மெய்க் கீர்த்தி
மரங்கள் கூட அசையாத
வன்னிருட்டில் அவன் நடக்க, நடக்க
இருள் பழகி பாதை தெரிந்தது..
விடியலின் போதவன் போகும்
ஊர் போய் சேர்ந்திருந்தான்.
வரையவே வராது என்றிருந்தவன்
வரைந்து பார்ப்போமே என
வரைந்த ஓவியங்கள்
பெருந்தொகைக்கு விலை போயின..
முயன்று பார்க்கலாமென அவன்
முழு மூச்சாய் முயன்றவை முழுவதையும்
வென்றெடுத்தான்…
போதுமென்ற நிறைவோடு
ஓய்ந்திருக்க
என்ணியவன் ஒதுங்கி இருக்கையிலே
மரணம் அவனை ஆரத் தழுவியது…
படத்துக்கு நன்றி
http://www.visualphotos.com/image/2×4377802/dubai_uae_man_taking_rest_on_park_bench_along