தி.ந.இளங்கோவன்

 

இங்கே மனிதர்கள் மட்டுமே

விவாதிக்கப் படுகிறார்கள்.

கருத்துப் பரிமாறல்களுக்கும்

கருத்து மோதல்களுக்கும்

இடமில்லை இங்கே !

நாக்குக்கத்திகள் உரசும் ஓசைகள் !

கொட்டும் வார்த்தை உதிரத்தின் குரூரம் !

தோற்று அலறும் குரல்களின் வேதனை !

வெற்றுச் சவால்களின்,

ஆணவத்தின் எக்காள ஒலிகள் !

இங்கே இன்றைய காவுகள்,

நாளைய பட்டாக்கத்திகள் !

துதி பாடும் நாக்குகள்

நொடிப் பிறழ்வில்

கக்குமிங்கே தீக்கங்குகள் !

கருத்துக் குடமேந்தி வருவோரும்

கருத்துக்காய் குடமேந்தி வருவோரும்

பத்திரமாய் ஒதுங்கிச் செல்லுங்கள்,

கண், காது, வாய் பொத்தி

காந்திமகான் சொன்னது போல் !

இங்கே மனிதர்கள் மட்டுமே

விவாதிக்கப் படுகிறார்கள்.

கருத்துப் பரிமாறல்களுக்கும்

கருத்து மோதல்களுக்கும்

இடமில்லை இங்கே !

 

சித்திரத்துக்கு நன்றி:

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *