திருமால் திருப்புகழ் (23)
கிரேசி மோகன்
தானதனத்த தானதனத்த தானதனத்த தானதனத்த
தானதனத்த தானதனத்த -தனதான….
—————————————————————————————————————————-
“சீதையிருப்பை ராகவனுக்கு சேதியுரைத்த வானரஜித்தன்
போலயெனக்கு, நானினிருப்பை -ரமணேசர்
கூறுவிதத்தில் காணவிருப்பு, ஆழியையொத்த மேனியவஸ்த்தை
தாவிகுதித்(து)இ ராவணபுத்தி -தெளிவாக,
ஆதியிருப்ப சோகவனத்து ஆன்மசுகத்தில் ஆழநிலைக்க,
பாரமொழித்து பூமிதனக்கு -எளிதாக,
தேரைநடத்தி நூறையழித்து ஆளஐவர்க்கு (நாலொருவர்க்கு) வாழ்வையளிக்க
போரைநிகழ்த்தி பாரதசத்தம் -இடுவோனே.
தேதிகுறித்து தாமதமற்று வாகனபட்ஷி மீதுயிலக்மி
கூடயிருக்க கீதையுரைக்க -திருமாலே,
வாவியதற்குள் காளியனுச்சி மீதுகுதித்த பாதரசத்தை
ஓதகவிக்குள் நேரில்நடத்த -வருவாயே
சூதில்தொலைத்த மாதுஅழைக்க சேலையளித்து மானம்பிழைக்க
வேகமுடைத்து ஞானமுகக்க -அருள்வாயே
கேசவருக்கும் வாசவருக்கும் கூடிடும்பக்த கோடிகள்பெற்ற
மாமயிலைக்கு மாதவமுக்தி -பெருமாளே”….கிரேசி மோகன்…..
———————————————————————————————————————–