image (2)

 

 

 

 

 

 

 

 

 

மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

 

மெல்ல நீயென் அருகே சென்றால்

புல்லரிக்கும் எனக்கு ! நீ

பெருமூச்சு விட்டால்,  

உட்புறம் காய்ந்து போகுது !

பட்டாம் பூச்சி போல், நெஞ்சு எனக்குப்

பட படக்குது !

நாணப் படுவது ஏன் நான், நீ அருகில்

காணப் படும் போது ?

காரணம் அதற்குக் காதலே !

நானிப்படி

மாறிப் போனது ஏனோ ?

காதலால் தான் !

கடினமாய் உள்ள தெனக்கு

காதலிப்ப துன்னை !

ஒவ்வோர் இரவிலும் விடாது

நீயும் நானும்

வாய்ப் போர் புரிதல் முறையா ?

ஆயினும்

உன்னை நான் தரிசித்த போது

ஒளி வீசிடும் இரவில்,

உன்னதப் பேரொளி !

பெண்ணே !

இழப்பை நிரப்ப வேண்டியது

என் கடமை யன்றோ ?

நேர்வ தெல்லாம் காதலால் !

ஆயினும்

பாரமாய் உள்ள தெனக்கு

காதலிப்ப துன்னை !

ஆமாம்

பாரமாய் உள்ளது !

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *