கிரேசி மோகன்

Experiments with Krishna series. #Krishnafortoday Keshav
Experiments with Krishna series. #Krishnafortoday Keshav

கண்ணன் திருப்புகழ்….
—————————————-
”கண்ணன் அந்தாதி’’
————————————-
கூப்பிட்டால் ஆயர்க்காய்க், கூச்சலிட்டால் ஆனைக்காய்ச்,

ஓவியம் : கேஷவ்
ஓவியம் : கேஷவ்

சாப்பிட்டால் நட்புக்காய்ச், சோர்வின்றிக் -காப்பிட்ட
ராதை கரம்விலக்கிக், கீதை உரைநிகழ்த்தி
ஆதரவுக்(கு) ஓடும் அரி….(16)

அரியா தவனை, அறியா தவரே
அறிய முயல்வர் அறிவால், -எறியா(து)
ஒளிந்த நெருப்பை, உணர மரத்தைப்,
பிளந்த குருடனைப் போல்….(17)

‘போலெ’ன்(று) உவமை புகல முடியாது,
மாலென் றனரோ மகாகவிகள், -கேளொன்று,
சிந்தனை தேவையா, சித்திரத்திற்(கு) ஓவியா
எந்தனை வேறுவடி வாக்கு….(18)

வாக்கிலே பாரதி, வார்த்தைகள் வந்திட
நாக்கிலே நம்மாழ்வார் நின்றிட, -நோக்கிலே,
ஆண்டாளின் பக்தி, அகலா(து) இருந்திட,
வேண்டினேன் கண்ணா வழங்கு….(19)

வழங்கினாய் செல்வம், வழங்கினாய் சேலை,
வழங்கினாய் கீதை, வணக்கம் -வழங்கிடும்,
காலம் முடிந்ததோ, கண்ணா மவுனமாய்,
ஆலில் படுத்தாயோ, ஆழ்ந்து….(20)

——————————————————————————————————

படங்களுக்கு நன்றி:

http://kamadenu.blogspot.in/

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *