பேராதனை பல்கலைகழக தமிழ் சிறப்புப் பட்டதாரி.அத்தோடு, கல்வியியல் துறையில் டிப்ளோமா, சமூகவியல் துறையில் டிப்ளோமா,கற்பித்தல் நுணுக்கத்தில் முதுகலை தத்துவமானி பட்டங்களையும் பெற்றவர்.கல்வித்திணைக்களத்தில் உதவிக் கல்விப் பணிப்பாளராகவும்,வட இலங்கை புனித பிரான்சிஸ் சேவியர் செமினறியில் பகுதி நேர தமிழ், இந்துகலாசார விரிவுரையாளராகவும், யாழ்/ பேராதனை பல்கலைக்கழகங்களின் வெளிவாரி பட்டப்படிப்புப்பிரிவில் தமிழ் விரிவுரையாளராகவும்,இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் அறிவிப்பாளராகவும், நாடகத்தயாரிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். மாற்றம்,உதயன்,ஈழ நாடு, சிந்தாமணி, உதயசூரியன் இந்துசாதனம், மெல்லினம், உதயம்,பத்திரிகைகளில்.. கவிதை, கட்டுரை,சிறுகதை,விமர்சனம், ஆகியவற்றை எழுதியுள்ளார்.10க்கு மேற்பட்ட நூல்களையும்,100 ஓரங்க நாடகங்களையும்,10க்கு மேற்பட்ட வில்லுப்பாட்டுக்களையும்,20க்கு மேற்பட்ட நாட்டிய நாடகங்களையும், எழுதியுள்ளதோடு.. “முதற்படி” என்னும் குறுந்திரைப்படத்துக்கு கதை வசனம் எழுதி நடித்து 2007ல் அவுஸ்த்திரேலியாவில் மெல்பேண் நகரில் வெளியீடும் செய்யப்பட்டது.ஈழத்தில் பல ஸ்தலங்களுக்கு ஊஞ்ஞல் பாடியுள்ளதோடு.. அண்மையில் மேற்கு அவுஸ்த்திரேலியா பேர்த் மாநகரில் கோவில்கொண்டிருக்கும் பாலமுருகப்பெருமான் மீதும் ஊஞ்ஞல் பாடியுள்ளார்.2008ல் மதுரைமாநகரில் நடைபெற்ற அகில உலக சைவ சித்தாந்த மாநாட்டில் புராணப்பகுதிக்கு தலைவராகவும், ஆய்வுக் கட்டுரையாளராகவும் விளங்கியுள்ளார்.அண்மையில் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று அங்கெல்லாம்.. தமிழ்,கலாசாரம், இந்துசமயம்,சம்பந்தமாக விரிவுரைகள் ஆற்றியுள்ளார்.லண்டனில் ஜி.ரி.வி. நிலையத்தார் சமயம்,தமிழர்பண்பாடுசம்பந்தமாக இரண்டு தினங்கள் பேட்டி கண்டு நேரடியாக ஒளிபரப்புச்செய்தனர்.
தற்போது மெல்பேண் தமிழ்ச்சங்கத்தின் ஆலோசகராகவும்,விக்டோரியா இந்து கல்விமையத்தின் ஆலோசகராகவும், தமிழ் அவுஸ்த்திரேலியன் சஞ்சிகையின் இணை ஆசிரியராகவும் விளங்குகிறார்.
பூர்வீகம் தமிழ்நாடு தாராபுரம். வளர்ந்தது, படித்தது, வேலை பார்த்தது, யாவுமே இலங்கையில்..தற்போது குடியுரிமை பெற்றிருப்பது அவுஸ்த்திரேலியாவில்.
எண்ண ரதமேறி நம் கவிஞர் கண்ணதாசன் எழுதிவைத்த எல்லாமே…
பொன்னாக மின்னுதன்றோ… வண்ணத்தமிழ் அங்கே வாழும் தமிழாகி
எந்நாளும் வென்றிடுதே! சொல்லாத சொல் எங்கே.. சுவை சிந்தும் பொருள் அங்கே..
அணு அணுவாய் அச்சுவையை அறிந்தவர்கள் ரசிகரன்றோ?
உங்கள் வரிகளில் அந்த சுகத்தை நானும் கண்டேன்…
எந்த வரி இந்தக் கவிதைக்குத் தலைப்பாகும் என்று நான் எதிர்பார்த்தேனோ…
அந்த வரியே அங்கு மகுடம் சூட்டியதைப்போல் மிளிர்ந்ததை என்ன சொல்வேன்?
நன்றிகளும்.. இனி எந்த நாளும் தொடர்புகளும்.. வளர்க..
அன்புநிறை ஜெயராமசர்மா அவர்களுக்கு..
காவிரிமைந்தனின் கனிவான வணக்கங்கள்.
எண்ண ரதமேறி நம் கவிஞர் கண்ணதாசன் எழுதிவைத்த எல்லாமே…
பொன்னாக மின்னுதன்றோ… வண்ணத்தமிழ் அங்கே வாழும் தமிழாகி
எந்நாளும் வென்றிடுதே! சொல்லாத சொல் எங்கே.. சுவை சிந்தும் பொருள் அங்கே..
அணு அணுவாய் அச்சுவையை அறிந்தவர்கள் ரசிகரன்றோ?
உங்கள் வரிகளில் அந்த சுகத்தை நானும் கண்டேன்…
எந்த வரி இந்தக் கவிதைக்குத் தலைப்பாகும் என்று நான் எதிர்பார்த்தேனோ…
அந்த வரியே அங்கு மகுடம் சூட்டியதைப்போல் மிளிர்ந்ததை என்ன சொல்வேன்?
நன்றிகளும்.. இனி எந்த நாளும் தொடர்புகளும்.. வளர்க..
அன்புடன்..
காவிரிமைந்தன்
அபுதாபி
எண்ணமெல்லாம் நிறைந்து
எழுதவைத்த,
எழுத்தை ரசிக்கவைத்த
கண்ணதாசன் புகழ்பாடும
வண்ணத்தமிழ்க் சவிதை நன்று,
வாழ்த்துக்கள்…!