திருமால் திருப்புகழ் (97)
கிரேசி மோகன்
——————————————————————————————————————
கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
———————————————————
’’கண்ணன் அந்தாதி’’
————————————
கொள்ளை அவன்கொள்கை, பிள்ளை அவன்செய்கை,
இல்லை எனும்சொல்லாய் உள்ளவன், -முள்ளை,
அவன்பெயர் சொல்லி, அணிந்திட மல்லி,
அவனேநான் ஆதல் அமைவு….(91)
அமைவதிங்(கு) எல்லாம், அவனருளால் அன்றோ,
சமயம் அவனால் அமையும், -குமையும்,
மனதே ஒருமுகம், ஆகி அவனை,
உனதே உனதாக்கி உய்….(92)
உய்ய வழியறியேன், உன்னிடம் சொல்லயென்ன,
பொய்யில் உழல்கிறேன் அய்யனே, -கையில்
கனியாக நீயிருந்தும், காய்ந்தேனே காமத்தில்,
முனியாக வந்தென்னை, மாற்று….(93)
மாற்ற உடையின்றி, மானமே கூரையாய்க்,
காற்றைப் புசிப்போரும் காணாத, -நாற்றத்
துழாய்மணி மார்பா, திருவருளை இந்தக்,
குழாய்வழி சோவென்று, கொட்டு….(94)
கொட்டும் மழைக்குக், குடையாகக் குன்றினைச்,
சுட்டு விரலால் சுமந்தவா, -திட்டம்,
உனக்குண்டோ என்னை, உருப்படியாய் ஆக்க,
குணக்குன்றே கொள்ளுந்தன், கீழ்….(95)
—————————————————————————————————————-
படங்களுக்கு நன்றி :
http://kamadenu.blogspot.in/2006_03_01_archive.html