சி. ஜெயபாரதன், கனடா

தொப்புள் கொடி
ஒன்றா ? இரண்டா ?
அம்மா
தொப்புள் கொடி ஒன்று.
நீர்க் குமிழி யான
வயிற்றில்
தானாய்
ஈரைந்து மாதமாய்
என்னுடல் வடிவானது.
கண், காது, வாய், மூக்கு, தலை
கை, கால், உடம்பு
தோல், முதுகு எலும்பு
உருவாயின.
ஒரு ஊமைப் பொம்மை !
விழிக்காத விழிகள்,
பேசாத வாய்,
கேளாத செவிகள், ஆனால்
காலால் உதைக்கும்.
முழு வளர்ச்சி பெற்று
பூ உலகுக்கு வந்ததும்
சிசுவை
ஆவென அலற
வைத்தது,
வானிலிருந்து
மின்னலாய் பாயும்
ஆன்ம தொப்புள் கொடி

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “ஆன்ம தொப்புள்கொடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.