79 வயது வலுதூக்கும் வீரர், சுப்பிரமணியன்

79 வயதில் வலுதூக்கி, இரண்டு பிரிவுகளில் தங்கப் பதக்கம் வென்றிருக்கிறார், சுப்பிரமணியன். சென்னை மாவட்ட வலுத்தூக்கும் சங்கத்தில், 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான மாஸ்டர்ஸ் போட்டி, சென்னை அம்பத்தூரில் உள்ள ஆப்டிமஸ் உடற்பயிற்சிக் கூடத்தில் நடைபெற்றது. இதில் கிளாசிக், எக்யுப்டு ஆகிய பிரிவுகளில் முதலிடம் பிடித்த சுப்பிரமணியன், சாதிக்க வயது ஒரு தடையில்லை என்பதை நிரூபித்திருக்கிறார். 2023 ஜூலை மாதம், 80 வயதைத் தொட உள்ள சுப்பிரமணியன் உடன் ஒரு சந்திப்பு.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)