செண்பக ஜெகதீசன்

நந்தன வந்தது நலம்தரவே
நன்றாய் மலரந்தது புத்தாண்டாய்,
சிந்தையில் கொண்டிடு சித்திரையை
சீரெலாம் தந்திடும் இத்தரைக்கே,
சிந்திய வியர்வை பலன்தந்தது
சிறப்பெலாம் வாழ்வில் மலர்கின்றது,
வந்திடும் செந்தமிழ்ப் புத்தாண்டிலே
வாழ்த்துவோம் வளமுடன் வாழ்கெனவே…!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *