திருமால் திருப்புகழ் (24)
கிரேசி மோகன்
தனனதந்த தனனதான
தனனதந்த தனனதான -தந்ததான….
————————————————————————————————
“குறஅணங்கை மருவவேலர்
உதவவந்த உமைமகேசர் -கொஞ்சுவேழம்
சுடர்மிகுந்த சுதர்சனாரை
வயிறுகந்த பொழுதில்காதி -ரெண்டின்மேலும்
கரமழுந்தி படியமேனி
அமர்ந்தெழுந்து தொழுதுநேமி -கொண்டமாலை
விடியல்கங்குல் மதியம்மாலை
தொழுதுநின்று துயரிலாது -இங்குவாழ்க
சிறுவனென்று வெகுளிமாமன்
இடமிருந்து விரையுமானை -கொம்புசீவி
துடையகன்ற வலியசாணு
ரனைமலங்க தரையில்சாய -த்வந்தமாடி
பிறவிதந்த உறவுமீள
சிறைபுகுந்து தளைகள்வீழ -கஞ்சனாளும்
மனைபுகுந்து அசுரமாமன்
சபைநடுங்க முடிவுகாணும் -எம்பிரானே”
————————————————————————————————————