செண்பக ஜெகதீசன்
நந்தன வந்தது நலம்தரவே
நன்றாய் மலரந்தது புத்தாண்டாய்,
சிந்தையில் கொண்டிடு சித்திரையை
சீரெலாம் தந்திடும் இத்தரைக்கே,
சிந்திய வியர்வை பலன்தந்தது
சிறப்பெலாம் வாழ்வில் மலர்கின்றது,
வந்திடும் செந்தமிழ்ப் புத்தாண்டிலே
வாழ்த்துவோம் வளமுடன் வாழ்கெனவே…!
பதிவாசிரியரைப் பற்றி
இதுவரை: இரைதேடுவதுடன் இறையும் தேடிய அரசுப்பணி
(நிர்வாக அதிகாரி-நெல்லையப்பர் திருக்கோவில்).
இப்போது: மேலாளர், காசித்திருமடம், ஆச்சிரமம்(சுசீந்திரம்).
ஓய்வுநேரப் பணிகள்: ரசனை(இயற்கை, இலக்கியம்),
எழுத்துப் பணிகள் (பெரும்பாலும் கவிதைகள்)…
கவிதை நூல்கள்-6..
வலைதளங்கள்: வார்ப்பு, திண்ணை,
நந்தலாலா, வல்லமை, முத்துக்கமலம்…