திருமால் திருப்புகழ் (96)
கிரேசி மோகன்

கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
—————————————————-
’’கண்ணன் அந்தாதி’’
———————————–

பகல்பத்து ராப்பத்து, புண்ணிய நாளில்,
அகில்மணக்கும் சன்னிதியில் ஆழ்வார், -முகில்நிறத்தன்,
மீதுகந்த பாசுரத்தைக், காதுகந்து கேட்போர்க்குப்,
பூதலத்தில் ஏது பிறப்பு….(86)
பிறப்பால் அரசன், விருப்பால் இடையன்,
திருப்பாற் கடலிலவன் தேவன், -பொறுப்பாய்,
இருப்போரைப் பேண, மறுப்போர்கள் நாண,
அறப்போர் புரிந்தஅவன் ஆண்….(87)
ஆணானாய், பெண்ணானாய், மீனானாய், ஏனமானாய்,
தூண்தோறும் சிங்கத் துருவானாய், -கூனானாய்,
வானானாய், ராமனாய் மூணானாய், கண்ணனானாய்,
நானாவாய் நாராய ணா….(88)
நாத்தழும்பு கொள்ளஅப், பூத்திரு மார்பனை,
தோத்தரிப்போர்(கு) இல்லை துயர்மனமே, -ஆத்திரம்,
காமம், அகங்காரம் ,கோபம், பொறாமையை,
நாமம் துலக்கிடும் நீறு….(89)
நீராய், நெருப்பாய், நிலம்காற்று, நீள்விசும்பாய்,
பாராய், பரந்தாமன் பார்வையாய், -மாறா(து),
இருந்தென்றும் வாழ்வை, இருண்டாலும் கண்ணன்,
கருந்தேகம் என்றதனைக் கொள்….(90)
———————————————————————————————————————-
படங்களுக்கு நன்றி
http://kamadenu.blogspot.in/2013_11_01_archive.html