கிரேசி மோகன்

 

 Bhagavatham -Rukmini haranam Keshav
Bhagavatham -Rukmini haranam Keshav

கண்ணன் திருப்புகழ்(வெண்பா)
———————————————————
’’கண்ணன் வெண்பாக்கள்’’
———————————————–

Bhagavatha - Vamana avatara - Keshav
Bhagavatha – Vamana avatara – Keshav

கள்ளா குருவாயூர், பிள்ளாய் வருவாயே,
உள்ளம் நிறைவாக என்முன்னே, – தெள்ளிய,
மாமுனிக்கு மாதவா, காமினிக்கு காதலா,
யாமினிக்க வாயாத வா….(150)

 
கனிச்சுவை ராதை, கமலஇதழ் கவ்வி,
துணிச்சலுடன் முத்தம் திணித்து, -அனிச்ச
மலராள் அலறும்முன், மன்னிப்பு கேட்பான்,
தளரான் எதற்கும் துணிந்து…(151).

 
கண்ண புரத்துக், கருமணியை கற்கண்டை,
வண்ணம் சிறுத்து வடிவாகி, -முன்னம்,
வரமேற்று விண்ணளந்த, வாமன விக்ரம்,
சிரமுற்றோர் இருதாள் சரண்….(152)

 
கண்ணபிரான் காயாம்பூ, வண்ணபிரான், வெண்ணைமண்,
தின்னபிரான், நற்கீதை சொன்னபிரான், -பின்னமுறான்,
முன்னவனாம் தென்மதுரை, அன்னையவள் அண்ணனையே,
எண்ணவரும் ஏகாந்தம் இங்கு….(153)

164486_4339481400471_1764566644_n

பாரதியாருக்கு நன்றி
———————
கண்ணனென் சேவகன், கண்ணனென் காவலன்,
கண்ணனென் மந்திரி, நண்பனென, -சொன்னவன்
கண்ணனென் சாக்லேட், கிருஷ்ணாவாய் ஆக்கினான்,
புண்ணிய மாச்சென் பிறப்பு….(154)

 
கண்ணிநுண் தாம்பினால், கட்டுண்ட காரணம்,
அன்னையின் அன்பினாலா, அல்லது, -கண்ணனே,
ஓயாத லீலையின், மாயா வசப்பட்டு,
ஆயாசம் ஆனதா லா….(155)

—————————————————————————————————-

படங்களுக்கு நன்றி:

http://bhagavatham.blogspot.in/

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *