மலர் சபா
புகார்க்காண்டம் – 08. வேனில் காதை
யாழ் மீட்டிப் பாடி, புறத்து ஒரு பாணியில் மாதவி மயங்குதல்

அங்ஙனம் அளந்து அறிந்ததோடு
இசை நூலோர் வகுத்த மரபு தவறாமல்
ஐந்தாம் நரம்பாம் இளியைக்
குரலாய் நிறுத்தி
ஏழு நரம்புகளிலும் வாசித்தாள்.

உழை குரலாகவும்
உழை தாரமாகவும்
குரல் குரலாகவும்
குரல் தாரமாகவும்
அகநிலை மருதம் புறநிலை மருதம்
அருகியல் மருதம் பெருகியல் மருதம் எனும்
நால்வகை சாதிப் பண்களையும்
அழகுடன் இசைத்து
வலிவு மெலிவு சமம் எனும்
மூவகை இயக்கத்தாலும்
முறைபட இசைத்துப் பாடினாள்.

அதன் பின்பு
அதன் இனத்தைச் சார்ந்த
திறப்பண்புகளுடன் பாடும் நேரத்தில்
கோவலன் பிரிவதனை நினைவு கூர்ந்து
வாடினாள்; சற்றே மயங்கினாள்.
விளைவாய், எடுத்துப் பாடிய
பாட்டுக்குப் புறம்பான இசை வந்து கலந்தது.
பூங்கொடி போன்ற மாதவி மயங்கினாள்.

அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 36 – 44
http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram24.html

படத்துக்கு நன்றி

http://www.vimlapatil.com/vimlablog/raja-ravi-varma-rules-the-art-world-more-than-100-years-after-his-death-in-1906-at-the-age-of-58/

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *