திருமால் திருப்புகழ் (31)
கிரேசி மோகன்
தனன தனதான தனன தனதான
தனன தனதான தனன தனதான -தனதான….
—————————————————————————————-
வயதில் உருவாகும் வளையும் முதுகேறி
விசனம் பிணிரோகம், வளரும் புவிமோகம் -அதுபோக
உழலும் விவகாரம் உணர அவகாசம்
குருவின் உருவாகி பிறகு உபதேசம் -தரநீயும்
தயவு புரிவாச துளசி அணிமார்ப
வனஜ மனையோடு வினதை மகனேறி-வரவேணும்
கயவன் துரியோத னனுடன் குலம்சாய
குதிரை கடிவாளம் கொளும்வி ஜயன்தேரின் -பெருமாளே
———————————————————————————————————————