நாயும் நாமும்
திருவாரூர் ரேவதி
அபிஷேகம் அலங்காரமுடன்
அறுசுவை உணவினை
சிலையான பைரவர்க்கு
அழகாய்ப் படையலிட்டு
அதைப் பகிர்ந்துண்டு
வீசியெறிந்த எச்சில் இலையில்
மிச்சம் இருக்குமா?
பசியொடு குப்பையைக் கிளரும்
உயிருள்ள பைரவர்கள்.
==============================================
படத்திற்கு நன்றி: http://www.richardsolomonblog.com
Arumai…
good one