பி. தமிழ்முகில் நீலமேகம்

 

இலையுதிர்த்த  மரங்களெல்லாம்

மலர்களால்  அலங்கரிக்கப்பட்டிருக்க

மகரந்தங்களைத் தேடி மலர்களை

சில் வண்டுகள் ரீங்கரிக்க

குறுகிய காலத்துள்  –

மரக் கிளைகளில்

இலைகள் துளிர்த்திருக்க

உதிர்ந்த மலர்கள்

நிலமெங்கும் மலர் மஞ்சம்

அமைத்திருக்க –

எங்கெங்கு  காணினும்

மஞ்சள்  மகரந்தங்கள்

மங்களம் பரப்பிட

கூடவே ஒவ்வாமையையும்

இலவச  இணைப்பாய்

அள்ளி வழங்கிட

உற்சாகமூட்டும் வண்ணங்கள்

நம்மைச் சூழ்ந்திருக்க

பறவைகள் பரவசமாய்

வானில் இசைபாடி

வலம் வர – உறக்கத்திலிருந்த

அணில்களும் முயல்களும்

உற்சாகமாய் துயிலெழுந்து

துள்ளியோட – வந்து விட்டது

வசந்த காலம் !!! – எங்கெங்கும்

உற்சாகமும் இன்பமும்

சூழ்ந்திருக்கவே !!!!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.