தேடிக்கொண்டிருக்கிறோம் …கிடைக்கவில்லை ,..!
தேவா
மகாத்மாவே !
உன் போராட்டத்திற்கு
உன் இதயத்தில் தோட்டாவினால்,
முற்றுப்புள்ளி வைத்து விட்டதாக நினைத்து
நீ துயில் கொண்டாய்,
உன் நினைப்புதான் பிழைப்பைக் கெடுத்தது,
நீ வெள்ளையரிடம் பறித்துத் தந்த சுதந்திரம்
பறி போய்த் தவிக்கின்றோம்,
அரசன் ஆண்ட காலம் காலாவதி ஆன பின்னும்,
மந்திரிகள் நாட்டை ஆளும் காலம் இது,
ராக்கட்டு விட்டு என்ன பயன்
பாக்கட்டில் பணம் இல்லையே ,
நீ மக்களுக்காக வாழ்ந்தாய்-இவர்கள் தம் மக்களுக்காக வாழ்கிறார்கள்
தேர்தலுக்கு முன் தெரிவார்கள்
தேர்தலுக்குப் பின் மறைவார்கள்,
இந்தியா ஏழை நாடா!! ஏழ்மையாக ஆக்கப்பட்ட நாடு
இவர்கள் கோடியில் புரள்வதால்
பலர் தெருக்கோடியில் வாழ்கிறார்கள்
மகாத்மாவே நீ வாங்கித்தந்த சுதந்திரத்தைத்
தேடிக்கொண்டிருக்கிறோம்,
இன்னும் கிடைக்கவில்லை
கிடைத்தவுடன் சொல்கிறோம் எழுந்து வா..
படத்திற்கு நன்றி: http://www.deshvidesh.com/Current_Issue/Desh-Videsh_January_2011/gandhiji-and-gita.html