வங்கக் கவிமணி
சு. ரவி
“சங்க இலக்கியம்போல் வங்க இலக்கியத்தைத்
தங்க மலராக்கித் தரணியிலே- எங்கும்
மணம்வீச வைத்தாய் மாமுனியே வாழ்க
கணந்தோறும் உந்தன் கவி”.
” பண்ணொழுகு பாடலைப் பாடென்றனக்கருள்
பாலிக்கும் வேளை யிந்த…
எனத்தொடங்கி,
நண்ணுதற் கான வழி வேறெதும் கண்டிலேன்
நானுமென் களிமயக்கால்
நண்பனென் றேஅழைக் கின்றனன் என்னையாள்
நாதனே ஞானபரனே”
என்று இறைவனோடு தோழமை யோகம் பாராட்டிய அன்னாரின் கீதாஞ்சலியை அருமையான இரட்டைஆசிரிய விருத்தத்தில்
மொழிபெயர்த்த எங்கள் கவிமணியும் நினைவினில் நிழலாடினர்.
உயிர்நாடிகளை மீட்டும் உன்னத எழுத்துக்குச் சொந்தக்காரரை வரையும் ஆவல் உந்தியதின் விளைவு…
கீழ்க்காணும் ஓவியங்கள்…