FullSizeRender

———————————————————–

சரணா கதியென்று சார்ந்து கிடப்போர்க்(கு)
அரணாய் இருக்கும் அரியே -நரனாய்ப்
பிறந்து வளர்ந்து பிணியென்ற சாக்கில்
இறந்தில்லை யாவ(து) எதற்கு….!

அகந்தை இறக்குமங்(கு) ஆன்மா பிறக்கும்
புகழ்ந்திகழ்ந்த வாசனை போகும் -மகிழ்ந்திருப்போம்
ஆரா அமுதத்தில் ஆனந்த சாகரத்தில்
நாரா யணஓம் நம….!
நமநம என்றவனை நச்சரிப்பாய் நாமம்
கமகமக்கும் நாவால் கணமும் -எமனெதிர்
வந்தாலும் அச்சமின்றி நந்தமகன் அச்சுதன்
சொந்தம் நமக்கென்று சொல்….

கொட்டுது தேளின் கொடுக்காய்ப் புலனைந்தும்
பட்டது போதும் பரந்தாமா -சட்டென
வந்தெனக்குச் சத்துவ வாழ்வை அளித்திடுவாய்
நந்தலாலா இந்தநாளே நீ….!

நீயின்றி நானில்லை நானின்றி நீயுண்டு
தீயின்றி தீபம் திரிதானே -வாஇன்றே
வெப்பமாய் வந்தென்னை அப்புவாய் சந்தனமாய்
அப்பனே ஆரா அமுது….!

அமுதா அளவினை விஞ்சுகின்ற நஞ்சாம்
எமதாசை நெஞ்சினை ஏற்று -குமுதவாய்
பேய்ச்சி முலைப்பாலை உண்டதுபோல் எம்மனச்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *