Tag: சக்திசக்திதாசன்

  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (278)

    சக்திசக்திதாசன்

     

    அன்பினியவர்களே !

     

    அன்பான வணக்கங்கள். அதற்குள் ஒருவாரம் பறந்தோடி விட்டதா? காலம் எனும் இந்தக் காற்றின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாது போலிருக்கிறதே ! எது எப்படியாயினும் இதோ இந்த வாரத்தில் இங்கிலாந்தின் செய்திகளோடு உங்களுடன் இணைவதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறேன்.

    வாரம் வந்து போன வேகம் போல எம்மிடையே ஐக்கிய அமெரிக்க இராச்சியத்தின் ஜனாதிபதி திரு டொனால்ட் ட்ரம்ப் அவர்கள் எம்மிடையே வந்து விட்டு சென்று விட்டார். அவர் அமெரிக்க ஜனாதிபதி ஆனதும் முதல் வெளிநாட்டுத் தலைவர் அவரைச் சந்திக்கச் சென்றது இங்கிலாந்துப் பிரதமர் திருமதி தெரேசா மே அவர்கள். அப்போதே இங்கிலாந்துக்கு வருமாறு அவருக்கு தெரேசா மே அழைப்பு விடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து இங்கிலாந்தில் பலமுனைகளில் இருந்து அவருக்கு எதிரான குரல்கள் கிளம்பின. அதன் எதிரொலியாக அமெரிக்க அதிபர் தான் தற்போது இங்கிலாந்துக்கு விஜயம் செய்யப்போவதில்லை என்று தனது வழமையான ட்வீட்டர் சமூக வலைத்தளத்தின் ஊடாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து “அவர் வருவாரா இல்லை மாட்டாரா?” எனும் வாதம் தொடர்ந்தது. கடந்த ஆண்டு அவர் இவ்வருடம் ஜூலை மாதம் 12ம் திகதி இங்கிலாந்து வருவதாகவும் அது தேசத் தலைவருக்கு அளிக்கப்படும் வரவேற்பாக இல்லாமல் அவர் மேற்கொள்ளும் ஒரு உத்தியோகபூர்வ விஜயமாக அமையும் என்றும் அறிவிக்கப்பட்டது. இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்று எண்ணுகிறீர்களா? தேசத்தலைவருக்கு அளிக்கப்படும் விஜயமென்றால் விமானநிலையத்தில் பிரதமரினால் சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுக்கப்பட்டு, இங்கிலாந்து மகாராணியாரோடு ஒன்றாக பிரமாண்டமான நகர ஊர்வலமும் அவ்விஜயத்தில் அடங்கும். ஆனால் இவருக்கோ விமான நிலைய வரவேற்பு இங்கிலாந்தின் வர்த்தக அமைச்சரினால் ஆடம்பரம் அதிகமின்றி அளிக்கப்பட்டது.

    திரு ட்ரம்ப் அவர்களின் விஜயம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. இதற்கான காரணங்கள் பல. அவரின் வருகையை எதிர்த்து பல முன்னணிகள், அமைப்புகள் எதிர்ப்பு ஊர்வலங்களை நடத்தத் திட்டமிட்டிருந்தன. அத்தோடு ஐக்கிய இராச்சியம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து அடுத்த வருடம் விலகிய பின்னால் வர்த்தக உடன்படிக்கையில் முதலாவதாக எதிர்பார்க்கப்படும் உடன்படிக்கை ஐக்கிய அமெரிக்காவுடன் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பு. இதைப்பற்றி நேரத்துக்கு ஒரு கொள்கை பேசும் அமெரிக்க ஜனாதிபதியின் நிலைப்பாட்டை அறிய பல அரசியல் அவதானிகளும், அரசியல்வாதிகளும், மக்களும் ஆவலாக இருந்தார்கள். இங்கிலாந்து விஜயத்தைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி ரஷ்ய ஜனாதிபதியை பின்லாந்தில் சந்திக்க இருந்தார். இங்கிலாந்தில் நடந்த நிகழ்வான ரஷ்ய முன்னாள் உளவாளியின் மீதான இரசாயன தாக்குதலுக்கு ரஷ்யாவே பொறுப்பு என்பது இங்கிலாந்தின் நிலைப்பாடு. அத்தோடு அத்தாக்குதலின் எதிரொலியாக இங்கிலாந்துப் பிரஜைகள் இருவர் அதே இரசாயன பொருளினை அறியாமல் கையாண்டதால் ஒருவர் இறந்து மற்றொருவர் தீவிர சிகிச்சைக்குள்ளாகப்பட்டுக் கொண்டிருப்பதற்கும் ரஷ்யாவே காரணம் என்று இங்கிலாந்து குற்றம் சாட்டுகிறது. இவற்றைப்பற்றி அமெரிக்க ஜனாதிபதி தனது ரஷ்ய ஜனாதிபதியுடனான பேச்சு வார்த்தையின் போது குறிப்பிடுவாரா? எனும் கேள்வி இங்கிலாந்தின் கேள்விக்குறியாக இருந்தது.

    வந்திறங்கிய அமெரிக்க ஜனாதிபதி வந்ததும் அடித்தாரே ! ஒரு செம அடி எமது பிரதமருக்கு. ஆமாம் ரெக்ஸிட் எனும் பூதத்தை ஒருவாறு ஒரு வலைக்குள் அடக்கி வைத்து வொட்டேன் என்றிருந்த எமது பிரதமருக்கு ஒரு அதிர்ச்சியாக அப்பிரெக்ஸிட்டுக்குப் பொறுப்பாக இருந்த அமைச்சர் டேவிட் டேவிஸ் பிரதமரின் ப்ரெக்ஸிட் நோக்கிய கொள்கையில் நம்பிக்கையின்றி ராஜினாமா செய்ய, அவரைத் தொடர்ந்து அவரது பாராளுமன்ற உதவியாளரும், அதைத் தொடர்ந்து புரளிகளுக்குப் பெயர்போன வெளியுறவு அமைச்சர் பொரிஸ் ஜான்சனும் இராஜினாமா செய்தார். அமைச்சரவையில் இத்தகைய ஒரு பிரிவு தோன்ற அமெரிக்க அதிபர் அக்குட்டையை மேலும் குழப்பும் முகமாக பிரதமருக்கு எதிராகவும், பொரிஸ் ஜான்சனுக்கு ஆதரவாகவும் ஒரு பேட்டியளித்தார். என்னே ஆச்சரியம் அடுத்தநாள் பிரதமருடனான சந்திப்பு முடிந்ததும் அதே அமெரிக்க அதிபர் தான் அளித்த பேட்டியை அப்படியே மறுதளித்தார். அமெரிக்க அதிபரைப் பற்றிய பலரின் அபிப்ராயத்தை அவர் நிரூபித்து விட்டார்.

    அமெரிக்க அதிபரின் நடவடிக்கைகளை மற்றுமோர் மடலில் ஆராய்வோம். இங்கிலாந்துப் பிரதமர் ஒரு அரசியல் சூறாவளியினூடாகப் பயணித்துக் கொண்டிருக்கிறார். நாட்டின் நலனை முன்னிட்டு ப்ரெக்ஸிட் எனும் நிகழ்வின் தாக்கத்தை மட்டுப்படுத்த முயல்கிறார் பிரதமர். பிரதமருக்கு பாராளுமன்றத்தில் இருக்கும் பெரும்பான்மையோ மிகவும் பலவீனமானது. ஒருபுறம் பிரெக்ஸிட் கொள்கையைத் தீவிரமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என வாதிடும் அவரது கட்சிப் பாராளுமன்றப் பிரதிநிதிகள் ஒருபுறமும், ப்ரெக்ஸிட் கொள்கையை மெதுமையானதாக்க வேண்டும் என வாதிடும் அவரது கட்சிப் பாராளுமன்ற பிரதிநிதிகள் மறுபுறமும் அவரது நிலையை மிகவும் சிக்கலுக்குள்ளாக்கி விட்டார்கள். 17,18ஆம் திகதிகளில் அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட இரு முக்கிய பிரெக்ஸிட் சம்பந்தமான சட்டமூலங்கள் பத்து வாக்குகளுக்கும் குறைவான பெரும்பான்மையினால் நிறைவேறியது. பெருமூச்சு விட்டார் பிரதமர்.

    வந்ததே சந்தது பாருங்கள் பாராளுமன்றத்துக்கான சம்மர் விடுமுறை தப்பி விட்டார் பிரதமர் செப்டெம்பர் மாதம் வரைக்கும், பொறுத்திருந்து பார்ப்போம் அரசியலில் இரண்டு வாரங்களே மிகப்பெரிய சவால் அல்லவா ?

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • கவியரசர் படைப்புகள் – ஆன்மீகக் கோணம் …. 2

    ஆகாயம், வெண்ணிலவு, கடலலைகள், ஆதவன் இவையனைத்தும் தத்தம் கடமைகளைச் சரியான நேரத்தில் சரியான வகையில் புரிகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்தி ஒழுங்கமைத்த சக்தி எது? எனும் கேள்வி பல சமயங்களில் எமது உள்ளங்களில் எழுவது சகஜம்.

    இவற்றை நடைமுறைப்படுத்த ஒரு சக்தி தேவையில்லையே! இவைகள் இயற்கையின் நிகழ்வுகளே என ஒரு சாரார் வாதிடக் கூடும்.

    அவ்வியற்கையையே நமக்கு அப்பாற்பட்ட சக்தி என்று எண்ணிக் கொள்வோமானால் அச்சக்தியை வழிபடுவதும் ஒரு இயற்கை நிகழ்வே ! .

    இத்தகைய விளக்கங்களைக் கவியரசர் மிக எளிமையான தனது பாடல்களில் புகுத்தி விடுவது அவரது அபாரமான திறமைக்கு எடுத்துக் காட்டு.

    இதோ இவ்வாரம் மற்றுமொரு இனிய கவியரசரின் பாடலுடன் உங்கள்

    முன்னே !

    சாந்தி நிலையம் என்னும் திரைப்படத்தில் பி.சுசீலாவின் இனிமையான குரலில் ஒலித்த பாடல்.

    இறைவன் வருவான் அவன்

    என்றும் நல்வழி தருவான்

    இறைவன் வருவான் அவன்

    என்றும் நல்வழி தருவான்

    அறிவோம் அவனை – அவன்
    அன்பே நாம் பெறும் கருணை
    இறைவன் வருவான் – அவன்
    என்றும் நல்வழி தருவான்

    நம்பிக்கையின் ஆதாரத்திலேதான் மனிதன் வாழ்கிறான். நம்பிக்கையற்றவர் வாழ்க்கை பாலைவனத்தைப் போன்றது. வாழ்க்கையில் பசுந்தளிர்கள் துளிர்க்க வேண்டுமானால் நிச்சயம் அங்கே நம்பிக்கை எனும் நீர் வார்க்கப்பட வேண்டும்.

    அந்நம்பிக்கையை வாரி வழங்குவது ஆன்மீக உணர்வுகளே இவ்வான்மீக உணர்வுகளின் உற்பத்தி இறைநம்பிக்கையாகும்.

    அவ்விறை நம்பிக்கையை எத்தகைய இனிமையான வரிகளுள் எளிமையாகப் புகுத்தி விட்டார் எம் கவியரசர்.

    எம் துயர் களைய இன்றைய அவலம் நீங்கி நல்லதோர் நாளை மலர நிச்சயம் இறைவன் வருவான் என்றோர் நம்பிக்கையுடன் கைகோர்த்து அவ்விறைவன் எமக்கு நல்வழியைக் காட்டுவான் என்னும் நம்பிக்கையும் சேர்ந்தே நடைபோடுகிறது.

    அவ்விறைவன் எமக்கு அருள் புரிகிறான் என்று எப்படி அறிவது எனும் கேள்விக்கு அற்புத விளக்கத்தை வாரி வழங்குகிறார் கவியரசர். எமது மனதில் துலங்கும் கருணையே இறைவன் எமக்கு அருள் புரிந்ததிற்கு அடையாளம் என்கிறார் பாருங்கள். மனிதர் மீது மனிதர் வைக்கும் அன்பின் அடிப்படையே தெய்வம் என்று கவியரசர் கூறும் எளிமையான ஆன்மீக விளக்கத்திற்கு எது ஈடாக முடியும் ?

    வண்ண வண்ணப் பூவினில்
    காயை வைத்தவன்
    சிப்பி ஒன்றின் நடுவே
    முத்தை வைத்தவன்
    வண்ண வண்ணப் பூவினில்
    காயை வைத்தவன்
    சிப்பி ஒன்றின் நடுவே
    முத்தை வைத்தவன்
    சின்னச் சின்ன நெஞ்சினில்
    பாசம் வைத்தான்
    நெஞ்சில் வரும் பாசத்தை
    பேச வைத்தான்
    சின்ன சின்ன நெஞ்சினில்
    பாசம் வைத்தான்
    நெஞ்சில் வரும் பாசத்தை
    பேச வைத்தான்
    அன்பே என்பது கோயில்
    ஆசை என்பது நாடு
    பாசம் என்பது வீடு

    இறைவன் என்பவன் தன்னை எவ்வாறு வெளிக்காட்டிக் கொள்கிறான் என்கிறார் கவியரசர், அழகான வண்ண மயமான மலர்களின் வழியே காயைக் காட்டுகின்றான், கடலின் அடித்தளத்தில் மூடியிருக்கும் சிப்பியின் உள்ளே அழகான முத்தையல்லவா காட்டித் தன் ஆதிக்கத்தை நிரூபிக்கிறான்.

    சின்னக் குழந்தைகளின் சிறிய நெஞ்சினில் பாசத்தை வைத்து தனது கோயிலை அடையாளம் காட்டுகின்றான். கள்ளமில்லா மழைகளின் வார்த்தைகளின் வழியே தனது அன்பை வெளிக்காட்டுகிறான்.

    அது மட்டுமல்ல அனைத்து மனிதர்களுக்கும் ஆன்மீக உணர்வு பொதுவானதே என்பதை எடுத்துக் காட்டுவதற்காக அன்பே கோவில் என்றும், ஆசையை நாட்டின் மீதும், பாசத்தை வீட்டின் மீதும் வைப்பதன் மூலம் ஆன்மீக வாழ்க்கையை வாழ்ந்து விடலாம் எனத் தெளிவாகப் புரிய வைக்கிறார்.

    பாசம் என்பது வீடு
    இறைவன் வருவான் – அவன்
    என்றும் நல்வழி தருவான்

    உள்ளம் என்னும் கோயிலைக்
    கட்டி வைத்தவன்
    கண்கள் என்னும் வாசலை
    தந்து வைத்தவன்
    உள்ளம் என்னும் கோயிலைக்
    கட்டி வைத்தவன்
    கண்கள் என்னும் வாசலை
    தந்து வைத்தவன்
    கண்ணில் வரும் பாதையை
    காணச் சொன்னான்
    நல்ல நல்ல பாதையில்
    போகச் சொன்னான்
    கண்ணில் வரும் பாதையை
    காணச் சொன்னான்
    நல்ல நல்ல பாதையில்
    போகச் சொன்னான்
    கண்கள் அவனைக் காண்க
    உள்ளம் அவனை நினைக்க
    கைகள் அவனை வணங்க

    உண்மையாக மனிதன் வாழ்ந்து விட்டால், அடுத்தவருக்குத் தீங்கு நினைக்காமல் வாழ்ந்திருந்தால், பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் கருணை கொண்டிருந்தால், கோவிலுக்கு ஏன் போக வேண்டும்? அவன் உள்ளமே கோவிலாகி விடாதா?

    அந்த உள்ளம் எனும் கோவிலில் வீற்றிருக்கும் இறைவனைக் காண்பது எப்படி? ஓ அதுக்குத்தானே வாசலாகக் கண்களைக் கொடுத்துள்ளான். அக்கண்களிலே வழியும் அன்பு மிகுந்த கருணை உள்ளம் எனும் கோவிலில் உள்ள தெய்வத்தைன் தரிசனத்தை கொடுத்து விடுமே !

    அப்பப்பா ! கவியரசரின் ஆழ்ந்த ஆன்மார்க வழியிலமைந்த சிந்தனையின் ஆழம் தான் என்ன?

    கண்களை கொடுத்து விட்ட ஆண்டவன் எம்மிடம் கேட்பதெல்லாம் என்ன? அக்கண்களினால் நல்ல பாதையைத் தேர்ந்தெடுத்து எம் வாழ்க்கைப் பயணத்தை எநல்ல வழியில் ஓட்டி விட வேண்டும் என்பது தானே !

    என் மந்தில் வாழும் இறைவனை கண்களை மூடித் தியானித்து , கைகளை கூப்பி வணக்கினால் உள்ளம் நல்லதையே எண்ணும், அது நல்ல வழியிலேயே செல்லும்.

    கைகள் அவனை வணங்க
    இறைவன் வருவான் – அவன்
    என்றும் நல்வழி தருவான்
    அறிவோம் அவனை – அவன்
    அன்பே நாம் பெறும் கருணை
    இறைவன் வருவான் – அவன்
    என்றும் நல்வழி தருவான்

    அன்பினிய நெஞ்சங்களே ! அனைவர்க்கும் பொதுவான இறைவன் அன்பு மனங்களில் தான் வாழுகிறான். கருணையுள்ள உள்ளங்களில் தான் கோயில் கொள்கிறான். இறைவனை வெளியே எங்கும் தேடாதீர்கள் உங்கள் உள்ளங்களிலேயே தேடுங்கள் என்பதை எளிமையாகப் பாமரனும் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் கவியரசர் தனது வரிகளில் ஆன்மீக உணர்வுகளைப் புதைத்து வைத்தது அற்புதமே !

    (மீண்டும் அடுத்த பாகத்தில்)

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • காலத்தால் அழியாக் கவிஞன்

    சக்திசக்திதாசன்

    10354728_655625571192738_5553640597757638670_n

    ஜூன் 24 எப்படி தன்னைப் பெருமையாக்கிக் கொண்டது ? இந்த தினத்தில் எத்தனையோ நிகழ்வுகள் நடந்தேறியிருக்கலாம். . எத்தனையோ கோடி மக்கள் பிறந்திருக்கலாம் அன்றி இறந்திருக்கலாம். ஆனால் இத்திகதி தமிழர்கள் அனைவரையும் தன்பால் இழுக்க வைக்கும் ஒரு மாபெரும் நிகழ்வுக்கு வித்திட்டது. ஆம் தாய்த்தமிழகம் என நாம் போற்றும் தமிழ்நாட்டில் சிறுகூடல் பட்டியில், மலையரசித் தாயின்மடியில் முத்தாக ஒரு முத்தையாவை தமிழன்னை விசாலாட்சி எனும் சிப்பியினுள் விளைய வைத்தது..

    விளைவு !

    உலகத்தமிழர்களுக்கெல்லாம் காலத்தால் அழியாத கவிஞனை ஈந்து ஜூன் 24 தன்னை உலகத் தமிழர் மனங்களில் நிலை கொள்ளும் ஒரு தேதியாக நிர்ணயித்து விட்டது. என்று நான் எழுதத் தொடங்கினேனோ அன்றே கவியரசர் கண்ணதாசனை என் மனதினில் மானசீகக் குருவாக வரித்துக் கொண்டேன். நான் எழுத்தாளனாக வேண்டும் எனும் இலட்சிய வேட்கையோடு எழுத்தாளனாகவில்லை. எழுத்து என்னையறியாமலே என்னைத் தன்வசப்படுத்திக் கொண்டு விட்டது. தமிழை நேசித்ததினால் கண்ணதாசனை நேசித்தேனா அன்றிக் கண்ணதாசனின் படைப்புகளை நேசித்ததினால் தமிழை நேசித்தேனா எனும் விவாதம் என்னுள் என் வாழ்வின் மத்திய பகுதியில் தான் நிகழ்ந்தது. அப்போது என்னுள் ஏன் இப்படி ஒரு விவாதம் என்று என்னை நானே கேட்ட போது அதற்கான விடையும் எனக்குக் கிடைத்தது. ஆம் கண்ணதாசனுக்கும், தமிழுக்கும் இருந்த பிரிக்க முடியாத பிணைப்பே எனது விவாதத்திற்கு காரணமாயிற்று என்று உணர்ந்து கொண்டேன்.

    10492612_655625301192765_47976254459603565_n

    வாலிபக் காலங்களில் மனதில் காதல் எண்ணங்கள் ஊர்வது சகஜம், ஆனால் அக்காதல் எண்ணங்களுக்கு வடிவம் கொடுப்பது அன்றைய எம் தலைமுறையில் திரைப்படப்பாடல்கள் என்பது மறுக்கப்பட முடியாத உண்மை. அத்தகைய பாடல்களில் உள்ளத்து உணர்வுகளை எளிமையாகக் கேட்கும் முதல் மாத்திரத்திலேயே புரிந்து கொள்ளக் கூடிய வகையில் அமைத்துத் தந்த வல்லமை கவியரசர் கண்ணதாசனுக்கு உண்டு என்பதே அவர்பால் அன்றைய நான் கொண்ட ஈர்ப்பு. அத்தகைய ஈர்ப்பின்பால் கவரப்பட்ட நான் காலச்சுழற்சி எனும் காற்றில் அகப்பட்ட சருகினைப் போல புலம்பெயர் தேசத்துக்கு அடித்துச் செல்லப்பட்டேன். சிறியதோர் மீன் தொட்டியில் இருக்கும் மீன் பெரும் ஆழியில் தூக்கி வீசப்பட்டால் திக்குத் திசை தெரியாமல் தடுமாறுவது போல அன்னை தந்தை எனும் பாதுகாப்பு வலையத்தினுள் இருந்து 18 வயதினில் இங்கிலாந்து எனும் பரந்த தேசத்தினுள் தூக்கி வீசப்பட்டேன் அப்போது எனக்கு என் தனிமையில் துணையாய் இருந்தது ஈழத்தில் இருந்து நான் பதிவு செய்து கொண்டு வந்திருந்த எனக்குப் பிடித்தமான திரைப்படப் பாடல்கள் தான். “தனிமையிலே இனிமை காண முடியுமா?” எனும் கவியரசரின் பாடலின் உண்மையான அர்த்தம் என்னுள்ளத்தில் புலப்படத் தொடங்கியது. கவியரசர் யாத்த பாடல்கள் ஒவ்வொன்றின் வரிகளிலும் பொதிந்திருந்த பொருளின் கனத்தை என்னெஞ்சம் உள்வாங்கத் தொடங்கியது.. எப்போது உள்ளத்தில் என் தாய்நாட்டின் பிரிவின் துயரம் தாக்கினாலும் ” எண்ணங்களினாலே பாலம் அமைத்து இரவும் பகலும் நடக்கவா” எனும் வரிகள் மனதுக்கு இதமளித்தன.

    10300436_656121441143151_5885257405195879848_n
    புலம்பெயர் வாழ்க்கையில் பல திருப்பங்களைச் சந்தித்து திசைமாறி ஓடிக்கொண்டிருந்த என் வாழ்க்கை நதியைச் சரியான வழியில் திருப்ப வழிகள் தேடித் தவித்திருந்த வேளை ஈழத்திலிருந்த என் உற்ற நண்பன் எனக்கு கவியரசரின் “அர்த்தமுள்ள இந்துமதம்” எனும் அரிய பொக்கிஷத்தின் பத்துப் பகுதிகளையும் அனுப்பி வைத்தான். அதைப்படிக்கப் படிக்க என் வாழ்வின் போக்கினில் நான் செல்லும் வழிகளின் நுணுக்கங்களை மாற்றும் மார்க்கத்தைக் கற்றுக் கொண்டேன். நான் பிறந்த கலாச்சாரத்தின்படி நானுதித்த மதத்தின் அடிப்படையை வெறுப்பதும், எள்ளி நகையாடுவதும் நாகரீகம் என்று கருதி வந்த எனக்கு “நான் ஒரு இந்து” என்று எண்ணுவதோ, கூறுவதோ மட்டும் என்னை ஒரு மதவெறியன் என்று அடையாளம் காட்டி விடாது என்று உணர்ந்து கொண்டேன். நல்ல மனிதனாக நடப்பதுவே ஒரு நல்ல இந்துவின் அடையாளம் என்று உணர்ந்து கொண்டேன். வாழ்வின் ஒவ்வொரு அசைவுகளுக்கும் விளக்கம் அளித்த கவியரசரின் எளிதான , அனைவருக்கும் புரிய வைக்கும் தமிழ்நடை என்னைக் கவர்ந்தது. கவியரசரின் பாடல்களை மட்டுமல்ல அவரின் எழுத்துக்களையும் காதலிக்கத் தொடங்கினேன். எழுத்து என்பது எனது இலக்கணச் சிறப்பையோ அன்றி இலக்கியச் செறிவையோ விளம்பரப்படுத்தும் ஆயுதமல்ல அது சாமான்ய மக்களையும் சென்றடையக்கூடிய ஒரு ஊடக ஊடுருவலாக இருக்க வேண்டியதன் அவசியத்தைக் கவியரசரின் எழுத்துக்களின் மூலம் கற்றேன் இன்னும் கற்றுக் கொண்டிருக்கிறேன்.

    அர்த்தமுள்ள இந்துமதத்தில் ஆரம்பித்த கவியரசரின் எழுத்துக்களின் சேகரிப்பு இன்று நான் எப்போது சென்னை சென்றாலும் கவியரசரின் மூன்று புத்தகங்களாவது இல்லாமல் திரும்புவது கிடையாது எனும் நிலைமைக்கு என்னை மாற்றியுள்ளது. என்னுடைய வாசிப்பு பழக்கத்தை அதிகரித்து இன்று எனது இல்லத்தில் ஒரு நூலகம் போன்று ஏறத்தாழ 500 நூல்கள் வைத்துப் படிக்கும் ஒரு நிலைக்கு உயர்த்தியுள்ளது. அது மட்டுமல்ல அவரது எழுத்துக்களின் வாசம் இன்று என்னை கவிதை, கட்டுரை, கதை என பல புனைவுகளை யாக்கும் வகையில் ஒரு எழுத்தை நேசிப்பவனாக மாற்றியுள்ளது.

    என்ன சக்திதாசன் “காலத்தால் அழியாக் கவிஞன்” எனும் தலைப்பிட்டு விட்டு தன்னுடைய எழுத்துப்பயணத்தை விவரிக்கின்றானே என்று சிலர் எண்ணக்கூடும். கவியரசர் கண்ணதாசன் ஒரு பாமரன், ஒரு சாமானியத் தமிழனின் மனதில் இத்தகைய தாக்கத்தை விளைவிக்கக் கூடியவராக இருப்பதே அவர் தமிழர் மனங்களில் என்றும் வாழ்ந்து காலத்தால் அழியாக் கவிஞராக நிலைபெறுகிறார் என்பதற்குச் சான்றாகவே எனது வாழ்விலிருந்து உதாரணங்களை எடுத்தியம்பினேன். நான் கவியரசரிடமிருந்து கற்றுக் கொண்ட முதல் பாடம் ஒரு நல்ல எழுத்தாளனாவதன் அடிப்படை சுய அலசலே என்பதுதான். அவர் என்றுமே எதையுமே தனது வாழ்வின் நிகழ்ந்த நிகழ்வுகளின் அடிப்படையில் விளக்குவதை அடிப்படையாகக் கொண்டிருந்தார்.. அதற்குச் சான்றாக அவரே

    “ நான் எப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறேனோ
    அப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறேன் ஆகையால்
    இப்படித்தான் வாழ வேண்டும் என்று சொல்லும்
    யோக்கிதை எனக்குண்டு “

    என்று மிகவும் துணிச்சலாக அடித்துக் கூறியுள்ளார். கவியரசரது 90வது பிறந்ததினத்தில் அவரை நினைவுகூறுவது எந்தன் அவா. அதை இவ்வகையில் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன்.

    உள்ளத்திலே ஒரு ஒளியாக
    உணர்வினில் கலந்த மொழியாக
    தமிழோடு கலந்திடும் கவியாக
    தாரகம் போற்றிடும் கவியரசே !

    நேற்றோடு போன பொழுதாக
    காற்றோடு கரைந்த முகிலாக
    நீறாகிப் போகும் வெறும் உடலல்ல
    நினைவோடு வாழும் உணர்வய்யா நீ !

    ஈழத்தின் வடக்குக் கோடியிலே
    இகத்தில் உதித்த பாமரன் இவனை
    தமிழோடு யாத்து கவிபாட வைத்த
    தங்கத் தமிழ்க் குருநாதன் நீயே !

    வனவாசம் போதாது என்றே
    மனவாசம் கொண்டு உன் வாழ்வினை
    சோதனை செய்து அறிவுரை தந்து
    சோதரர் பலரின் வாழ்வினை மாற்றினாய்

    அர்த்தம் உள்ள இந்து மதத்தினை
    அத்தனை இலகுவாய் அறிமுகம் செய்தனை
    ஏழையாய் உதித்து ஏணியாய் உயர்ந்தவன்
    ஏசுகாவியம் பாடி நீ பகர்ந்தனை

    பாடல்கள் ஆயிரம் பாடினாய் கவியே
    படித்தவர் நெஞ்சில் பதிந்தனை நீயே
    பொதித்திடும் கருத்துக்கள் நெருப்பினை போல
    பொசுக்கிடும் உள்ளத்தை உண்மைக் கனலாய்

    கவியரசன் உந்தன் பிறந்தநாளில் தமிழ்க்
    கண்ணதாசன் நின்னை நினைந்தொரு
    சிறிய கவிதை படைத்தவன் நான்
    சக்திதாசன் எனும் ஒரு பாமரன்

    வணக்கங்களுடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . (240)

    சக்திசக்திதாசன்

    அன்பினியவர்களே !

    அன்பான வணக்கங்களுடன் இவ்வாரம் உங்களை இம்மடல் மூலம் வந்தடைவதில் மகிழ்கிறேன்.. இங்கிலாந்து நாட்டினை வெப்பாலை கடந்த சில நாட்களாக தகிக்கப் பண்ணிக் கொண்டிருக்கிறது. என்னடா இது ? இங்கே சுட்டுப் பொசுக்கும் வெப்பத்தில் தவித்துக் கொண்டிருக்கும் எங்களுக்கு இங்கிலாந்தின் வெப்பத்தைப் பற்றி இதென்ன புதுக்கதை ! என்று அங்கலாய்ப்பது புரிகிறது. ஆனால் இங்கிலாந்து நாட்டின் சாதாரண காலநிலைகளையும், வெப்பச்சூழலையும் பொறுத்த அளவில் இது அசாதாரணமானதுவே. .நேற்றைய வெப்பநிலை வெப்பமானியில் அதியுச்சமாக 34 பாகைகளை எட்டிப்பிடித்தது./ இது இங்கிலாந்தின் ஜூன் மாத அதியுச்ச வெப்பநிலையை சுமார் 41 வருடங்களின் பின்னால் எட்டிப்பிடித்திருக்கிறது என்கிறார்கள்.

    சரி எதற்காக இந்த திடீர் வெப்பநிலையைப் பற்றிய சிலாகிப்பு ?

    unnamed (2)

    சுமார் ஒரு வாரத்துக்கு முன்னால் இங்கிலாந்தில் நடைபெற்ற ஒரு தீ விபத்தின் அகோரச் சம்பவத்தைப் பற்றிப் பகிர்வதற்காகவே ! இலண்டனில் தென்மேற்குப் பகுதியில் உள்ள “நார்த் கென்சிங்டன் (North Kensington) “ எனும் வட கென்சிங்டன் பகுதியில் அமைந்துள்ள கிறன்வெல் எனப்படும் 24 மாடி அடுக்குமாடிக் கட்டிடம் தீ பற்றியெரிந்தது. ஒரு மாடியில் உள்ள ஒரு பிளாட்டில் ஏற்பட்ட தீவிபத்தினால் இக்கட்டிடம் ஒரு தீக்குச்சி போல அகோரமாக எரிந்தது அனைவரின் மனதை துயரத்தில் ஆழ்த்தியது. கனவேகத்தில் பற்றிக் கொண்ட தீ அத்தனை விரைவாக எப்படி இத்தனை தீவிரமாக முழுக்கட்டிடத்தையும் தாக்கியது என்பது பலரையும் பயங்கரமான கேள்விக்குறியில் ஆழ்த்தியுள்ளது.

    சமீபத்தில் பத்து மில்லியன் பவுண்ட்ஸ் செலவில் மீளமைக்கப்பட்ட இக்கட்டிடத் தொடர் நவீனகால தீ தடுப்பு வசதிகளை ஏன் கொண்டிருக்கவில்லை என்பதும் கேள்வியாகவே இன்னமும் தொங்கிக் கொண்டிருக்கிறது. இக்கட்டிடத்தின் வெளிப்பகுதியை அழகாகக் காண்பிக்க பொருத்தப்பட்ட பிளாஸ்டிக் கவரிங் தீ விபத்தினைத் தடுக்கும் வகையிலானதா? என்பதும் இன்னமும் விடையில்லா வினாவாகவே இருக்கிறது. இதுவரை வெளிவந்த செய்திகளின்படி இத்தகைய பிளாஸ்டிக் கவரிங் அமெரிக்கா, சீனா போன்ற பல நாடுகளில் பாவனையிலிருந்து தடைசெய்யப்பட்டுள்ளது என்றும், அத்தகைய ஒரு பாவனைப் பொருள் மக்கள் வசிக்கும் கட்டிடத்தில் பொருத்தப்படுவதற்கு அந்நகரசபை எவ்வகையில் அனுமதி அளித்தது எனும் கேள்வியை அனைத்துப் பகுதிகளிலுமிருந்தும் மக்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். இத் தீவிபத்து இதுவரை காவு கொண்ட உயிர்களின் எண்ணிக்கை 79 ஆகும். அதைத்தவிர சுமார் 15 பேர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள், அவர்களில் சிலர் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

    ஏற்கனவே அவசியமில்லாத தேர்தல் ஒன்றை நடத்தி தனக்கிருந்த பெரும்பான்மையையும் இழந்து சிறுபான்மை அரசமைத்து குழம்பிக் கொண்டிருக்கும் பிரதமர் தெரேசா மே அவர்களை ஏழரைச்சனி ஆட்டி வைக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. இத்தீவத்தின் பின்னால் அவ்விடத்துக்கு விஜயம் செய்த பிரதமர் உத்தியோகத்தர்களையும், சில பாதிப்படைந்தவர்களையும் சந்தித்து விட்டு அவரைச் சந்தித்து தமது மனக்குறையைச் சொல்லக் காத்திருந்த பொதுமக்களை, அதாவது அக்கட்டிடத் தொடர் விபத்தில் இருந்து தப்பி வந்து வீடு, உடமைகள் இழந்தவர்களை சந்திக்காமல் திரும்பியது அவரை மிகவும் சிக்கலுக்குள் கொண்டு சென்று மாட்டிவிட்டது. எதிர்க்கட்சித் தலைவரான ஜெர்மி கோர்பன் அவர்களின் தொகி இக்கட்டிடத் தொடர் உள்ள பகுதியையும் உள்ளடக்கியதாலும் அங்கு நேரடியாக விஜயம் செய்து அங்கிருந்த மக்கள் அழுவதற்குத் தன் தோள்களைத் தந்த எதிர்க்கட்சித் தலைவரின் செயல் பிரதமரை மேலும் சங்கடத்துக்குள்ளாக்கி இருந்தது. . சரமாரியாகப் பிரதமரின் மீது அதிருப்தியளிக்கும் விமர்சனங்கள் குவிந்தன. அது மட்டுமன்றி அத்தீவத்தைத் தொடர்ந்து மீட்பு உதவிகளுக்கு பல பொதுமக்கள் உதவிகள் வழங்கி வந்தார்கள். ஆனால் அக்கட்டிடத்துக்குப் பொறுப்பாக உள்ள நகரசபையிலிருந்து ஒரு ஊழியரோ அன்றி அரசாங்கத் தரப்பிலிருந்து ஒரு உத்தியோகத்தினரோ அங்கு தென்படவில்லை.

    இந்தக் கட்டிடத்தில் வசித்தோர் பெரும்பான்மையோர் அரசியல் தஞ்சமடைந்த வெளிநாட்டவர். பெரும்பான்மையோர் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள். தாம் வாழ்வில் வசதி குறைந்தவர்கள் என்பதால் தமக்குத் தகுந்த நேரத்தில் தகுந்த உதவிகளைச் செய்ய அரச அதிகாரிகளோ அன்றி நகரசபை அதிகாரிகளோ முன்வரவில்லை என்னும் கருத்து இவர்களிடையே பரவி வந்தது. அது மட்டுமன்றி இக்கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டால் அதைத் தடுக்கக்கூடிய வசதிகளின் குறைவை இதற்கு முன்னால் எத்தனையோ தடவைகள் அரசுக்கும், நகரசபைக்கும் சுட்டிக் காட்டியும் அவர்கள் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது இவர்களது குற்றச்சாட்டாகும். இவையனைத்தும் ஒன்றிணைந்து அனைத்து மக்களையும் ஒன்று கூடிய எதிர்ப்பலையைக் காட்டும் உணர்வுக்குத் தள்ளியது. விளைவாக பாதிக்கப்பட்டோர் ஒரு பேரணி நடத்தி நகரசபைக் கட்டிடத்துக்குள் அத்துமீறி நுழைந்து போராட்டம் நடத்தினர்.

    நிலைமை தமக்கெதிராக விரைவாகத் திசைமாறுவது கண்டு பிரதமர் பாதிக்கப்பட்டோரை முன்னணிப்படுத்தும் குழுவொன்றை தனது உத்தியோக வாசஸ்தலத்தில் சந்தித்து அவர்களுக்கு உடனடியாக நட்ட ஈடாக ஓரளவு தொகையை அரசு கொடுக்கும் என்று உறுதியளித்தார். பாதிப்படைந்த மக்கள் அனைவரும் இன்னமும் குடியிருப்பு வசதிகளை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள். அரசியல் சூறாவளியோடு சேர்ந்து காலம் எனும் சுனாமியும் சேர்ந்து பிரதமரின் பதவி எனும் விளக்கை அணைக்க முற்படும் வேளையில் அதைச் சுற்றி ஒரு அரணைக் கட்டிப் பாதுகாக்க முனைகிறார் தெரேசா மே.

    இதுவரை பலியாகிய உயிர்கள் 79 இது இன்னமும் அதிகரிக்குமா ? வீடு, வாசல், உடமைகளை இழந்த மக்களுக்கு நியாயம் கிடைக்குமா? இத்தகையதோர் அடுக்குமாடிக் கட்டிடத் தொடரில் இப்படிப்பட்ட பயங்கர தீவிபத்தை இதுவரை தனது 29 வருட கால அனுபவத்தில் காணவில்லை என்றுரைத்த தீயணைப்புப் படைத் தலைவரின் அதிர்ச்சிக்குக் காரணமான இத்தீவிபத்துக்கு காரணமானவர்கள் யார் ? இத்தீவிபத்து எப்படி இத்தனை சீக்கிரம் முழுக்கட்டிடத்தையும் வியாபித்தது? இக்கேள்விகளுக்கான விடைகள் பிரதமர் தெரேசா மேயினால் அறிவிக்கப்பட்ட விசாரணைக்குழுவின் விசாரணையால் வெளிப்படுமா? .

    அரசியல் எனும் சதுரங்கப் பலகையில் இது ஒரு விளையாட்டாக இருக்கலாம். ஆனால் எரியுண்ட அந்தக் கட்டிடத்தில் தமது உறவினர்களைத் தீக்கு இரையாகக் கொடுத்தவர்களும், தமது உடமைகளைப் பறிகொடுத்து வீதியில் நிற்பவர்களும் இதைத் தமது வாழ்வின் முக்கியக் கட்டம் என்றே எதிர்நோக்குகிறார்கள். அவர்கள் அனைவரினதும் வாழ்வில் ஓரளவாவது நிம்மதி கிடைக்க பிரார்த்திப்பது ஒன்றே எமக்குத் தெரிந்த வழியாகிறது.

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (138)

    சக்திசக்திதாசன்

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்கள்.

    2015ம் ஆண்டில் இரண்டாவது மடல் உங்களுக்கு வரைந்து கொண்டிருக்கிறேன். காலத்தின் வேகத்திற்கு எம்மால் ஈடு கொடுத்து ஓட முடிகிறதா ?

    கோடை, வசந்தம், மாரி என வருடங்கள் தமது விலாசங்களுக்கூடாக பறந்தோடிக் கொண்டிருக்கின்றன.

    வருடங்கள் பறந்தோடினால் என்ன? என்று வாளாவிருக்க முடியாமலிருக்கிறதே ! வருடங்களோடு சேர்ந்து உனது வயதும் உருண்டோடிக் கொண்டிருக்கிறது என்று எமக்கும் மேலே இருக்கும் ஒருவன் நரை முடிகள் மூலம் எமக்கு ஞாபகமூட்டிக் கொண்டிருக்கிறான்..

    1975ம் ஆண்டு ஜனவரி மாதம் 6ம் திகதி எனது தந்தையின் அரவணைப்போடு இலங்கையின் தலைநகராம் கொழும்பில் அமைந்துள்ள ஜக்கிய இராச்சியத்தின் தூதரகத்தினுள் மாணவன் நுழைவு அனுமதி பெறுவதற்காக நுழைந்தவன் நாற்பது வருடங்களின் பின்னே வல்லமை எனும் அருமையான இணைய இதழில் அந்நாட்டு அனுபவங்களை இனிய வாசக உள்ளங்களுடன் பகிர்ந்து கொண்டிருப்பேன் என்று எண்ணியிருப்பேனா?

    1975ம் ஆண்டு ஜனவரி மாதம் 29ம் திகதி புதன்கிழமை பிரித்தானிய விமானசேவையில் புறப்பட்டு 30ம் திகதி வியாழக்கிழமை இந்த இங்கிலாந்து மண்ணில் கால் பதித்தேன்.

    அன்னை, தந்தை எனும் பாதுகாப்புக் கவசங்களுக்கிடையில் எனது 18 வருட காலத்தைப் பயமின்றி எந்த விதப் பொறுப்புக்களுமின்றிக் கழித்த நான் அறியாத, புதிய மொழியில் பேச வேண்டிய கட்டாயத்திற்கு என்னை உள்ளாக்கி எதற்காக என் தாய்மண்ணை விட்டு புலம் பெயர்ந்தேன் ?

    இது என்னை நான் பல சமயங்களில், பல தடைவைகள் கேட்டுக் கொண்ட கேள்வி.

    ஈழத்தை விட்டுப் புலம்பெயர்ந்தவர்கள் வரலாற்றில் 1983க்கு முன், 1983க்குப் பின் எனும் காலகட்டம் உண்டு.

    அரசியல் காரணங்களுக்காக, உயிருக்கு உத்தரவாதம் அற்ற நிலையில், உரிமை மறுக்கப்பட்ட நிலையில் இடம்பெயர்ந்தோர்கள் ஏராளம்.

    ஆனால் நான் என் புலம்பெயருக்கு அரசியல் முலாம் பூசுவது முறையல்ல. கல்வி கற்பதற்கு சகல வசதிகளையும் செய்து தந்த என் அன்னை, தந்தையின் அன்பு அர்ப்பணிப்பின் ஆழத்தை புரிந்து கொள்ள முடியாத முட்டாளாய் அந்நாளைய வாலிப முறுக்குகளுக்கு உள்ளாகி காலத்தையும், நேரத்தையும் விரயம் செய்ததினால் ஈழத்தில் கல்வியில் கரைகாண முடியாமல் இங்கிலாந்தில் தஞ்சம் புகுந்தவன் நான்.

    மிகவும் அச்சத்துடன் இங்கிலாந்தில் நுழைந்த என்னை ஆதரித்து அரவணைத்த இந்த நாட்டின் உன்னதத்தை உண்மையாக உணர்ந்து கொள்ளத் தவறினால் அது செய்நன்றித் துரோகமாகும்.

    வாழ்வில் முன்னேற்றத்தை நல்கியது மட்டுமின்றி சகலவிதமான அனுபவ யாத்திரைகளுக்கூடாக என்னை வழிநடத்திச் சென்றது இங்கிலாந்து.

    நிறவெறியின் தாக்கத்தை நான் குறைவாக மதிப்பிடவில்லை. ஆனால் எந்த நாட்டில் இருவேறு சமூகத்தினிடையே வேறுபாடுகளைக் காட்டும் சிறுஅளவிலான மக்கள் இல்லை ?

    அதற்காக  நாட்டின் அனைத்து மக்களுமே நிறவெறி கொண்டவர்கள் என்று கூறுவது சரியாகுமா?

    என்னுடைய இந்த நற்பது ஆண்டுகால அனுபவத்திலே இங்கிலாந்தில் கல்வி கற்பதிலும் சரி, அதன் பின்பு பணிபுரிந்த அலுவலகத்திலும் சரி என்றுமே நிறவெறியால் நான் பாதிக்கப்படவில்லை.

    சில இடங்களில், சில நேரங்களில் சில கல்வியறிவு அற்ற நாகரீகம் தெரியாத வெள்ளை இனத்தவரால் நிறத்தின் அடிப்படையில் நான் பழிக்கப்பட்டதுண்டு. ஆனால் அந்நிகழ்வுகள் மிகவும் சொற்பமானவையே !

    வாழ்வின் நெளிவு சுளிவுகள், வாழ்வில் நாம் எமது தேவைகளை நாமே பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் எனும் யதார்த்த விதிகளை நான் கற்றுக்கொள்ள ஏதுவாக இருந்தது இங்கிலாந்து வாழ்க்கை.

    அது மட்டுமா?

    34 வருடங்களாக எனது நண்பியாக, அன்பு மனையாளாக, எனது மைந்தனின் அன்புத் தாயாக, எனது எழுத்துக்களின் முதல் வாசகியாக என்னுடன் இணைந்திருக்கும் தமிழ்நாடு தந்த என் அன்பு மனைவியின் சந்திப்பும் அதைத் தொடர்ந்து நடந்த எமது திருமணமும் என்னை வாழவைத்த இந்த இங்கிலாந்து நாட்டில் தானே !

    மாணவனாக வாழ்ந்த காலத்தில் பகுதிநேர வேலை பார்த்து எனது வாழ்வாதாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய தேவையேற்பட்ட போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக எனது பெற்றோரின் அர்ப்பணிப்புகளின் ஆழம் புரியத் தொடங்கியது.

    அவ்வன்புத் தெய்வங்களின் அருமையும், பெருமையும் உள்ளத்தில் உறையத் தொடங்கியது. அதுவரையும் அவர்கள் மீது தான் விரித்திருந்தது வெறும் பாசத்திரையே !. ஆனால் அத்திரைக்குப்பின்னால் அவர்கள் எனக்காக எனக்கு மட்டுமல்ல எனது சகோதரங்களுக்காக செய்த அன்பான தியாகங்கள், அர்பணிப்புக்கள் என்பனவற்றை முறையாக உணர்ந்ததினால் தான் இன்று எனது மனைவிக்கு ஒரு கணவனாக அன்பு மைந்தனுக்கு ஒரு பாசமிகு தந்தையாக எனது கடமைகளைப் புரிய முடிகிறது.

    இந்த அளப்பரிய அறிவை எனக்குப் புகட்டியது இவ்விங்கிலாந்து தேசத்து நாற்பது வருட வாழ்க்கை அனுபவம் என்றால் அது மிகையாகாது.

    உண்மையான நட்பை அடையாளம் காணுவது , அந்நட்புகளின் அத்தியாவசியம் என்பன எனக்குத் தெளிவாகத் தெரிந்ததும் இவ்வாழ்க்கையின் அடிப்படையில் தான்.

    அனைத்திற்கும் மேலாக எனது உள்ளத்தில் எங்கோ சிறுபொறியாகத் திகழ்ந்த தமிழுணர்வைத் தட்டியெழுப்பி மனவோட்டங்களை வரிகளாக்கி எழுத்துக்களில் மூழ்கவைத்ததும் புலம்பெயர் வாழ்க்கைதான்.

    என் அன்பு வாசக நெஞ்சங்களே ! இம்மடல் எனது நாற்பது ஆண்டுகால இங்கிலாந்து வாழ்க்கைக்கான ஒரு அஞ்சலி மடலாக உங்கள் முன்னே பரிமணிக்கிறது.

    ஒரு சிறிய ஓய்விற்காக மூன்றுவார கால விடுமுறையின் பின்னே பெப்பிரவரி மாத முதல் வாரத்தில் மீண்டும் உங்களுடன் மடல் வாயிலாக இணைகிறேன்.

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . (137)

    சக்திசக்திதாசன்

    அன்பினியவர்களே

    இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    அவசரமாக ஓடி மறையும் 2014 இலிருந்து பொலிவுடன் புலரும் 2015க்குள் நுழையும் வேளையில் இவ்வருடத்திற்கான முதலாவது மடலுடன் உங்களுடன் உறவாட விளைகிறேன்.

    எத்தனையோ நிகழ்வுகள் சில மகிழ்ச்சியானவை சில துயரமானவை, சில வியப்பானவை, சில விசித்திரமானவை ஆனால் அனைத்தும் நடந்து முடிந்தவையே.

    முடிந்தவைகளுக்குள் எம் மனதைப் புதைத்து அழுந்திக் கிடப்பதை விடுத்து நடந்தவைகளை நல் அனுபவங்களாக்கி அதன் அடிப்படையில் புதிய வருடத்தினுள் புது உணர்ச்சியுடன் , புது வேகத்துடன் செயற்பட எனது அன்பு மிகுந்த வாழ்த்துக்கள்.

    பிறக்கும் 2015 அனுபவங்களையும் அவ்வனுபங்களின் அடிப்படையிலமைந்த வெற்றிகளையும் அனைத்து சகோதர சகோதரிகளும் உறவுகளும் அடைய அனைவர்க்கும் பொதுவான இறையிடம் பிரார்த்திக்கிறேன்.

    மறைந்து போகும் ஆண்டில்
    நிறைந்து கிடைத்த அனுபவங்கள்
    பிறக்கும் புதிய ஆண்டில்
    சிறக்கும் வழிகள் தந்திடும்

    மனிதம் என்றொரு வாழ்வில்
    புனிதம் வேண்டி நடத்திடும்
    கணிதம் ஒன்று கண்டிட்டால்
    காலம் கனிந்து உயர்த்திடும்

    அவலங்கள் பலவும் நிகழ்ந்தாலும்
    அனைத்தையும் தாங்கிடும் மனதால்
    கரைந்திடும் கவலைகள் யாவுமே
    சுரந்திடும் இன்பங்கள் வாழ்விலே

    உழைத்திடும் தோழர்கள் ஏக்கங்கள்
    பிறந்திடும் வருடத்தில் மாறட்டும்
    பெருகட்டும் மானிட உணர்வுகள்
    மருகட்டும் சுயநல போக்குகள்

    வளர்ந்திடும் இளைய தலைமுறை
    புலர்ந்திடும் வருடத்தில் பொலிவுடன்
    களையட்டும் சமுதாய கறைகளை
    பொலியட்டும் புதுவழி ஆக்கங்கள்

    நெஞ்சம் நிறைந்திடும் வாழ்த்துக்கள்
    அள்ளித் தெளிக்கிறேன் உங்களுக்கே
    இலட்சியக் கனவுகள் அனைத்தும்
    அடைந்து சிறப்புற வாழ்ந்திடவே

    புதுவருட‌ வாழ்த்துக்கள்
    வாழ்க ! வாழ்க ! வாழியவே !

    அன்புடன்
    மீண்டும் அடுத்த மடலில் சந்திக்கும்வரை
    சக்தி சக்திதாசன் குடும்பம்

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!…(73)

     சக்திசக்திதாசன்

    அன்பினியவர்களே !

    அன்புடை வாசக உள்ளங்களுடன் அடுத்தொரு மடலில் இணைவதில் மகிழ்கிறேன்.

    இங்கிலாந்து பல்வேறு இனத்தவர் , பல்வேறு சமூகங்கள் இணைந்து வாழும் ஒரு பல்லினக் கலாச்சாரம் கொண்ட நாடு.

    எதனது பல்லினக் காலாச்சார வாழ்வில் இனக்களுக்கிடையே உள்ல இணக்கப்பாடு எத்தனை முன்னில்லை கொண்டதாக இருந்தாலும் காலத்துக்குக் காலம் பொருளாதார ச் சீர்கேடு கொடுக்கும் நெருக்கடியாலும், அடிமனதில் ஊறி நிற்கும் நிறவெறி, இனவெறி ஆகியவற்றின் தாக்கங்களையுடையவர்களின் பிரச்சாரத்தாலும் இங்களுக்கிடையெலேயான முறுகல் நிலை பல்வேறு நாடுகளிலும் ஏற்படுவதுண்டு.

    இங்கிலாந்து இதற்கொன்றும் விதிவிலக்கான நாடு அல்;ல.

    ஆனால் இவ்வினக்களுக்கிடையே ஏஎர்படும் இம்முறுகல் நிலையை எதிர் கொள்வதற்காகவும் இனங்களுக்கிடையே உள்ள ஜக்கியத்தையும், புரிந்துணர்வையும் வளர்ப்பதற்காகவும் சேவையாற்றுவோர் அனைத்து சமூகங்களிலும் செயற்படுகிறார்கள்.

    இத்தகைய செயற்பாட்டுக்கு பல்வேறு இன மக்களின் கலாச்சார அடிப்படையைப் பற்ரிய புரிந்துணர்வு ஏற்பட வேண்டியது அவசியம்..

    என்ன எத்திசையை நோக்கிப் போகிறது இம்மடல் ? எனும் வினா உங்களுக்குள் இப்போது எழுந்திருக்க வேண்டுமே ?

    இங்கிலாந்தில் கோடைகாலத்தில் (Summer Time) நான் இங்கு வந்த காலத்திலிருந்து தவராமல் நடைபெற்று வரும் ஒரு கலாச்சார நிகழ்வு “நொட்டிங் ஹில் காணிவல் ( Notting Hill Carnuval ) எனும் ஒரு நிகழ்வாகும்.

    மிகவும் விமரிசையாக நடைபெறும் இக்கலாச்சார விழாவானது மேற்கிந்திய தீவு மக்களின் கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டது.

    ஆகஸ்ட் மாத இறுதியில் வரும் பொதுவிடுமுறை ஒரு திங்களில் விழுவது வழக்கம். இப்பொதுவிடுமுறை வரும் அந்த மூன்று தினங்களடங்கிய வார இறுதி விடுமுறையில் அம்மூன்று நாட்களும் இவ்விழா இலண்டனின் வடமேற்குப் பகுதியில் அமைந்திருக்கும் நாட்டிங் ஹில் (Notting Hill ) எனும் பகுதியில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

    சரி இவ்விழாவின் பின்னனி என்ன என்று பார்ப்போமா?

    இவ்விழாவின் பின்னனியில் வெறுபட்ட ஆனல் கருத்தால் இணைந்த இருவேறு நிகழ்வுகள் இருக்கின்றன.

    1958ம் ஆண்டு இலண்டனின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள இதே “நாட்டிங் ஹில்” எனும் பகுதியில் இங்கிலாந்தின் மிக மோசமான இனக்கல்வரம் நடைபெற்றது.

    காலாச்சாரப் புரிந்துணர்வு இல்லாத காரணத்தினாலேயே இத்தகைய இனக்கலவரங்க|ள் இடம்பெறுகின்றன என்பதையுணர்ந்த “குளோடியா ஜோன்ஸ் (Claudia Jones ) எனும் மேற்கிந்திய தீவுகளில் ஒன்றான Trinidad and Tobago எனும் தீவைப் பிறப்பிடமாகவும் இங்கிலாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட பெண் “மேற்கிந்திய தீவு விழா ( Caribean carnival )” எனும் விழாவை இலண்டனில் உள்ள St.Pancras Town hall எனும் இடத்தில் 1959 ஜனவரி 30ம் திகதி நடத்தினார்.

    ஆனால் இது ஒரு மண்டபத்தினுள் நடக்கும் நிகழ்வாக அமைந்தது.

    அது போல 1966ம் ஆண்டு நாட்டிங் ஹில் பகுதியில் ” ஹிப்பி லண்டன் ப்ரீ ஸ்கூல் ” எனும் அமைப்பால் தெரு விழா ஒன்று அமைந்தது. .

    இவ்விரண்டு விழாக்களின் ஒன்றினைப்பே தற்போது நடைப்பெற்று வரும் ” நாட்டிங் ஹில் விழா “

    இவ்விழாவில் ஆரன்ப காலங்களில் சட்டம், ஒழுங்கு ஆகியவர்ரின் சீர்குலைவுகள் நடைப்பெற்றிருந்திருக்கின்றன.

    பெரும்பான்மையாக மேற்கிந்திய தீவுஇன் பின்னனியைக் கொண்ட இளம் தலைமுறையினர் ஈடுப்படும் விழாவாக இருக்கும். பல சமயங்களில் இக்குழுக்களுக்கும் பொலிசாருக்கும் இடையே பல கலவரங்கள் மூண்டுள்ளன.

    ஆனால் சமீப காலங்களில் இவ்விழா பொதுவாக அமைதியான முறையிலேயே நடைபெற்று வருகிறது.

    மேர்கிந்திய தீவுகளின் காலாச்சாரத்தில் அமைந்த பல வித நடனங்களையுள்ளடக்கிய ஊர்வலங்கள் இத்தெருக்களில் கோலாகலமாக அரங்கேறும்.

    பல காலாச்சர மக்களுடைய உணவுச் சாலைகள் தெருவோரம் போடப்பட்டு இருக்கும்.

    இவ்விழாவில் இப்போதைய காலங்களில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொள்கிறார்கள்.

    இதுவே தெருவில் நடைபெறும் விழாக்களில் உலகளவில் மிகப்பெரியது என்று கணிக்கப்படுகிறது.

    இத்திருவிழாவினால் இங்கிலாந்தின் பொருளாதாரத்திற்கு ஏறத்தாழ #93 மில்லியன் நன்மை கிடைக்கிறது என்கிறது ஒரு பொருளாதார அறிக்கை .

    இதுவரை இவ்விழாவின் வன்முறையால் 5 கொலைகள் நிகழ்ந்துள்ளன.

    பல்லின மக்கள் கலந்து வாழும் ஒரு நாட்டில் அமைதியும், சமாதானமும், நீதியும் நிலைபெற வேண்டுமானல் கலாச்சாரப் புரிந்துணர்வு அவசியம். ஒருவரின் கலாச்சாரம் மற்றவர் மீது திணிக்கப்படாத வகையில் அதை கொண்டாடப் பழகிக் கொண்டால் அங்கு அமைதியும், சமாதானமும் நிலவுவது உறுதி.

     மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்

    சக்தி

    http://www.thamilpoonga.com

    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!…(48)

    சக்தி சக்திதாசன்

       

     

     

     

    அன்பினியவர்களே !

    இங்கிலாந்திலிருந்து இனிய வணக்கங்கள் .

    “அரசனுக்கொரு காலம் வந்தால் புருஷனுக்கொரு காலம் வரும் ” என்றொரு முதுமொழி உண்டு. அதே போல ஆங்கிலத்தில் உள்ள முதுமொழி ஒன்று “If the mountain will not come to Muhammad, then Muhammad will go to the mountain” அதாவது மலை முகமதுவிடம் வராவிட்டால், முகமது மலையிடம் போக வேண்டும். ஆமாம் காரியம் ஆக வேண்டுமானால் யார் பெரியவர் என்று பார்த்துக் கொண்டு இருக்காமல் யாருக்கு அந்தக் காரியம் முக்கியமானதாக இருக்கிறதோ அவர்கள் அக்காரியத்தின் நிறைவேற்றுதலுக்கு முதல் முயற்சியை எடுக்க வேண்டும் என்பதுவே உண்மை.

    என்னடா சக்தி என்ன பிதற்றுகிறானோ ? என்று எண்ணுகிறீர்களா ? கவலையை விடுங்கள் .

    அது சரி யார் அரசன் ? யார் புருஷன் ? . யார் மலை? யார் முகமது ?  யோசனையாக இருக்கிறது இல்லையா ? எனது இந்தக் கடிதத்தின் சாரமே பெப்பிரவரி மாதம் 17ம் திகதயளவில் நடைபெற்ற இங்கிலாந்துப் பிரதமர் டேவிட் கமரன் அவர்களின் இந்திய விஜயத்தைப் பற்றியே ஆகும் ?

    அது எல்லாம் இருக்கட்டும் அவரது விஜயத்திற்கும் நான் மேலே குறிப்பிட்ட முதுமொழிகளுக்கும் என்ன சம்மந்தம்? விளக்க வேண்டியது எனது கடமையல்லவா?

    ஆனந்தமாக ஆடிக்கொண்டிருந்த இங்கிலாந்து நாட்டின் பொருளாதாரம் ஆட்டம் கண்டு இப்போ அடங்கிப் போயிருக்கிறது.

    எத்தனையோ விதமான பொருளாதாரக் கட்டுப்பாடுகளை விதித்து பல நடவடிக்கைகளை முடுக்கி விட்டும் கூட எதிர்பார்த்த அளவில் நாட்டின் பொருளாதாரம் அவர்கள் எதிர்பார்த்த திசையில் எதிர்பார்த்த அளவில் முன்னேறவில்லை.

    பொருளாதாரத்தைச் சீர் செய்கிறோம் என்று சூளுரைத்து பதவியேற்ற கூட்டரசாங்கத்தின் ஜந்து வருட கால பதவிக் காலம் தனது மூன்றாவது ஆண்டில் நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. ஆயினும் பொருளாதாரம் சீரமைக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் காணப்படவில்லை.

    இன்னும் இரண்டே வருடங்களில் மற்றொரு தேர்தலைச் சந்திக்க வேண்டிய நிலையிலிருக்கும் அரசாங்கம் ஏதாவது வகையில் நாட்டின் பொருளாஅதாரத்தை முன்னோக்கித் தள்ள வேண்டிய கட்டாயத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளது.

    அதிகமாகப் பேசப்பட்டு வரும் ஜரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகள் அனைத்தும் இதேமாதிரியான பொருளாதாரச் சிக்கலுக்குள் தம்மைப் புதைத் துக் கொண்டு வெளிவரத் தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கும் வேளையிது. ஜரோப்பிய ஒன்றியத்தினுள் ஓரளவு பொருளாதாரச் சிக்கலில் விடிகாணத் திடங்கிய ஜேர்மனிய தேசமும் மீண்டும் பிந்தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது.

    இங்கேதான் இங்கிலாந்துப் பிரதமரின் இந்திய நாட்டு வ்ஜயத்தின் முக்கியத்துவம் உணரப்பட வேண்டியிருக்கிறது.

    மேலைத்தேச நாடுகள் விரும்பியோ விரும்பாமலோ எதிர்கால உலகப் பொருளாதார முன்னேற்றத்தில் இந்தியா எடுக்கப்போகும் பங்கு மிகவும் பிரதானமாகி விட்டது.

    இந்தியாவை விட பொருளாதார முன்னேற்றம் அதிக அளவு காணப்படும் சீனாவை விட இந்தியாவில் முதலீடு செய்வதையே இம்மேலைத் தேசநாடுகள் அதிலும் குறிப்பாக இங்கிலாந்து முனைப்புக் காட்டி வருகிறது.

    இங்கிலாந்தின் அரசாங்கத் திணைக்களங்கள் உட்பட பல முன்னனி கம்பெனிகள் தமது பிந்தள வேலைகளை இந்தியாவில் நிகழ்த்தும் வகையில் தமது கட்டமைப்புக்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

    நிலமை இவ்வாறிருக்க இங்கிலாந்தின் உள்நாட்டு அரசியல் நிலைமைகள் உலகப்பொருளாதாரச் சூழல்களை கணக்கிலெடுக்கத் தவரும் வகையில் தமது உள்நோக்கக் பார்வையைத் தீவிரப்படுத்தினார்கள்.

    விளைவு ,

    வெளிநாட்டிலிருந்து இங்கிலாந்துக்கு பணிபுரியவோ அன்றி கல்வி பயிலும் வசதிக்காகவோ வருபவர்கள் இந்நாட்டின் பொருளாதாரத்தைச் சுரண்டுபவர்களைப் போலக் காட்டுவதனால் அரசியல் கட்சிகள் சில தமது ஆத்ரவைப் பெருக்கிக் கொள்ளலாம் எனக் கண்டு கொண்டு தமது துவேஷ உணர்வை ஆசியாவிலிருந்து அதுவும் குறிப்பாக இந்தியாவிருந்து சமீபத்தில் வந்தவர்களை நோக்கிக் கக்கத் தொடங்கினார்கள்.

    பொருளாதாரச் சிக்கலினால் தவித்துக் கொண்டிருந்த இங்கிலாந்து மக்கள் இவ்வுணர்வலைகளினால் தாக்கப்பட்டத்தைக் கண்ட அரசும் கல்விபயில வரும் இந்திய மாணவர்களின் விசா விடயத்தில் கெடுபிடியக் காட்டினார்கள்.

    அப்போது இது பல பகுதிகளில் சர்ச்சைக்குரிய விடயமாகவிருந்தது. இத்தகைய கெடுபிடிகள் இங்கிலாந்துக்கு வரும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைத்து இங்கிலாந்துக்கு வரும் அந்நியச் செலவாணி வரும்படியைத் தக்கி விடும் எனும் வாதம் பொருளாதார நிபுணர்கள் மத்தியில் நிலவியது.

    இத்தகையதொரு நிலைமையில் தான் அடுத்தடுத்து வெளியிடப்பட்ட பொருளாதார அறிக்கைகள் இங்கிலாந்தின் பொருளாதாரம் வீழ்ழ்ச்சியிலிருந்து மீண்டு விட்டாலும் மறுபடி வளர்வதற்கு அதிக காலம் எடுக்கும் என்று சுட்டிக்காட்டின.

    புரிந்தது இங்கிலாந்து அரசுக்கு இந்நிலையிலிருந்து தமது பொருளாதாரத்தை மீட்டெடுக்க தமது வியாபார நுணுக்கங்களை பொருளாரத்தில் ஓங்கி வளரும் இநியா போன்ற நாடுகளில் விச்தரிப்பது ஒன்றேதான் சிறந்தமுறை எனும் முடிவெடுத்தார்கள்.

    இதோ அதன் விளைவாக 159 பேர் அடங்கிய குழுவுடன் இங்கிலாந்துப் பிரதமர் இந்தியாவிற்குப் படையெடுத்து விட்டார்.

    இந்தியாவிற்கும், இங்கிலாந்திற்கும் இடையே உள்ள உறவின் பாரம்பரியத்திற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பிரதமரின் பேச்சுக்கள் அடங்கியிருந்தன.

    தமது நன்மைக்காக இதைச் செய்திருந்தாலும் உலகத்தில் முன்னனி நாடுகளில் இந்தியா வகிக்கும் கேந்திர ஸ்தானத்தை சுட்டிக் காட்டும் வகையில் இந்நிகழ்வுகள் அமைந்திருக்கின்றன.

    அதுமட்டுமின்றி இங்கிலாந்தின் பல வங்கிகளின் பிற்தளச் செயற்பாடுகள் இந்தியாவில் நடைபெறுகின்றன. இங்கிலாந்து மக்களின் வங்கிக் கணக்குகளின் விபரங்கள் பல அவர்களின் பிரத்தியேக விபரங்கள் உட்பட இந்திய நாட்டுக் கிளைகளில் உள்ளன. இணையத்தளத்தில் நடைபெறும் சமூகவிரோத செயற்பாடுகளினால் இத்தனித்துவமான விபரங்கள் திருடர்கள் கைகளில் கிடைத்து விடக்கூடாது என்று பொதுமக்கள் மனதில் பீதி நிலவுகிறது.

    தனது இந்த இந்திய விஜயத்தின் மூலம் இருநாடுகளுகிடையிலும் இணையத்தள மோசடிகளைத் தடுக்கும் வகையிலான ஒத்துழைப்பிற்கான ஒப்பந்தத்திலும் பிரதமர் கையொப்பமிட்டுள்ளார்.

    இது இங்கிலாந்து மக்களுக்கு தமது வங்கிகளில் உள்ள நம்பிக்கையைக் கூட்டுவதோடு மேலும் பல நிதி நிறுவனங்கள் தமது நடவடிக்கைகளை இந்தியாவில் விஸ்தரிப்பதற்கு வழிவகுக்கும் என்று பிரதமர் நம்புகிறார் போலும்.

    அது மட்டுமா?

    எந்த இந்திய மாணவர்களின் வருகைக்கு சில மாதங்களின் முன்னால் கெடுபிடி விதித்தார்களோ அதே இந்திய மாணவர்களுக்கான விசா ஒரேநாளில் கிடைபதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்றும், இந்திய வியாபார முகவர்கள் தமது வியாபாரங்களை இங்கிலாந்திலும் நடத்துவதற்கு ஏதுவாக அவர்களுக்கான விசாவும் ஒரேநாளில் கிடைப்பதற்கு வழிவகுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார் நம்முடைய பிரதமர்.

    இதற்கு என்ன காரணம் என எண்ணுகிறீர்கள் ?

    அமரர் தமிழ்வாணன் அவர்களின் “துப்பறியும் சங்கர்லால்” எனும் மர்ம நாவல்களைப் படிக்காதவர்கள் மிகவும் சொற்பமானவர்களே ! அவரது கதையின் நாயகன் “சங்கர்லால்” பற்றி எழுதும் போது “சங்கர்லாலின் ஜாகுவார் சீறிக் கொண்டு கிளம்பியது” என்று எழுதுவார்.

    இப்போது அமரர் தமிழ்வாணன் இருந்திருந்தால் அந்த ஜாகுவாரைத் தயாரிக்கும் நிறுவனன் ஒரு இந்தியருடைய கைகளிலே என்று கண்டு மிகவும் மகிழ்ந்திருப்பார்.

    ஆமாம் இங்கிலாந்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வாகனங்களாக இருந்த “ஜாகுவார்” மற்றும் “லாண்ட்ரோவர்” என்பன மிகவும் மோசமான நிதிநிலைமையடைந்து அதை இந்திய நிறுவனமான “டாட்டா” கொள்வனவு செய்து அத்தொழிலாளர்களின் வாழ்வையும் அக்கார்களின் பெயரையும் காப்பாற்றியது. அதுமட்டுமின்றி இங்கிலாந்தில் அனைத்துப் பெரிய நிறுவனங்களும் தத்தளித்துக் கொண்டிருக்கும் ஒரு பொருளாதாரச் சூழலில் இக்கார்களைத் தயாரிக்கும் நிறுவனம் மட்டும் தனது வியாபாரம் பெருகக் கண்டது.

    இவ்வியாபாரப் பெருக்கத்தின் மூலம் மேலும் பலருக்கு வேலைவாய்ப்புக் கிட்டியது. இந்நிறுவனத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்பதை விளக்கிய ஒரு பொருளாதார நிபுணர் கொடுத்த விளக்கம் என்னை வியப்பிலாழ்த்தியது.

    பிரித்தானிய பொரியிலளாரின் நிபுணத்துவத்தையும், ஜெர்மனிய நிர்வாகிகளின் நிர்வாகத் திறனையும் இந்திய முதலீட்டாளர்கள் நன்கு பயனுள்ல முறையில் உள்வாங்கி இந்நிறுவனத்தைத் தகுந்த முதலீட்டுடன் முன்னெடுத்துச் சென்றதே இந்நிறுவனத்தின் வியாபார வெற்றியின் இரகசியம் என்று சொன்னார்.

    இவரது இக்கூற்று இந்தியர்களின் வியாபார நுணுக்கங்களையும், அவர்கள் வெற்றியடைய எடுக்கும் கூட்டு நடவடிக்கையின் திறனையும் நன்கு எடுத்துக்காட்டுகிறது.

    இதன் அடிப்படையிலேயே இங்கிலாந்து அரசாங்கமும் மேலும் பல இந்திய முதலீட்டாளர்கள் இத்தகைய மென்னெடுப்புக்களை எடுப்பார்கள் என எண்ணி அதற்குரிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க முனைகிறார்கள் என்பது தெளிவாகிறது.

    அத்தோடு மும்பாயிலிருந்து பெங்களூர் வரை ஒரு வியாபாரக் அதவொன்றை ஏற்படுத்தும் வகையில் ஒரு வழி சமைத்து பல புதிய மாதிரி நகரங்களை உருவாக்க பிரித்தானிய கட்டிட, நகர ஆராய்வாளர்களின் உதவியை அளிக்க இங்கிலாந்து ஏறந்தாழ 1 பில்லியன் இங்கிலாந்து பவுண்ஸை முதலீடு செய்வதாகவும் பிரதமர் கமரன் அறிவித்துள்ளார்.

    அதுசரி இந்திய மக்களின் மனதில் இடம்பிடிக்க பிரதமர் கமரன் கையாண்ட யுத்தி என்ன தெரியுமா? இந்திய மக்களின் அது உன்னத விளையாட்டான கிரிக்கட் விளையாட்டை விளையாடியதன் மூலம் இந்திய மக்களின் கவனத்தைத் தன்பால் ஈர்த்து விட்டதாக எண்ணி விட்டார் கமரன் போங்கள் !

    இதற்கு இந்தியாவின் நிலைப்பாடு என்ன ?

    இங்கிலாந்து தனது நன்மைக்காக இத்தகிய ஒரு அதீத உறவைப் பெண முன்வந்தது எனினும் இந்தியா உலக பொருளாதார முன்னனி நாடுகளில் முன்வரிசையில் நிற்கும் காரண்த்தினால் இதனை தனக்குச் சாதகமான முறையில் உள்வாங்கிக் கொள்ல வேண்டும்.

    பொருளார முன்னேற்றம் சமுதாயத்தில் அடிமட்டத்தில் அல்லலுறும் மக்களைச் சென்றடைவதற்கான வழிமுறைகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

    வடகிழக்கு ஆசியப் பிராந்தியத்தின்  அதிமுக்கிய நாடாக இந்தியா திகழ்கிறது. அதுமட்டுமின்றி பொருளாரத்தில் முன்னனியில் நிற்கும் நாடுகளைக் கொண்ட க்20 அமைப்பிலும் மிகவும் முக்கிய இடத்தை வகிக்கிறது.

    2020 இல் இந்தியா உலகின் முன்னனி நாடாகத் திகழும் என்று வலியுறுத்திய இந்திய முன்னால் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களிஉன் கனவு எமது கண்முன்னே நிஜமாவது போன்ற உணர்வு தோன்றவில்லையா?

    காத்திருப்போம், களித்திருப்போம்

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – (34)

     

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    ஆணும், பெண்ணும் உலகில் சமநிலை கொண்டவர்கள் எனும் கருத்தை நிலைநாட்டுவதற்காக சிவன் அர்த்தநாரீசுவரராக தன்னைக் காட்டியதாகப் புராணங்களில் அறிகிறோம்.

    வாழ்வும் சமயமும் பிணைந்து இருப்பது உலகில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி விட்டது. கடவுள் என்றொரு சக்தி இருக்கிறதா? இல்லையா என்னும் விவாதம் பல்வேறு நாட்டவர்களிடமும், பல்வேறு வகைகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

    அதே சமயம் விடை தெரியா வினாக்கள் , விளக்கமில்லா நிகழ்வுகள் இப்பிரபஞ்சத்தில் ஆங்காங்கே நடைபெற்ற வண்ணமே இருக்கின்றன.

    உள்ளத்தூய்மை, உள்ள ஒழுக்கம் என்பனவற்றின் முக்கியம் உலக சமுதாயத்தின் அமைதியான வாழ்க்கைக்கு எத்துணை இன்றியமையாதது என்பது பல வழிகளில் நிரூபிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

    நாகரீக வளர்ச்சி எனும் பெயரால் கலாச்சார விழுமியங்கள் தமது இருப்பினை இழந்து கொண்டிருக்கின்றன.

    கலாச்சார பாரம்பரியம், சமுதாயக் கோட்பாட்டினைக் கட்டிக் காக்கும் வரம்பு என்பனவற்றின் எல்லை என்ன என்று நிர்ணயிக்க முடியாமல் நவீன கால மாற்றங்கள் தத்தளித்துக் கொண்டிருப்பது போலத் தென்படுகிறது.

    மதங்களைத் ஸ்தாபித்தவர்களின் நோக்கத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளாதவர்களால் மதம் போதிக்கப்படும் போது அங்கே மதங்களின் பெயரால் அநியாயமாக மனித உயிர்கள் காவு கொள்ளப்படுக்கின்றன.

    மதத்தைக் கண்மூடித்தனமாக பின்பற்றுவர்கள் சமுதாயத்தில் முன்னணி நிலைகளை எடுப்பதைக் காட்டிலும் மதங்களைப் பற்றிய உண்மையான புரிந்துணர்வு கொண்டவர்கள் சமுதாயத்தின் முன்னோடிகளாக இளைய சமுதாயத்தை வழி நடத்துவது ஒன்றே இன்றைய அவசர உலகில் அமைதியான வாழ்க்கைக்கு வழிவகுக்கும் என்பதுவே யதார்த்தமாகும்.

    என்ன இது ?  எதற்காக இந்த தத்துவ விளக்கம் இப்போது எனும் கேள்வி உங்கள் மனங்களிலே விளைவது தவிர்க்க முடியாதது.

    சில நாட்களுக்கு முன்னர் இங்கிலாந்திலே “சர்ச் ஆப் இங்கிலாந்து ( Church of England) எனும் அமைப்பிலே எழுந்த சர்ச்சைகளும், விவாதங்களும் அதைத் தொடர்ந்த வாக்கெடுப்பின் முடிவுகள் கொடுத்த சமுதாய அதிர்வுகளைப் பற்றிய அலசலுக்காகவே மேற்கூறிய கருத்துக்கள்.

    கடந்த 12 வருடங்களாக இங்கிலாந்து சர்ச்க்குள் நடந்த விவாதங்களும் அதன் பயனாக ஏற்பட்ட விழிப்புணர்வுகளும் திரும்பவும் பழைய குருடி கதவைத் திறவடி எனும் நிலைக்குத் தள்ள‌ப்பட்டு விட்டது.

    என்ன விஷயம் இது ? என்று அங்கலாய்ப்பது போலத் தெரிகிறது.

    ஆண்டவனின் தேவாலயத்தில் ஆணும் பெண்ணும் சமனாகக் கருதப்படுகிறார்களா ? என்று தேவாலய நிர்வாகத்தினரின் முன்னால் வைக்கப்பட்ட கேள்வியின் மீதான விவாதங்களே அவை.

    சாதாரண் மதகுரு எனும் ஸ்தானத்திற்கு பெண்களும் வரலாம் எனும் நிலையிலிருந்து பெண் “பிஷப்(Bishop)”  எனும் பதவிக்கு பெண்கள் தகுதியானவர்களா ? அவர்கள் அப்பதவிக்கு நியமிக்கப்படுவதை அனுமதிக்கலாமா? எனும் விவாதம் பல வருடங்களாக நடைபெற்று வந்தது.

    அவ்விவாதங்கள் முதிர்வடைந்த நிலையிலும், பெண்கள் பிஷப்பாக வரவேண்டும் அதுவே சமுதாயத்தில் பெண்கள் சம உரிமையுடன் கணிக்கப்படுவதை ஊர்ஜிதப்படுத்தும் செயல் எனும் அரசியல்வாதிகளும், பெண்ணுரிமையை முன்னெடுப்பவர்களும் ஆதரித்துக் கோஷமெழுப்பியதாலும் தேவாலய திருச்சபையின் நிர்வாகக் குழுக்களின் முன்னால் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது ஆறு வாக்குகளினால் இப்பேரரணை தோற்கடிக்கப்பட்டதையடுத்து பல அரசியல், சமூக விவாதங்கள் ஊடகங்களில் நடைபெற்ற வண்ணம் இருக்கிறது.

    சரி இதன் பின்னணியைக் கொஞ்சம் பார்ப்போமா?

    இந்த சர்ச் ஆப் இங்கிலாந்து எனும் இங்கிலாந்து மக்களுக்கான தனியான தேவாலய மத அமைப்பு இங்கிலாந்தின் மன்னனான  8வது ஹென்றி என்பவரால் 1534ம் ஆண்டு அமைக்கப்பட்டது. தனக்கு ஆண் வாரிசைக் கொடுக்காத காரணத்தால் தனது மனைவியான “கத்தரின் ஆப் அராகன் (Catherine of Aragon)” அவர்களை விவாகரத்துச் செய்து விட்டு தனது காதலியான “ஆன் பேலின்(Anne Boleyn.) என்பவரை மணமுடிக்க எண்ணியபோது அதற்கு அப்போதைய கத்தோலிக்கப் பெரியவரான போப் அனுமதி கொடுக்காத காரணத்தினால் இங்கிலாந்து நாட்டிற்கான தனியான தேவாலய அமைப்பை இம்மன்னன் உருவாக்கினார்.

    இத்தகைய பின்னணியைக் கொண்ட இவ்வமைப்பு தேவாலயத்தில் பெண்கள் கர்த்தரை நோக்கிய வழிபாட்டில் ஒரு பகுதியை வாசிக்கும் தகுதியை 1861ம் ஆண்டு பெற்றார்கள். முதலாவது உலக மகாயுத்தத்தின் போது சில பெண்கள் “பிஷப்பின் தூதர்களாக”  நியமிக்கப்பட்டார்கள்.

    அதைத்தொடர்ந்து பெண்களுக்கான நியமனம் எதுவும் 1969ம் ஆண்டு வரை நடைபெறவில்லை. பெண்கள் சமய சம்பந்தமான சேவைகளுக்காக தெரிவு செய்யப்படலாம் எனும் சட்டம் 1986ல் இயற்ற‌ப்பட்டது. இதன் பிரகாரம் முதன் முறையாக 1987ம் ஆண்டு பெண்கள் தெரிவு செய்யப்பட்டார்கள்.

    இங்கிலாந்தின் சர்ச் அமைப்பை நிர்வகிக்கும் சர்ச் அசெம்பிளி எனும்  1850களில் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பை “ஜெனரல் சினோட்(General Synod) எனும் அமைப்பு 1970ம் ஆண்டு இடம் பெயர்த்தது. இவ்வமைப்பு பெண்கள் தேவாலய நிர்வாகங்களிலும் மற்றைய மதகுருமாருக்கு உதவிப் பணிகளில் ஈடுபடுவதற்குமான அதிகாரத்தை 1994ம் ஆண்டே வழங்கியது.

    2005ம் ஆண்டு யூலை மாதம் சர்ச் ஆப் இங்கிலாந்து பெண்கள் “பிஷப்” எனும் பதவியை வகிப்பதற்கான அதிகாரத்தை வழங்குவது பற்றி ஆலோசிக்கத் தொடங்கியது. 2006ம் ஆண்டு பெப்பிரவரி மாதம் அதே அமைப்பு பெண் பிஷப் கீழ் வழிபட விரும்பாத பக்தர்களுக்காக மாறுபட்ட வழிமுறைகளைச் சிந்திக்க வேண்டும் எனும் தீர்மானத்தைக் கொண்டு வந்தது.

    2008ம் ஆண்டு யூலை மாதம் 8ம் திகதி அதே அமைப்பு பெண்களை “பிஷப்” பதவிக்கு அமர்த்தலாம் என்றும், அதை விரும்பாதவர்களுக்கு மாறுபட்ட வழிகளைக் கொடுக்க வேண்டிய தேவையில்லை என்றும் பெரும்பான்மையாக வாக்களித்தது.

    ஆனால் அதைத் தொடர்ந்து பல இழுபறிகள் இது சம்பந்தமான அதிகார நிறைவேற்றலில் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்னால் நடைபெற்ற வாக்கெடுப்பில் ஏறத்தாழ 6 வாக்குகளினால் பெண்களுக்கு “பிஷப்” அதிகாரம் வழங்கும் பிரேரணை தோல்வியுற்றது.

    இது பல முன்ன்ணி அமைப்புகளுக்கு விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் சட்டத்தில் பெண்கள் பாரபட்சமாக நடத்தப்படக்கூடாது எனும் நிலை இருக்கையில் எப்படி கிறீஸ்தவ தேவாலயம் இங்கிலாந்து நாட்டில் இத்தகைய வேறுபடுத்தலைக் கடைப்பிடிக்கலாம் எனும் கேள்வி பலமுனைகளில் இருந்து எழுந்துள்ளது.

    அனைத்து மக்களும் வேறுபாடின்றி நடத்தப்ப்பட வேண்டும் எனும் நிலையை உலக அரங்கில் முன்னெடுத்துச் செல்லும் பிரித்தானிய நாட்டில் இத்தகைய ஒரு நிலை இருப்பது உலக அரங்கில் எமது நாட்டைப் பற்றிய மதிப்பீட்டைக் குறைத்து விடாதா என அரசியல் தலைவர்கள் கட்சிப் பாகுபாடின்றி விமர்சிக்கிறார்கள்.

    இங்கிலாந்தின் பிரபுக்கள் சபையில் இங்கிலாந்து கிறீஸ்துவ அங்கத்துவம் பேணப்படும் நிலையில் ஏன் அரசாங்கம் கிறீஸ்தவ நிர்வாகத்தினரிடம் இவ்வேற்றுமை களையப்படக்கூடாது எனும் அழுத்தத்தைப் பிரயோகிக்க முடியாது எனும் கோஷமும் எழுந்துள்ளது.

    அதே சமயம் மத சம்பந்தமான விடயத்தில் அரசியல் தலையீடுகள் இருக்கக்கூடாது, தனி மனித உரிமைகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் இங்கிலாந்து நாட்டில் பெண் “பிஷப்” ஜ ஏற்றுக் கொள்ளாத கருத்து கொண்டவர்களின் உரிமையை எபவ்வாறு உதாசீனம் செய்யலாம் என்று மற்றொரு பக்கத்தில் வாதம் எழுகிறது.

    இறைவனின் கண்களில் ஆணும், பெண்ணும் சம உரிமை கொண்டவர்களாகவே கருதப்படுகிறார்கள். தேவாலயத்தில் இறை சம்பந்தமான வகையில் சேவைபுரிய விரும்பும் பெண்களைத் தடை செய்வது என்பது நியாயமற்ற செய்கையாகவே தெரிகிறது.

    அதே சமயம் கால மாற்ற‌த்துக்கு உட்படுத்தப்படமுடியாத பல நடைமுறைகள் மத சம்பந்தமான விடயங்களில் இருப்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டியே இருக்கிறது.

    இவ்விரண்டையும் அனுசரித்துக் கொண்டு போகக்கூடிய ஒரு சமநிலையான வழிமுறையை ஏற்படுத்த மதத் தலைவர்கள் முனைவதற்கு அரசியல் தலைவர்களின் அழுத்தம் தேவைப்படுகிறது போலவே தெரிகிறது.

    இந்த விடயத்தில் 2013 கொண்டு வரப்போகும் மாற்றத்தை இங்கிலாந்து முழுவதும் மிக ஆவலாக எதிர்பார்த்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

    விடை காலத்தின் கையில்

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்
    லண்டன்
     
     

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் … (33)

     

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    காலவேகத்தின் பரிணாம மாற்றம் நாகரீகம் எனும் போர்வையில் உச்சத்தை எட்டிப்பிடிக்கின்ற ஒரு காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

    நாகரீகம் எனும் சொல்லின் அர்த்தத்தை ஒவ்வொரு சமுதாயமும் தனக்குப் பிடித்த  வகையில் மாற்றியமைத்து தமது கண்மூடித்தனமான நடத்தைகளை நாகரீக வளர்ச்சி என்று நியாயப்படுத்திக் கொண்டிருக்கும் ஒரு காலம் இது.

    ஒரு காலத்தின் நடைமுறை மற்றொரு காலத்திற்கு ஒவ்வாத நிலமை ஏற்படுவது சகஜம். காலத்திற்கேற்ப சில சில விடயங்களில் மனிதர்கள் தமது வாழ்க்கைமுறையை மாற்றியமைத்துக் கொள்ள‌ வேண்டிய தேவை இல்லாமல் இல்லை.

    ஆனால் கால மாற்றத்தினால் மாற்ற‌ப்படமுடியாத, மாற்ற‌ப்படக் கூடாத விடயங்கள் பலவுண்டு. குடும்ப உறவுமுறைகள், கலாச்சார விழுமியத்தின் அடையாளங்கள், திருமணம் போன்ற பந்தங்களின் முக்கியத்துவம், குடும்ப அமைப்புமுறை என்பன இவற்றுள் அடங்குவது யதார்த்தமானது.

    ஆனால் இந்த நூற்றாண்டிலே தனிமனித சுதந்திரம் எனும் போர்வையில் பல மனித வாழ்வின் அடிப்படைக் கலாச்சாரங்கள் கேள்விக்குறியாக்கப்படுகின்றன. குறிப்பாக திருமண வாழ்வின் முறிவுகள் மிகவும் சகஜமாகிப் போய்விட்டனவோ என்றொரு ஆதங்கம் மனதில் எழாமல் இல்லை.

    திருமணம் எனும் பந்தத்தில் புகுந்து விட்டோம் எனும் காரணத்தினால் தம்மீது கண்மூடித்தனமாக இழைக்கப்படும் கொடுமைகளைத் தாங்கிக் கொண்டிருக்க வேண்டும் எனும் எதிர்பார்ப்பு தவறானதே. இப்பந்தத்தை முறிப்பது சுலபமல்ல எனும் காரணத்தினால் தமது உறவு கொடுக்கும் அதிகாரத்தைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு கொடுமைகள் புரியும் ஆணிடமிருந்தோ அன்றிப் பெண்ணிடமிருந்தோ பிரிந்து செல்வதைத் தவறென்று வாதிடுவது என் நோக்கமல்ல.

    ஆனால் தனிமனித சுதந்திரத்தின் அர்தத்தை சரியாகப் புரிந்து கொள்ளாமல் விட்டுக் கொடுக்கும் மன்ப்பான்மையை அறவே மறந்து சட்டத்தின் துணை கொண்டு மணவாழ்வை அவசரமாக முறித்துக் கொள்ளும் பலரை அனுபவரீதியாகப் பார்த்துள்ளேன்.

    என்ன எங்கே செல்கிறது இந்த கருத்தாடல் ? என்று எண்ணுகிறீர்களா?

    இந்த வாரம் இங்கிலாந்து மகாராணியார் இரண்டாவது எலிசபேத் அவர்கள் தமது 65வது திருமணநாளை மிகவும் அமைதியாகக் கொண்டாடியுள்ளதை நினைத்துப் பார்க்கையில் அவரது அந்த வாழ்க்கையின் வெற்றி மனதில் ஏற்படுத்திய தாக்கத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்காகவே மேலே அலசியவை.

    திருமண வாழ்வு என்பது ஒரு ஆணுக்கும் , பெண்ணுக்கும் இடையில் நிகழும் ஒரு ஆயிரங்காலத்து பந்தம் என்பதே எமது ஆன்றோர்கள் எமக்கு போதித்த அனுபவக் கல்வி ( ஓ இப்போது ஆணுக்கும், ஆணுக்கும் அன்றி பெண்ணுக்கும், பெண்ணுக்கும் இடையில் கூட இப்பந்தம் ஏற்படுத்தப்படுகிறதே ! ஓ இதுதான் நாகரீக முன்னேற்றமோ ?)

    இம்மணவாழ்க்கை வெற்றியடையவதற்கு பல காரண்ங்கள் கைகொடுக்கின்றன. ஆனால் அவற்றில் முக்கியமானது  பரஸ்பரம் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கும் மன்ப்பான்மையேயாகும்.

    இந்த 65 வருட கால மண்வாழ்க்கையில் எலிசபேத் மகாராணியாரும் அவரது கணவரான பிரின்ஸ் பிலிப் அவர்களும் ஒருவருக்கொருவர் எத்தகைய விட்டுக் கொடுப்புகளை செய்திருப்பார்கள் என்று எண்ணும் போது மெய்சிலிர்க்கிறது.

    எனது தந்தை இவ்வுலக வாழ்க்கையை நிறைவு செய்த போது எனது பெற்றோர் மண்வாழ்க்கையில் 54 வருடங்களைப் பூர்த்தி செய்திருந்தார்கள். தந்தை மறைந்து சரியாக ஆறு வாரங்களில் எனது அன்னையும் அவருடன் இணைந்து கொண்டார்.

    அவர்களது மணவாழ்வின் 54 வருடங்களும் அமைதியாக நடந்தது என்று சொன்னால் அது உண்மையாகாது. அவர்களுடைய மண்வாழ்வினிலே பல சமயங்களில் புயல் வீசத்தான் செய்தது ஆனால் ஒருவர் மீது ஒருவர் கொண்டிருந்த நம்பிக்கையும், திருமண்ம் எனும் பந்தத்தின் மீது அவர்கள் கொண்டிருந்த அசைக்க முடியாத நம்பிக்கையுமே அவர்களுக்கு கைகொடுத்தது என்பதை நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்.

    எனது பெற்றோர்கள் சாதாரணமானவர்களே ! அவர்கள் மீது சமூகம் கொடுத்த எதிர்பார்ப்புகளினால் ஏற்படுத்தப்பட்ட அழுத்தங்கள் என்று பெரிய அள்வில் எதுவும் இருக்கவில்லை.

    ஆனால் இங்கிலாந்து மகாராணியாரும், அவரது கணவரும் ஒரு நாட்டின் மதிப்பிற்கும், மரியாதைக்குமுரிய கெள்ரவ பிரஜைகள் ஆவார்கள். அவர்களது நாட்டு மக்களின் பார்வையில்  உதாரணப் புருஷர்களாக வாழ வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளாக்கப்பட்ட்ட ஒரு நிலையில் அவர்கள் வாழ்கிறார்கள்.

    அவர்களது அந்த வாழ்க்கையில் அவர்கள் 65 வருட காலம் மணவாழ்வில் நிலைத்திருப்பது என்பது ஒரு சாதனையான விடயம் என்றே சொல்ல வேண்டும்.

    இங்கிலாந்து மகாராணியார் இளவரசியாக இருந்த போது தனது கணவர் பிலிப் அவர்களை முதன் முதலில் 1934ம் ஆண்டும் பின்னர் 1937ம் ஆண்டும் சந்தித்தார். தனக்கு 13 வயதாக இருக்கும் போதே பிலிப் மீது தனக்குக் காதல் ஏற்பட்டதெனச் சொல்கிறார்.

    அபோதைய இங்கிலாந்து மன்னரான ஜார்ஜ் அவர்களுக்கு பிலிப் தனது மருமகனாக வருவதில் மகிழ்ச்சி இல்லாதிருந்ததாம். காரணம் அவர் பெயரளவில் இளவச‌ராக இருந்து அவருக்கென ஒரு அரசோ அன்றி நாட்டின் தலைமைப்பதவியோ கிடையாது என்பதுவேயாகுமாம்.

    பிபில் அவர்களின் தந்தை கிரேக்க நாட்டு இளவரசர்களில் ஒருவரான அன்ட்ரூவிற்கும், விக்டோரியா  மகாராணியாரின் மகள் வழி வந்த பேரப்பிள்ளையான இளவரசி லூயி அவர்களுக்கும் பிறந்த மகனாவார்.

    இளவயதினிலே பாரிசில் கல்வி பயின்ற பிலிப் அவர்கள் மிகவும் திறமையாக பிரெஞ்சு, ஆங்கிலம், ஜேர்மனி ஆகிய மொழிக்ளைப் பேசும் திறமை பெற்றவராவார்.

    இங்கிலாந்து பட்டத்து இளவரசியான இரண்டாவது எலிசபெத் அவர்கள் பிரின்ஸ் பிலிப் அவர்களை 1947ம் ஆண்டு நவம்பர் மாதம் 20ம் திகதி லண்ட்னில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் அபே தேவாலயத்தில் மணமுடித்தார்,. திருமணத்திற்கு முன்னதாக பிலிப் அவர்கள் தனது கிரேக்க மதத் தழுவலை நிராகரித்து ஆங்கில கிறித்துவ மதத்தைத் தழுவிக் கொண்டார். இவருக்கு இங்கிலாந்தின் இளவரசர் எனும் பட்டத்தையும், டியூக் ஆப் எடின்பரோ எனும் பட்டத்தையும் அப்போதைய இங்கிலாந்து மன்னரான 5ம் ஜார்ஜ் மன்னர் அளித்துக் கெளரவித்தார்.

    நோயினால் பாதிக்கப்பட்ட ஜார்ஜ் மன்னர் 1952ம் ஆண்டு பெப்ரவரி மாதம் மரணமடைய இங்கிலாந்தின் இரண்டாவது எல்சபேத் மகாராணியாராக இங்கிலாந்தின் இளவரசி முடிசூடினார்.

    தனது பட்டத்து அரசியான வாழ்விலே பல மாற்றங்களைச் சந்தித்தும் அவையனைத்தும் தனது மண்வாழ்வில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படாத வகையில் தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்.

    அவருக்குத் துணையாகத் தானும் எந்தவித சர்ச்சைகளுக்குள்ளும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாமல் பிரின்ஸ் பிலிப் அவர்களும் மகாராணியாருக்கு ஏற்ற கணவராக தனது வாழ்வை மேற்கொண்டார்.

    இவர்களின் மூத்த மக்னான இளவரசர் சார்லசின் மணவாழ்க்கை முறிவடைந்து அவர் இளவரசி டயானவை விவாகரத்துச் செய்தார், இரண்டாவது மக்னான இளவரசர் அன்ட்ரூ தனது மனைவியை விவாகரத்துச் செய்தார்.

    இளவரசி டயானா மரணமானார். இளவரசர் சார்ல்ஸ் அவர்கள் தனது பதின்ம வயதுக் காதலியை மறுமணம் செய்தார்.

    இப்படியான பல பாதிக்கக்கூடிய விடயங்கள் அனைத்துக்கும் முகம் கொடுத்து இங்கிலாந்து ராணி எனும் தனது பதவிக்கு எவ்வித களங்கமும் ஏற்படாத வகையில் தனது பிரத்தியேக வாழ்க்கையை செப்பனிட்டு அனைவருக்கும் முன்னுதாரணமாக வாழ்ந்து கொண்டிருக்கும் இத்தம்பதியரின் மணவாழ்க்கை நிச்சயமாக ஒரு சாதனையே.

    ஒரு வியாபாரம் செழிக்க வேண்டுமானால் அவ்வியாபாரத்தின் விஸ்தரிப்புக்காக எமது உழைப்பை அர்ப்பணிப்பதைப் போல திருமண வாழ்க்கையின் வெற்றிக்காக எமது பண்புகளை மேம்படுத்தி வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என்பதை இவர்களது வாழ்க்கையில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

    “ஒரு மனிதன் விழாமலே வாழ்வது பெருமையல்ல‌
      ஒவ்வொருமுறை விழுந்த போதும் எழுந்தான் என்பதுவே பெருமை “

    அடுத்த மடலில் சந்திக்கும் வரை

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்
     

     

     

    Share