மலர் சபா

புகார்க்காண்டம் – 10. நாடு காண் காதை

அனைத்தும் அறிந்த அறிவுடையவன்,
அறநெறியைக் கடைப்பிடிப்பவன்,
அறிவின் எல்லையைக் கடந்து நிற்பவன்,
உயிர்களுக்கு இன்பம் தருபவன்,
வினைகள எல்லாம் வென்றவன்,
தகுந்ததைச் செய்யும் சித்தமுடையவன்,
செயல்களுக்கு மூலமானவன்,
தருமத்துக்கு முதலானவன்;

தேவர்களின் தலைவன்,
புனிதமானவன் பழமையானவன்,
புலவன் ஆனவன் சினத்தைக் கடந்தவன்,
தேவர்களுள் முதல்வன், இவ்வுலகின் தலைவன்,
பரமன் சிறந்த குணம் உடையவன்,
இவ்வுலகிற்கு விளக்கானவன்;

தத்துவங்களை அறிந்தவன்,
ஐம்புலன்களையும் அடக்கியாள்பவன்,
விண்ணிலிருந்து இயங்குபவன்,
அனைத்துக்கும் மூல காரணமானவன்,
சித்திகள் அறிந்த சித்தன்,
பெரியவன் தலைமைப்பண்பில் சிறந்தவன்,
ஒளியாக விளங்குபவன்,
இறைவன் ஆசிரியன் இயல்பான நற்குணத்தினன்,
எம்முடைய அரசன் குறைவில்லாப் புகழை உடையவன்.

குணத்தில் சிறந்த கோமான்,
எல்லார்க்கும் நன்மை செய்பவன்,
எல்லாச் செல்வமும் உடையவன்,
சுயமாகத் தோன்றியவன்,
நான்கு முகங்களைக் கொண்டவன்,
அங்கம் பயந்தோன், அருகன்,
அருள் தரும் முனிவன்;

பண்ணவன், எண்வகைக் குணங்களையுடைவன்,
விளங்குவதற்கரிய பழம்பொருளானவன்,
விண்ணவன், வேதத்தின் முதல்வன்,
அறியாமை இருளை நீக்குகின்ற ஒளியானவன்.

இத்தகைய சிறப்புப்பெயர்களையும் குணங்களையும்
வேதத்தின் ஒளியாக விளங்குபவனுமாகிய
அருகதேவனைச் சார்ந்து இருந்தால் அன்றி
பிறவி எனும் மூடிய அறையில் இருந்து
வெளியேற முடியாது…

இங்ஙனம் சாரணன் அவனும்
அருகனின் புகழதனை எடுத்தியம்பினன்.

அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:  176 – 191

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.