சு.கோபாலன்
அருளே உருவாய் திருப்பதியில் எழுந்தருளிய ……….. கோவிந்தா!
ஆனந்தம் ஆரோக்கியம் யாவர்க்கும் தந்தருள்வாய்…….. கோவிந்தா
இரக்கம் சுரக்கும் இதயங்களை கொடுத்தருள்வாய்…………..கோவிந்தா
ஈகைக் குணத்தையும் அவற்றோடு தந்தருள்வாய்…………… கோவிந்தா!
உத்தம குணங்களை மானிடர் பெற்றிட அருள்வாய்…….. கோவிந்தா!
ஊறுகளை எதிர்த்து வென்றிடும் உறுதியை தந்தருள்வாய் ..கோவிந்தா!
எங்கும் என்றும் எப்பொழுதும் துணையாய் நின்றருள்வாய்……கோவிந்தா!
ஏற்றமான எண்ணங்களையே என்றும் கொடுத்தருள்வாய்…. கோவிந்தா
ஐந்து பாதகங்கள் என்றும் அண்டிடாமல் காத்தருள்வாய்……… கோவிந்தா!
ஒரு நாளும் உனை மறவாத பேற்றைத் தந்தருள்வாய்……….. கோவிந்தா!
ஓய்ந்து சாய்ந்திடும்போதும் உன் நினைவகலா பேரருள் புரிவாய் கோவிந்தா
அவ்வாறு நடந்துவிட்டால் இப்பிறவிப் பெரும் பயன் பெற்றிடுவோமே!


Leave a Reply