

    அன்றைய தலைமுறையில் இருந்து இன்றைய தலைமுறை வரை அனைவராலும் விரும்பிக் கேட்கப்படும் அருமையான பாடல்.

    குணச்சித்திர வேடங்களைத் தனக்கேயுரிய தனித்தன்மையுடன் மிளிர வைத்த ஏ.வி.எம் ராஜன் அவர்களின் பாத்திரம் பங்கு பற்றும் ஒரு பாடல் காட்சி.

    தரிசனம் எனும் படம். .வி.எம் ராஜன் அவர்கள் இரட்டை வேடமேற்று நடித்த ஒரே ஒரு திரைப்படம்.

    இத்திரைப்படத்தின் மற்றொரு சிறப்பம்சம் இதன் இசையமைப்பாளர் சிறந்த பாடகியான சூலமங்கலம் ராஜேஸ்வரி என்பதே !

    அற்புதப் பாடகர் அமரர் ஐயா டி.எம்.எஸ் அவர்களும் எல்.ஆர்.ஈஸ்வரி அம்மா அவர்களும் இணைந்து குரல் கொடுத்த பாடலிது.

    இல்லறத்துக்குள் துறவறத்தைப் புகுத்த முடியுமாஎனும் கேள்விக்கு முடியும் என ஆன்மீக அறிவியலின் மூலம் பதிலளித்திருக்கிறார் கவியரசர்.

    எங்கே பாடலைப் பார்ப்போமா ?

    விரக தாபத்தில் துடிக்கும் ஒரு பெண்ணின் நிலையைஇல்லற சுகத்தின் அனுபவத்திற்கு ஏங்கும் ஒரு பெண்ணின் நிலையை விரசமின்றி வழங்குகிறார் கவியரசர்.

    மாலை நேரத்தை ஒரு பெண்ணின் காதல் மயக்கத்திற்கான காலம் என்று கூறுவதன் மூலம் ஒரு பெண் தன் மனநிலையைகாதல் தாபத்தை ஆணிடம் கூறுவதாகக் கவியரசர் வடித்திருக்கும் வரிகள்.

    பெண்இது மாலை நேரத்து மயக்கம்
    பூமாலை போல் உடல் மணக்கும்
    +
    இதழ் மேலே இதழ் மோதும்
    அந்த இன்பம் தோன்றுது எனக்கும்
    இது மாலை நேரத்து மயக்கம்

    அதைக் கேட்டதும் அதற்கான ஆணின் பதில் எவ்வாறு இருக்கும்?

    சாதாரண மனநிலையைப் பார்த்தால் நெருப்பிடம் பஞ்சு என்னை அணைத்துக்கொள் என்று கேட்பது போலத் தென்படும்.

    இங்கேதான் கவியரசரின் ஆன்மீக அறிவின் தாக்கம் வெளிப்படுகிறது.

    வாழ்க்கையைத் தத்துவ ரீதியில் பார்க்கும் அந்த ஆணின் பதில் எப்படியிருக்கிறது ?

    ஆண்:இது காலதேவனின் கலக்கம்
    இதை காதல் என்பது பழக்கம்
    ஒரு ஆணும் ஒரு பெண்னும்
    பெறப் போகும் துன்பத்தின் துவக்கம்
    இது காலதேவனின் கலக்கம்

    ஆனால் அவள்தான் விரக தாபத்தில் தவிக்கிறாளேஅவனுடைய தத்துவ வார்த்தைகளில் ஆற்றுப்படுத்தக்கூடியதா அவளுடைய காதல் தாபம்.

    பனியும் நிலவும் பொழிகிறதாம் அந்தப் பொழுது எப்படி இருக்கும் ?

    காதல் செய்வதற்கு மிகவும் ஏதுவான ஒரு மென்மையான பொழுது என்பதை அக்காதல் வயப்பட்ட பெண் கூறுவதாகக் கவியரசர் யாத்த வரிகளைப் பார்ப்போம்.

    பனியும் நிலவும் பொழியும் நேரம்
    மடியில் சாய்ந்தாலென்ன

    பசும் பாலை போல மேனி எங்கும்
    பழகிப் பார்த்தாலென்ன?

    ஏக்கத்தோடு கேட்கிறாளாம் அந்தப் பெண்.

    அதற்கு அந்த ஆணின் ஆன்மீகம் சார்ந்த பதிலை எத்தனை அழகாக எடுத்து இயம்பியிருக்கிறார் கவியரசர் பாருங்கள்.

    உடலும் உடலும் சேரும் வாழ்வை
    உலகம் மறந்தாலென்ன
    தினம் ஓடியாடி ஒயுமுன்னே
    உன்மை உணர்ந்தாலென்ன

    வெறும் உடல் மயக்கத்தால் சேர்வதுதான் காதல் என்று வாழ்க்கை கூறியதா என்னஇதுவெல்லாம் வெறும் மாயை தானென்று எப்போது உணரப் போகிறோம் என்று கேட்கிறான் போலும்.

    காதலுக்கும் ஆன்மீகத்துக்கும் நடக்கும் விவாதமல்லவாஅவளைப் பொறுத்தவரையில் அவளுக்கு அவளுடைய அந்தப் பருவத்தில் தேவையானது காதல் தானே விட்டுவிடமாட்டாளே சும்மா.

    உறவுக்கு மேலே சுகம் கிடையாது
    அணைக்கவெ தயக்கமென்ன

    என்று விடுகிறாள் .

    அவனும் தனது நிலையிலிருந்து இறங்கி வருவதாயில்லை அவனது பதிலைப் பார்ப்போம்.

    இது ஒட்டை வீடு ஒன்பது வாசல்
    இதற்குள்ளே ஆசையென்ன

    போட்டானே ஒரு போடுவெறும் ஒன்பது ஓட்டைகளைக் கொண்ட ஒரு கூடுதானே எமது உடம்புஇந்த மூச்சுக்காற்று அந்த ஒன்பது ஓட்டைகளில் ஒன்றால் வெளியேறிவிட்டால் பின்பு விழுந்துவிடப் போகிறோம். இதற்குள்ளே ஏன் வீணாக ஆசை கொள்கிறாய் என்கிறான்.

    அவளோ இலேசுப்பட்டவள் இல்லைதன்னுடைய வாதத்துக்குத் தேவையான ஆதாரங்களை வைத்துக்கொண்டுதான் தான் விரக தாபத்தின் வீரியத்தைத் தர்க்கம் செய்கிறாள்.

    ஆனானப்பட்ட முனிவன் அவன் கூட ஒரு அழகு மோகினியின் வடிவில் மயங்கிய பூமி ஐயா இதுஇதன் முன்னே நீ எல்லாம் என்ன சும்மா ஆன்மீகப் பிதற்றல் செய்கிறாய் என்கிறாள்.

    முனிவன் மனமும் மயங்கும் பூமி
    மோக வாசல் தானே
    தினம் மூடி மூடி ஓடினாலும்
    தேடும் வாசல்தானே

    ஆகா ஆன்மீக வழியாக வந்து என்னைத் தாக்குகிறாளே என்ற அங்கலாய்ப்போடு அவனின் பதில் வெளிப்படுகிறது.

    பாயில் படுத்து நோயில் விழுந்தால்
    காதல் கானல் நீரே
    இது மேடு பள்ளம் தேடும் உள்ளம்
    போகும் ஞானத் தேரே

    ஏதோ மரணம் எனும் கதவு எமக்குத் திறக்காது என்பது போலல்லவா பேசுகிறாய் பெண்ணே நோய் எனும் ஒரு வலை எம்மைப் பிடித்துப் பிணைத்துவிட்டால் பாயில் விழுவது காதல் செய்வதற்காக அல்ல அதை மறந்துவிடாதே என்கிறான்

    என்னையே தருவதற்குச் சித்தமாக இருக்கிறேன் என்று என் காதலை வெளிப்படுத்தியும் பணிய மாட்டேன் என்கிறானே சரி நானாவது பணிந்து போய் விடுவோம் என்று எண்ணுகிறாள் போலும்

    இல்லறம் கேட்டால் துறவறம் பேசும்
    இதயமே மாறி விடு

    நான் காதலைக் கேட்கிறேன். நீயோ ஆன்மீக வாசலைக் காட்டுகிறாய். உனது இதயத்தை எனக்காக மாற்றிக்கொள்ள மாட்டாயாஎன்று தனது கடைசி ஆயுதமான கெஞ்சலை எடுத்து விடுகிறாள்.

    ஆன்மீகத்தின் அறிவியலின் உச்சத்தில் இருக்கும் அவன் இதையெல்லாம் கடந்தவனாயிற்றே. அவனது இதயம் இதற்கெல்லாம் மசிந்து விடுமா என்ன ?

    இது ஆடி ஓடிச் சாய்ந்த தென்னை
    உன்னை நீ மாற்றி விடு

    நான் உலகத்தின் அனைத்துப் பாதைகளிலும் பயணித்து அனுபவங்களைச் சேகரித்தவன்ஆன்மீகமே எனது வேதம் நான் மாறப் போவதில்லை. நீ உன்னை மாற்றிக்கொள் என்கிறான் அவன்.

    கவியரசர் கண்ணதாசனுக்கு இத்திரைப்படத்தில் காட்சியைக் கொடுத்து, அதற்குக் கேட்ட பாடலுக்கான வரிகளை யாத்துக் கொடுத்துள்ளார்.

    இங்கே நான் சொன்ன விளக்கங்களும் அந்தத் திரைப்படத்துக்கான காட்சியின் விளக்கமும் மாறுபடலாம்கவியரசரின் ஆன்மீக அறிவியலின் ஆழத்தைத் தொட்டுக் காட்டுவதற்காகவே நான் எனது விளக்கங்களை குறிப்பிட்டேன்.

    மீண்டும் சந்திப்பேன்.

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • கவியரசர் கண்ணதாசனும் ஆன்மீக அறிவியலும் – 7

    கவியரசர் கண்ணதாசனும் ஆன்மீக அறிவியலும் – 7

    சக்தி சக்திதாசன்

    கவியரசர் கண்ணதாசன் தமிழ்ப் பெருங்கடல் .

    பள்ளியில் படிக்காதவற்றைத் தன் வாழ்க்கையில் படித்தார். வாழ்க்கை அனுபவங்களை உள்ளத்திலே நூலாக்கினார்.

    தமிழைச் சுவைத்தார். தான் சுவைத்தவற்றைப் பாடல் வரிகளாக்கி நாமெல்லாம் சுவைப்பதற்கு வழி சமைத்தார்.

    வாழ்வின் சூழல்களுக்கு அவருக்குக் கொடுக்கப்பட்ட காட்சிகளின் வெளிப்பாட்டுக்கு பாடல் வரிகளை அள்ளி வீசினார்.

    காதலாகட்டும், வீரமாகட்டும், சோகமாகட்டும் தனது பாடல் வரிகளிலே ஆங்காங்கு ஆன்மீகத்தைப் புதைத்து வைத்தார்.

    இந்தப் பதிவினிலே நாம் பார்க்கப் போகும் பாடல், கவியரசரின் அருமையான பாடல்.

    “பார்த்தால் பசி தீரும் ” எனும் படம். இதிலே நடிகர் திலகம் சிவாஜி கணேசனும், காதல் மன்னன் ஜெமினி கணேசனும் நடித்துள்ளார்கள்.

    இவர்கள் இருவரும் ஒன்றாக இரண்டாவது உலக யுத்தத்தில் பங்கு பெறும் ராணுவ வீரர்களாக நடித்திருப்பார்கள்.

    இடம்பெற்ற பல சிக்கல்களினால் தெரிந்த உண்மையைச் சொல்ல முடியாத ஒரு நிலைக்கு நடிகர் திலகம் தள்ளப்படுகிறார்.

    அவரது இந்த நிலையை விளக்கும் பாடல் ஒன்றினை அவர் பாடுவதான காட்சிக்குப் பாடல் வரிகளை கவியரசர் யாத்திருந்தார்.

    பாடல் ” உள்ளம் என்பது ஆமை ” , டி.எம்.எஸ் ஐயா அவர்கள் அற்புதமாகப் பாடியுள்ளார்.

    உள்ளம் என்றால் என்ன என்பதை விளக்கும் வகையில் கதாசிரியர்கள், கவிஞர்கள் பலரும் வித்தியாசமான விளக்கங்களை அள்ளி வீசியுள்ளார்.

    மலர் என்றார்கள். ஆனால் அந்த உள்ளம் மலர்வதும் தெரியாது, உதிர்வதும் தெரியாது. வேறு சிலரோ அலையடிக்கும் கடல் என்றார்கள். ஆனால் அந்தக் கடல் எப்போது பொங்கிப் பிரவாகிக்கும் என்று சொல்ல முடியுமா ?

    உள்ளம் குரங்கு போன்றதென்றால் மரத்துக்கு மரம் தாவும் செயல் போல மனமும் அலைபாய்ந்து கொண்டிருக்கும்.

    ஆனால் நாயகன் தன் சூழலில் மனத்துக்கு ஒரு கட்டளை இடுகிறான். அதாவது அது நினைப்பதை வெளியே சொல்ல முடியாத நிலை.

    இங்கே கவியரசர் உள்ளத்தை ஆமைக்கு ஒப்பிடுகிறார். ஆமை என்ன செய்யும்? ஆபத்தைக் கண்டவுடன் மெதுவாகத் தன் தலையை ஓட்டுக்குள் இழுத்துக் கொண்டு விடும்.

    பாதுகாப்புக்கு மட்டுமல்ல சோர்விலோ இல்லை தளர்விலோ இல்லை அயர்விலோ கூட உள்ளே தான் ஓட்டுக்குள்ளே ஒதுங்கிக்கொள்ளும்.

    உண்மையைப் பேசுவதனால் யாருக்கும் எந்த நன்மையும் ஏற்படாது. பாதிப்புத்தான் அங்கு ஏற்படும் எனும் போது அந்த உண்மையை நெஞ்சிலே தாலாட்டுப் பாடி தூங்கத்தானே வைக்க முடியும்.

    இது எத்தகைய ஆன்மீக அறிவியலின் அடித்தளத்தைக் கொண்டிருக்கிறது.

    உள்ளம் என்பது ஆமை – அதில்
    உண்மை என்பது ஊமை
    சொல்லில் வருவது பாதி – நெஞ்சில்
    தூங்கிக் கிடப்பது நீதி

    என்கிறார் கவியரசர். கவியரசருக்கு நிகர் கவியரசரே தான்.

    கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்பது அன்றிலிருந்து இன்றுவரை எமக்குள்ளே விவாதிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.

    இந்தக் கேள்வியைச் சாதுரியமாக எம்மை.நோக்கியே திருப்பி விடுகிறார் கவியரசர்.

    கருங்கல்லொன்று நாம் போகும் பாதையில் கண்களில் தட்டுப்படுகிறது, ஒரு கல் கிடக்கிறது என்று சாதாரணமாக எடுத்துக்கொண்டு அதைக் கடந்து சென்று விடுகிறோம்.

    அதே கல் ஒரு கைதேர்ந்த சிற்பியின் கைகளில் கிடைக்கிறது. ஆன்மீக உணர்வு கொண்ட அவன் அதைச் செதுக்கி அதனுள்ளிருக்கும் ஒரு தெய்வத்தின் உருவத்தை வெளிக்கொணர்கிறான்.

    அந்தச் சிலை ஆலயத்தின் கருவறைக்குள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

    அதைக் கல் என்று கடந்து சென்றவர்கள் இப்போ ஆலயத்தினுள் கருவறையின் முன் நின்று தெய்வமென்று வணங்குகிறார்கள்.

    திருமூலரின் வரிகளில் இதை அழகாக இரு வரிகளுக்குள் அடக்கியிருப்பார் திருமூலர்.

    “மரத்தை மறைத்தது மாமத யானை
    மரத்தில் மறைந்தது மாமத யானை”

    என்பார் திருமூலர்.

    இவை மிக இலகுவாக பாமரனுக்கும் புரியக்கூடிய எளிமையான வரிகளில் பதிப்பதுதானே கவியரசரின் முழு ஆற்றலே! விடுவாரா சும்மா?

    இங்கே சூழலின் தன்மைகளினால் உண்மையைப் பகிர முடியாமல் தவிக்கும் நாயகன் ஆன்மீகப் பின்னணியில் தன் தன்மையை விவரிக்கிறான்

    தெய்வம் என்றால் அது தெய்வம் – அது
    சிலை என்றால் வெறும் சிலைதான்
    உண்டென்றால் அது உண்டு
    இல்லை என்றால் அது இல்லை

    இதைவிட அர்த்தம் பொதிந்ததாகவும், எளிமையாகவும் அன்றாட வாழ்வுச் சிக்கல்களையும் ஆன்மீகத்தையும் யாரால் இணைக்க முடியும்?

    இதை எவ்வாறு அவன் தன் நிலையைச் சித்திரிப்பதற்கு உபயோகிக்கிறான் ? என்று வாசகர்கள் எண்ணக்கூடும்.

    இந்தத் திரைப்படத்தின் கதைப் பின்னனியை அறிந்திருந்தால் இலகுவாகப் புரியும்.

    சந்தர்ப்பச் சூழ்நிலையால் தீயவனாக எண்ணப்படும் அவன், உண்மையைச் சொன்னால் பலருடைய வாழ்வு பாதிக்கப்படும்.

    ஆனால் அதே இடத்தில் அவன் நல்லவன் என்பதை அறிந்தோரும் உண்டு.

    அவனை நல்லவன் என்று பார்த்தால் நல்லவனே! தீயவன் என்று பார்த்தால் தீயவனே !

    இதையே அழகாக ஆன்மீக வரிகளில் விளக்கும் கவியரசரின் ஆன்மீக அறிவியலே அற்புதம்தான்.

    அடுத்த சரணத்தில் எதை வைக்கப் போகிறார் ? பார்ப்போம்

    தண்ணீர் தணல் போல் எரியும் – செந்
    தணலும் நீர் போல் குளிரும்
    நண்பனும் பகை போல் தெரியும் – அது
    நாட்பட நாட்படப் புரியும்

    எங்காவது தண்ணீர் சாதாரணச் சூழலில் தணலைப் போலச் சுடுமா?

    இல்லையெனில்

    தணலாகத் தகித்துக் கொண்டிருக்கும் விறகுக் கட்டை குளிர் நீரைப் போலக் குளிருமா ?

    நடக்கும் என்கிறார். அதாவது இக்கதாநாயகன் சூழ்நிலையால் பாதிக்கப்படுவதால் அவனுள் எழும் உணர்வுகளின் தாக்கத்தை அவற்றுக்கு ஒப்பீடு செய்கிறார் எம் கவியரசர்.

    அது ஏன் நடக்கிறது? ஏனென்றால் காலம் அவனின் நண்பனுக்குக் கூட அவனைப் பகையாளியாகக் காட்டுகிறது.

    ஆனால் அந்நாயகன் உண்மையின் மீதும் நல்வினை விதைத்தோர் நல்வினையையே அறுவடை செய்வார் என்பதில் இன்னும் அசையாத நம்பிக்கையோடு பொறுமையாக இருக்கிறான் என்பதை அருமையாகக் குறிப்பிட்டுள்ளார்.

    இதையே ,
    அது
    நாட்பட நாட்படப் புரியும் என்கிறார்.

    இங்கு இதை ஒரு திரைப்படச் சூழலுக்கு எழுதப்பட்ட பாடல் என்று பார்ப்பதோடு அன்றாடம் வாழ்க்கைச் சிக்கலுக்குள் சிக்கித் தவிக்கும் பலரும் ஆன்மீக அறிவியலின் அடித்தளத்தில்.இதனைப் பார்ப்பதன் மூலம் மனத்தின் சாந்திக்கு வழி வகுக்கலாம்.

    இங்கேதான் கவியரசரின் ஆன்மீக அறிவியல் மேலோங்குவதை நாம் தெளிவாக அறிந்துகொள்ளலாம்.

    ஆத்திகம், நாத்திகம் எனும் பேதங்களைக் கடந்த ஓர் ஆன்மீக அறிவியலின் அவசியத்தைப் புரிய வைக்கிறார்.

    மீண்டும் அடுத்த பாகத்தில்
    சக்தி சக்திதாசன்

    Share
  • ஆன்மீக அறிவியலும் கவியரசர் கண்ணதாசனும் – 6

    ஆன்மீக அறிவியலும் கவியரசர் கண்ணதாசனும் – 6

    வாழ்க்கை என்பது நாம் அனைவரும் எண்ணியது போல நடப்பது இல்லை.

    ஏதேதோ இலட்சியங்களை வகுத்துக்கொண்டு எமது வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கினாலும் அது அனைத்தையும் அடைந்துவிடுவது என்பது முடியாத காரியம்.

    ஓட்டப் போட்டியில் ஓடும்போது இருவர் ஒரே கோட்டில் ஆரம்பித்தாலும் ஓட்டத்தில் திறமை மிக்கவர் யாரோ அவர் வென்று விடுகிறார்.

    வென்றவர் திரும்பி, தோற்றுப் போனவரைப் பார்த்து எள்ளி நகையாடுவது ஓட்டப் பந்தயத்தில் வேண்டுமானல் நிகழலாம் ஆனால் வாழ்க்கை எனும் ஓட்டப் பந்தயத்தில் ஒருமுறை ஜெயித்தவர் எப்போதும் ஜெயித்துக் கொண்டிருப்பார் என்பதுவோ இல்லையானால் தோற்பவர் எப்போதும் தோற்றுப் போவது என்பதோ விதி அல்ல.

    வாழ்க்கை எனும் பயணத்தில் அனுபவங்களை அள்ளிப் பருகியவர் எமது கவியரசர்.

    வாழ்வின் பாடங்களை ஆன்மீகப் பார்வை கலந்து எமக்கு அள்ளித் தருவதில் கவியரசர் கண்ணதாசனுக்கு நிகர் அவரே தான்.

    ஆன்மீகத்தின் உண்மை வடிவம் இனம், மதம், மொழி எனும் அனைத்துப் பேதங்களுக்கும் அப்பாற்பட்டது.

    வாழ்வின் நிகழ்வுகளின் யதார்த்தமும் அத்தகைய எல்லைக் கோடுகளைக் கடந்த ஒரு ஆன்மீகப் பயணத்தை ஒத்ததே.

    நாமனைவரும் ஏதோ ஒரு நோக்கத்திற்காக இவ்வுலகத்தில் பிறப்பெடுக்கிறோம்.

    பிறப்பின் நோக்கத்தை பிறந்ததும்  மறந்து விடுகிறோம். மறந்ததை நினைவூட்ட மூச்சின் துணை கொண்டு தியானத்தின் துணையோடு ஆன்மாவைத் தொடவேண்டும்.

    இந்தத் தேடலின் வழி செல்லும்போது கவியரசர் கண்ணதாசன் தன்னுடைய பாடல்களில் ஏதாவது ஒரு வரியிலாவது ஆன்மீகத்தைப் புதைத்து வைத்திருப்பார்.

    அந்த முத்துகளைக் குடைந்து அவர் பாடல்களுக்குள் தேடுவதற்கான தேடல் கூட ஆன்மீகப் பாதையே !

    எதிர்காலம் எனும் 1970ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம்.

    ஜெமினி கணேசன், ஜெய்சங்கர் நடித்து வெளிவந்த படம்.

    கவியரசர் வரிகளுக்கு எம்.எஸ்.வி. ஐயா உயிரூட்ட, டி.எம்.எஸ். ஐயா அவர்களின் குரல் வளத்தில் ஒலித்த அற்புதமான பாடலிது.

    ஆன்மீகப் பாதயின் இலக்கின் திசைகாட்டும் பலகை போல எமக்குள் எம்மைப் பயணிக்க வைக்கும் வரிகள்.

    சிந்தனைச் சக்கரத்தைச் சுழற்றி எம்மை நாமே புடம் போட்டுப் பார்க்க வைக்கும் ஆழ்ந்த கருத்துக் கனத்துடன் நெஞ்சத்தை நிறைக்கும் வரிகள்.

    கவியரசருக்கே உரித்தான காட்சிக்கான பாடலிது என எண்ணத் தோன்றும் வகையில் யாத்திருக்கிறார் இவ்வரிகளை

    அள்ளித் தருகிறார் பாருங்கள் அவர்தம் வரிகளை.

    கல்லுக்கு நீதி சொல்ல முடியாது – வெண்
    கானலில் மீன் பிடிக்க முடியாது
    பாறையில் நெல் விதைக்க முடியாது – உன்
    பாவத்தில் வந்த இன்பம் நிலைக்காது
    உன் வாழ்வெல்லாம் வாழ்வல்ல
    என் தாழ்வெல்லாம் தாழ்வல்ல

    ஓட்டப் பந்தயத்தில் ஜெயிப்பது போலல்ல வாழ்வில் இன்று நீ ஜெயித்தது போல் தென்படலாம் ஆனால் பொறுத்திரு மகனே எனக்கும் ஒரு காலம் வரும் என்று கூறுவது மட்டுமல்ல பாவத்தின் மூலம் அடையும் வெற்றி என்பதன் உதாரணமாக என்னவெல்லாவற்றையும் எடுத்து வீசுகிறார் பாருங்கள்.

    வாழ்வின் உச்சத்திலிருக்கும் போது கீழேயிருப்பவர்களை உதாசீனம் செய்யக் கூடாது என்று அழகாகப் புரிய வைக்கிறார்.

    ஆற்றுக்குள் நாணல் இட்டால்
    காட்டுக்குள் ஆட்டை விட்டால்
    என்னவென்று முடிவாகும்
    ஆசையை முன்னே வைத்துத்
    தர்மத்தை பின்னே வைத்தால்
    என்னென்ன விளைவாகும்

    ஆற்றிலே வீசப்பட்ட நாணல் அவ்வாற்று வெள்ளத்தோடு அடித்துச் செல்லப்படுவது போலத்தான் ஆசை எனும் வெள்ளத்துக்கு முதலிடம் கொடுப்போர் அடித்துச் செல்லப்படுவார்கள் என்பதையும், காட்டுக்குள் தனியே விடப்பட்ட ஆடு எப்படி ஒரு புலிக்கோ அன்றிச் சிங்கத்துக்கோ இரையாவது போல் தர்மத்தை மதிக்காமல் அதர்மம் எனும் காட்டுக்குள் நுழைபவரும் அவ்வாட்டின் நிலையை அடைவார்கள் என்று சொல்கிறாரோ எம் வித்தக வினைஞர்.

    வாழ்வென்பது ஒரு ஆறானால் அதிலே காலத்தின் கோலத்தால் நாணலைப் போல நாம் வீசப்படலாம் அப்போ மனிதாபிமானம் மிக்கவர்களின் கடமையென்ன என்று சிந்திக்க வைக்கும் முயற்சியாக உதிக்கப்பட்ட வரிகளிவை.

    நாடகமேடை ராஜாவானால்
    அங்கென்ன அதிகாரம்
    நாணயமாக வாழ்வதில்தானே
    யாருக்கும் எதிர்காலம்
    உன் வாழ்வெல்லாம் வாழ்வல்ல
    என் தாழ்வெல்லாம் தாழ்வல்ல

    நாளுக்கு நாள் மாறிடும் இவ்வுலகம் எனும் நாடகமேடையில் நான் செல்வந்தன் என்று எப்படி இறுமாப்புக் கொள்வது ? அதுகூட ஒரு நாடக மேடையில் ராஜா வேஷம் போடுவது போல ஒரு மாயைதானே ! அகங்காரம் கொண்டவர் தான் இந்த வேசத்தில் கூட அதிகாரத்தைக் காட்டுவார்கள் என்கிறார் எம் கவியரசர். ஒரு மனிதனின் செல்வாக்கும் செல்வந்தத்தனமும் அவன் காட்டும் நாணயமிக்க நடத்தையில் என்கிறார் தமிழன்னையின் தவப்புதல்வன்

    ஓடத்தைப் பார்த்த பின்னும்
    வெள்ளத்தில் நீந்திச் சென்றால்
    சொந்தத்தில் அறிவேது ?
    பட்டுத்தான் தேறுமென்றால்
    கெட்டுத்தான் மாறுமென்றால்
    புத்திக்கு விலையேது

    ஒரு மன்னிதனுக்கு இதுதான் சரியான வழி என்று காட்டலாமே தவிர அவனை அவ்வழியில் தள்ளி விட முடியாது. அதை அழகாக எவ்வளவு எளிமையாக ஓடத்தைக் கண்டும் நீந்தித்தான் போகிறான் என்று எடுத்தியம்புகிறார் கவியரசர். இத்தகைய வரிகள் அவர் எண்ணத்திலிருந்து சுரக்க வேண்டுமானல் எத்தனை குடம் குடமாக அனுபவநீரை அவர் அள்ளிக் குடித்திருக்க வேண்டும் ?

    “ இப்படித்தான் வாழவேண்டும் என்று சொல்லும் யோக்கியதை எனக்குண்டு ஏனெனில் எப்படியெல்லாம் வாழக் கூடாதோ அப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறேன்” என்று சொல்லும் தைரியம் கொண்டவர் எம் கவியரசர். அதனால் தான் என்னவோ அவர் சிந்தையெல்லாம் அனுபவ முத்துகளாய் முதிர்ந்திருக்கின்றன.

    உள்ளத்தில் கோழை
    ஊருக்கு வீரன்
    இது உந்தன் நிகழ்காலம்
    உண்மையைத் தேடி
    ஓர்நாள் வந்தால்
    ஒளிவிடும் எதிர்காலம்
    உன் வாழ்வெல்லாம் வாழ்வல்ல
    என் தாழ்வெல்லாம் தாழ்வல்ல

    ஆகா ! எத்தனை யதார்த்தமான ஒரு கருத்தை இத்தனை எளிமையாய்க் கூறுகிறார். வாழ்வில் நான் கண்ட அனுபவங்களில் வீரனைப் போல் ஜனத்துக்கு மத்தியில் கத்துவோர் பலரின் உள்ளக் கோழைத்தனத்தைக் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். தனது உள்ளத்துக்கு உண்மையை மறைத்து பொய்மையாய் வாழ்பவரே முதல் கோழைகள் என்பதை ஆணித்தரமாகச் சொல்லக்கூடியவர் “வனவாசம்” , “மனவாசம்” என்று தன்னை பகிரங்கமாக அலசி எடை போட்ட கவியரசர் ஒருவரே.

    காதல் மன்னன் ஜெமினி கணேசன், பத்மினி அவர்களின் நடிப்பில் வெளிவந்த எதிர்காலம் எனும் திரைப்படத்தில் அமரர்கள்~ டி.எம்.எஸ். இன் குரலிலும், எம்.எஸ்.வியின் இசையிலும் உருவான பாடலுக்கு வரிகளைக் கொடுத்து வண்ண ஓவியத்துக்குக் கண்ணைத் தீட்டுவது போல வடித்துக் கொடுத்தவர் எம் கவியரசர்.

    என் இனிய அன்பு உள்ளங்களே ! கவியரசரின் மற்றொரு முத்துடன் உங்களைச் சந்திப்பதில் பெரு மகிழ்வடைகிறேன்.

    மீண்டும் அடுத்த பாகத்தில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • மயக்கமா கலக்கமா | கண்ணதாசன்

    மயக்கமா கலக்கமா | கண்ணதாசன்

    ‘மயக்கமா கலக்கமா’, காலத்தை வென்ற பாடல். எத்தனையோ பேருக்கு நம்பிக்கை அளித்த பாடல்; இன்றும் நம்பிக்கை அளிக்கும் பாடல். கண்ணதாசன் இயற்றி, விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில், சுமைதாங்கி படத்தில் வெளியான இந்தப் பாடலை அமிர்தராஜ் குரலில் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கோதையின் திருப்பாவை | கண்ணதாசன்

    கோதையின் திருப்பாவை | கண்ணதாசன்

    கண்ணதாசன் இயற்றிய ‘கோதையின் திருப்பாவை’ என்ற புகழ்பெற்ற பாடலை, ஆனந்த கிருஷ்ண பஜனை சபா உறுப்பினர்கள் இன்னிசையுடன் பாடுகிறார்கள். குன்றத்தூர் திரு ஊரகப் பெருமாள் திருக்கோவிலில் நடைபெற்ற பஜனை. கேட்டு மகிழுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • காலங்களில் அவன் வசந்தம் – 72ஆவது நிகழ்ச்சி

    காலங்களில் அவன் வசந்தம் – 72ஆவது நிகழ்ச்சி

    இசைக்கவி ரமணன் வழங்கும் காலங்களில் அவன் வசந்தம் – 72ஆவது நிகழ்ச்சி.

    சிறப்பு விருந்தினர் – முனைவர் சரோஜினி செல்லக்கிருஷ்ணன் (சிங்கை)

    Share
  • கண்ணனின் தாசனடா!

    கண்ணனின் தாசனடா!

    -வெ.விஜய்

    “கட்டழ கானதோர் கற்பனை ராஜ்ஜியம்”  என்கிற கண்ணதாசன் பாடலின் சந்தத்தில் எழுதியது…

    தத்துவப் பாடலும் காதல் கவிதையும்
    தந்தவன் தாசனடா – தமிழ்ச்
    சாரதி தாசனடா – கவிக்
    கத்தி எடுத்தவன் காலம் கடந்தவன்
    கண்ணனின் தாசனடா- இவர்
    கற்பனை ராசனடா

    எத்தனை ஆயிரம் செந்தமிழ்ப் பாடல்கள்
    எங்கெங்கும் வாழுகிறான் – இவன்
    ஏழையை ஆளுகிறான் – இந்த
    முத்தையன் பேச்சினில் கொட்டிக் கிடப்பது
    முத்தமிழ்க் கீதையடா – அதில்
    மூழ்குதல் போதையடா

    திங்களைப் போல்முகம் கொண்டுள மங்கையின்
    தேகத்தைப் பாடியவன் – நல்ல
    திராவிடம் சூடியவன் – சிவ
    கங்கையில் தோன்றிய காவிய நாயகன்
    காதலின் ஓடமடா – கவிக்
    காட்டினில் வேடனடா

    மொட்டவிழ் தாவரம் முன்பொரு நாளினில்
    முட்டி முளைக்கையிலே – மண்ணை
    மோதி எழுகையிலே – அதைக்
    கட்டுப் படுத்திடும் தன்மையென் றாலது
    காதலில் மட்டுமடா – கண்ண
    தாசனின் திட்டமடா

    இந்தக் கவிஞனை எய்திய வேடனோ
    என்னிறை கண்ணனடா – அவன்
    இப்புவி மன்னனடா – அவன்
    மந்திரம் செய்கையில் முந்திப் பிறந்தவன்
    மாவீரன் தாசனடா – தென்றல்
    வார்த்தையில் வீசுமடா!!

     

    Share
  • வண்ணத்தமிழ் பாட்டிசைத்த வரகவி

    வண்ணத்தமிழ் பாட்டிசைத்த வரகவி

    மரபின் மைந்தன் முத்தையா

    காலத்தின் தோள்களிலே குயிலாக உட்கார்ந்து
    கானங்கள் இசைத்தவனைப் பாடு
    காற்றுவரும் திசையெல்லாம் குளிர்ந்துவரும் அவன்பாட்டில்
    கூறியுள்ள வாழ்க்கைமுறை தேடு

    ஞானத்தின் கருவூலம் தான் என்று இருந்தாலும்
    நான் என்ற ஆணவமே இன்றி
    வானத்தின் செய்திகளை வார்த்தைகளில் வார்த்தளித்த
    கண்ணதாசக் கவியரசே நன்றி

    சூட்சுமங்கள் எத்தனையோ சொல்லி வைத்த உன் கவிதை
    சூத்திரமாய் இருக்குதய்யா வாழ்வில்
    காட்சிக்கு இலை எனிலும் கருத்தெல்லாம் நிறைந்தவனே
    கைகூப்பினோம் உனது நாளில்

    சிறுகூடல் பட்டியையோர் ஷேத்திரமாய் ஆக்கியவன்
    சிறகடித்து ஆண்டுகளும் ஓடும்
    வருங்காலம் எப்போதும் வரகவியே உன்னுடைய
    வண்ணத்தமிழ் பாட்டிசைத்தே வாழும்

    Share
  • காலமெலாம் வாழும் கண்ணதாசன்!

    மகாதேவஐயர் ஜெயராமசர்மா, மெல்பேண், ஆஸ்திரேலியா

    திரையுலகில் புகுந்தாலும் திறலுடைய சொற்கொண்டு
    பலருடைய மனமுறையப் பாடியவர் நின்றாரே
    நிலைநிற்கும் பலகருத்தைச் சுமந்துவந்த அவர்பாட்டு
    நெஞ்சமதில் எப்போதும் நிலைத்துமே நிற்கிறது!

    பட்டினத்தார் தத்துவத்தைப் பலபேரும் அறிவதற்குப்
    பலபாட்டில் தந்துநின்ற பாவேந்தன் கண்ணதாசன்
    இஷ்டமுடன் தமிழ்தந்தான் எமையென்றும் மகிழ்வித்தான்
    கஷ்டம்பல பெற்றிடினும் காலமெலாம் வாழுகிறான்!

    கருவிலே கற்பனையைக் காவிவந்த கண்ணதாசன்
    உருவிலே கம்பனாய், காளிதாசன் போலானான்
    துருவியே தமிழ்கற்றான் துணிவுடனே கவிதந்தான்
    அருமைமிகு கண்ணதாசன் அகமெங்கும் வாழுகிறான்!

    வேதக்கருத்தை எல்லாம் மிகச்சிறப்பாய்த் தமிழாக்கி
    காதினுக்குள் செலுத்துதற்குக் காரணமாய் இருந்தானே
    கீதைதனைப் படிப்பதற்கும் பாதைதனை அமைப்பதற்கும்
    போதனையாய்ப் பாவெழுதிப் போதித்தான் கண்ணதாசன்!

    Share
  • இன்பமுடன் வாழ்த்துகிறோம் (கவியரசர் பிறந்தநாளுக்கான கவிதை)

    எம். ஜெயராமசர்மா.. மெல்பேண் .. அவுஸ்த்திரேலியா 

     

    kannadashan

    திரையுலகில் புகுந்தாலும் திறலுடைய சொற்கொண்டு 

           பலருடைய மனமுறையப் பாடியவர் நின்றாரே

           நிலைநிற்கும் பலகருத்தை சுமந்துவந்த அவர்பாட்டு

           நெஞ்சமதில் எப்போதும் நிலைத்துமே நிற்கிறது !

          காதலவர் கைபட்டால் காமனுமே கலங்கிடுவான்

          தேவர்கூட அவர்பாட்டை திறமென்றே பகர்ந்திடுவார்

          சாதிமதம் காதலுக்கு தடையாதல் தகாதென்று

          சேதிசொன்ன பாடலைநாம் தினமுமே ரசித்துநிற்போம் !

          பட்டினத்தார் தத்துவத்தைப் பலபேரும் அறிவதற்குப்

          பலபாட்டில் தந்துநின்ற பாவேந்தன் கண்ணதாசன்

          இஷ்டமுடன் தமிழ்தந்தான் எமையென்றும் மகிழ்வித்தான்

          கஷ்டம்பல பெற்றிடினும் காலமெலாம் வாழுகிறான் !

          கருவிலே கற்பனையை காவிவந்த கண்ணதாசன்

          உருவிலே கம்பனாய் காளிதாசன் போலானான்

          துருவியே தமிழ்கற்றான் துணிவுடனே கவிதந்தான்

          அருமைமிகு கண்ணதாசன் அகமெங்கும் வாழுகிறான்!

          வேதக்கருத்தை எல்லாம் மிகச்சிறப்பாய் தமிழாக்கி

          காதினுக்குள் செலுத்துதற்கு காரணமாய் இருந்தானே 

          கீதைதனைப் படிப்பதற்கும் பாதைதனை அமைப்பதற்கும்

          போதனையாய் பாவெழுதி போதித்தான் கண்ணதாசன் !

          இந்துமதம் இதயத்தில் யேசுமதம் கவனத்தில் 

          எல்லோர்க்கும் ஏற்கும்படி இயற்றினான் நூலிரண்டை 

          எவர்மனமும் நோகாமல் இறைகருத்தைப் பகர்ந்ததனால்

          எல்லோரும் போற்றுகின்றார் என்றும் கண்ணதாசனையே !

          காலத்தால் அழியாத கவிதந்த கண்ணதாச

          உன்பிறந்த நாளதனை உயர்வுடனே பார்க்கின்றோம்

          அன்புநிறை உள்ளமுடன் அகம்நிறைந்த தமிழ்கொண்டாய்

          இன்பமுடன் வாழ்த்துகிறோம் என்றும்நீ எம்கவியே !

    கவியரசர் கண்ணதாசன் பற்றிய விவரங்கள்:

    கண்ணதாசன் (நன்றி: விக்கிபீடியா)

    Share