மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் …. ஆஸ்திரேலியா
பேரரக்கர் தனையழித்த பெருமானே போற்றி
பாருலகில் பேரரக்கர் பெருகுகிறார் நாளும்
தீராத தொல்லையினை கொடுக்கின்றார் தினமும்
சிவன்மைந்தா தீர்வுதந்து காத்துவிடு ஐயா
ஊர்சிறக்க உழைக்கின்றார் ஒன்றுங் கிடையாமல்
உளமுடைந்து உணர்விளந்து உழலுகிறார் ஐயா
பாருலகில் கலியெழுந்து ஆடுகிறான் கந்தா
பகையழித்த வேலவனே பொழிந்திடுவாய் கருணை
ஆலமதை உண்டானின் அழகு திருக்குமரா
நீலமயில் நீயமர்ந்து எமக்கருள வேண்டும்
சீலமுடை வாழ்வுதனை தந்திடுவாய் முருகா
திருவடியே சரணமையா சிவானாரின் மைந்தா


Leave a Reply