கிரேசி மோகன்

Indra Garvabhangam, acrylic on canvas, 2005 Keshav
Indra Garvabhangam,
acrylic on canvas, 2005 Keshav

——————————————————————————————————————
கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
———————————————————
’’கண்ணன் அந்தாதி’’
————————————

Harineela hari, oil on canvas, 2005 Keshav
Harineela hari,
oil on canvas, 2005 Keshav

கொள்ளை அவன்கொள்கை, பிள்ளை அவன்செய்கை,
இல்லை எனும்சொல்லாய் உள்ளவன், -முள்ளை,
அவன்பெயர் சொல்லி, அணிந்திட மல்லி,
அவனேநான் ஆதல் அமைவு….(91)

அமைவதிங்(கு) எல்லாம், அவனருளால் அன்றோ,
சமயம் அவனால் அமையும், -குமையும்,
மனதே ஒருமுகம், ஆகி அவனை,
உனதே உனதாக்கி உய்….(92)

உய்ய வழியறியேன், உன்னிடம் சொல்லயென்ன,
பொய்யில் உழல்கிறேன் அய்யனே, -கையில்
கனியாக நீயிருந்தும், காய்ந்தேனே காமத்தில்,
முனியாக வந்தென்னை, மாற்று….(93)

மாற்ற உடையின்றி, மானமே கூரையாய்க்,
காற்றைப் புசிப்போரும் காணாத, -நாற்றத்
துழாய்மணி மார்பா, திருவருளை இந்தக்,
குழாய்வழி சோவென்று, கொட்டு….(94)

கொட்டும் மழைக்குக், குடையாகக் குன்றினைச்,
சுட்டு விரலால் சுமந்தவா, -திட்டம்,
உனக்குண்டோ என்னை, உருப்படியாய் ஆக்க,
குணக்குன்றே கொள்ளுந்தன், கீழ்….(95)

—————————————————————————————————————-

படங்களுக்கு நன்றி :

http://kamadenu.blogspot.in/2006_03_01_archive.html

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *