‘’கூடாரவல்லி திருவாதிரையன்று….அரி, அரன், அம்பாள் மூவரும் ஒன்று….!

’’கூடாரை வெல்வார், கடைசிவரை கூடுபவர்
வாடாது காத்திடும் வைணவம்: -மூடநெய்
ஆதிரை ஈசனவர், அக்காரக் கண்ணனவர்,
பாதியிறைப் பங்கருளம் பாள்’’….கிரேசி மோகன்….!

பாதி இறை பங்கு அருளம்பாள்….!

 

’’ஆண்டாள் -27”….
————————————–

kesav

”கூடாரை வெல்லும்சீர் கோவிந்தன் முப்பதைப்
பாடாத வாயெல்லாம் பாழ்வாயே, -ஆடா(து)
அசங்கா(து) அவனே அவள்பாடல் கேட்க,
விஷம்காதுக்(கு) அன்றோஊர் வம்பு”….

”கூடாரம் போல்குவிந்து, மூடாத பாத்திரத்தில்,
சூடாறும் பொங்கலை சேவித்து -கூடார
வல்லியில் உண்பவர்க்கு, இல்லை டயாபடீஸ்,
வில்லியூர் செல்வியின் வாக்கு”….கிரேசி மோகன்…

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *