பட்டணந்தான் போகலாமடி……..
–கவிஞர் காவிரிமைந்தன்.
இயக்குனர் அ. சுப்பாராவ் இயக்கத்தில் வெளிவந்த அன்னபூர்ணா பிக்ச்சர்ஸ் ‘எங்க வீட்டு மகாலெட்சுமி‘ (1957) திரைப்படத்தில் இடம்பெற்ற உடுமலை நாராயணகவியின் பாட்டு! ஈ.வி.சரோஜா மற்றும் குழுவினர்தம் நாட்டியத்தோடு ஒரு தெம்மாங்கு பாடல்! இசையமைப்பாளர் மாஸ்டர் வேணு அவர்கள் அமைத்திருக்கும் தாளஜதிக்கட்டு கலந்த ஒரு மெட்டு! கேட்கும் நெஞ்சங்களை ஈர்க்கின்ற வர்ணங்கள் பாடல் முழுவதும் நிறைந்திருக்க.. இத்திரைப்படம் வந்த காலக்கட்டத்தில் மக்கள் மனதில் எழுந்த பெரும் வினாவிற்கு விடை சொன்ன பாட்டு!
பட்டண வாழ்க்கையோடு பட்டிக்காட்டு வாழ்க்கையை ஒப்பிட்டு ஒரு பட்டிமன்றம் பாடலில் நடக்க.. மேலும் இதிலே உண்டாகும் குழப்பங்களுக்கெல்லாம் சரியான பதில் சொல்லித்தந்த பாட்டு!
கவிஞரின் சாதுர்ய வரிகள் ஒரு சமுதாய பிரச்சினையை மையமாக வைத்து பின்னியிருக்க.. தமிழகத்தின் பிரபலமான தெம்மாங்கு வகையில் இசை வார்க்கப்பட்டு சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் பி.சுசீலா குழுவினர் பாடிய பாடல்!
அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் சொற்களையே அக்கதாபாத்திரங்களின் வாயிலாய் பாடவைத்து ஒரு பாடலுக்குள்ளெ பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சி நடத்தியிருக்கிறார் பாருங்கள்!
ஆண், பெண் இணைந்த வாழ்வில் ‘புரிதல்’ என்பது எத்தனை அவசியம் என்பதை வெள்ளித்திரையில் விளக்கம்தந்த பாடலாக.. அன்றுதொட்டு இன்றுவரை மக்கள் கேட்க விரும்பும் பாடல்கள் வரிசையில் காற்றலைகளில் தவழ்ந்துகொண்டிருக்கும் பாடல்!
கர்நாடக இசையையும் தெம்மாங்கு வடிவத்தையும் கலந்து தரும் வித்தகம் தெரிந்த இசையை – நீண்ட நெடிய இப்பாடலுடன் கலந்து நேர்த்தியாக உருவாக்கித் தந்திருக்கிறார் இசை அமைப்பாளர் என்றே சொல்லலாம்!
http://youtu.be/9HpNCIItWN8
காணொளி: -http://youtu.be/9HpNCIItWN8
பட்டணந்தான் போகலாமடி
படம்: எங்க வீட்டு மகாலெட்சுமி (1957)
பாடல்: உடுமலை நாராயணகவி
இசை:எம்.வேணு
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன், பி. சுசீலாஹ்ஹ்ம் மூட்டயக் கட்டிக்க.. எதுக்கு?
பட்டணந்தான் போகலாமடி பொம்பளே பணங்காசு தேடலாமடி – நல்ல
கட்டாணி முத்தே என் கண்ணாட்டி நீயும் வாடி பொண்டாட்டி தாயேடவுனு பக்கம் போகாதீங்க மாப்பிள்ளே டவுனாகிப் போயிடுவீங்க – அந்த
டாம்பீகம் ஏழைக்குத் தாங்காது பயணம் வேண்டான்னா கேளு மாமாகெட்டவுங்க பட்டணத்த ஒட்டிக்கோணும் என்பதால
கெட்டவுங்க பட்டணத்த ஒட்டிக்கோணும் என்பதால
பட்டிக்காட்ட விட்டுப்போட்டுப் பல பேரும் போவதால
கட்டிச் சோத்தக் கட்டிக் கொள்ளடி பொம்பளே
தட்டிச் சொன்னா கேக்க மாட்டேண்டி – நல்ல
கட்டாணி முத்தே என் கண்ணாட்டி நீயும் வாடி பொண்டாட்டி தாயேவேலை ஏதுங்க கூலி ஏதுங்க வெக்கக்கேட்ட சொல்றேன் கேளுங்க – அங்கே
வேலை ஏதுங்க கூலி ஏதுங்க வெக்கக்கேட்ட சொல்றேன் கேளுங்க
காலேஜ் படிப்பு காப்பி ஆத்துதான் பிஏ படிப்பு பெஞ்சு தொடைக்குதாம்
ஆளை ஏச்சு ஆளு பொழைக்குதாம் அஞ்சுக்கு ரெண்டு கஞ்சிக்கலையுதாம்
மேலே போறது நூத்துல ஒண்ணு மிச்சமுள்ளது லாட்டரியடிக்குதாம்எப்படி?
ஒண்ணான சாமி எல்லாம் ஒண்ணுமே பண்ணாமே தவிக்கையிலே – மாப்பிள்ளே
ஒண்ணான சாமி எல்லாம் ஒண்ணுமே பண்ணாமே தவிக்கையிலே
உன்னாலே என்னாகும் எண்ணமே போனா பின்னாலே கேடு மாமாராத்திரி பகலா ரிக்சா இழுப்பேன் நைஸா பேசி பைசா இழுப்பேன்
அம்மா ஒதுங்கு ஒதுங்கு….
ராத்திரி பகலா ரிக்சா இழுப்பேன் நைஸா பேசி பைசா இழுப்பேன்
சினிமா ட்ராமா சர்க்கஸ் பார்ப்பேன் ராஜா மாதிரி சிகரெட்டும் பிடிப்பேன்
வேத்துப் புடுங்கினா பீச்சுக்குப் போவேன் மீந்தப் பணத்திலே மீனு வாங்குவேன்
ஆத்தாடி உன் கையில குடுப்பேன் ஆக்கச் சொல்லியே சாப்பிட்டுப் படுப்பேன்மேல ….
இதுக்கு மேல சொல்ல மாட்டேண்டி பொம்பள இந்த ஊரில் இருக்க மாட்டேண்டி – நான்
இப்போதே போவணும் உங்கொப்பாவைக் கேட்டு ஏதாச்சும் வாங்கி வாடிமனுஷன மனுஷன் இழுக்கற வேலை வயிறு காஞ்சவன் செய்யற வேலை
மனுஷன மனுஷன் இழுக்கற வேலை வயிறு காஞ்சவன் செய்யுற வேலை
கழுத்துக்கு மீறி பணம் வந்த போது மனுஷன சும்மா இருக்க விடாது
என்னை மறந்து உன்னை மறந்து எல்லா வேலையும் செய்வே துணிஞ்சு
இரவு ராணிகள் வலையில விழுந்து ஏமாந்து போவே இன்னும் கேளுஅப்புறம்..
போலீசு புலி புடிக்கும் மாமா புர்ராவ பேத்தெடுக்கும்
அங்கே போவாதே வீணாக சாவாதே மாமா பொஞ்சாதி பேச்சக் கேளுஅப்படியா ஆஹா …
நீ ஒலகம் அறிஞ்ச பொம்மனாட்டி நான் ஒண்ணுமே தெரியாக் கம்மனாட்டி
நீ ஒலகம் அறிஞ்ச பொம்மனாட்டி நான் ஒண்ணுமே தெரியாக் கம்மனாட்டி
ஊருவிட்டு ஊரு போனா சீரு கெட்டுப் போகுமுன்னு
ஊருவிட்டு ஊரு போனா சீரு கெட்டுப் போகுமுன்னு
உண்மையோட சொன்ன சொல்லு நன்மையாகத் தோணுதுபட்டணந்தான் போக மாட்டேண்டி உன்னையும் பயணமாகச் சொல்ல மாட்டேண்டி நல்ல
கட்டாணி முத்தே என் கண்ணத் தொறந்தவ நீ தான் பொண்டாட்டி தாயேஎன்னைத் தனியா விடவே மாட்டேன்னு என் தலைமேல் அடிச்சு சத்யம் பண்ணு
எங்கப்பனான சத்தியம் சத்தியம் சத்தியம்…
ஏரோட்டி பாத்தி புடிச்சு அதிலே நீர் பாய்ச்சு நெல்ல வெதெச்சு – நம்ம
ஊரோடு ஒண்ணாக உள்ளதக் கொண்டு நாம் உல்லாசமாக வாழ்வோம்
ஏரோட்டி பாத்தி புடிச்சு அதிலே நீர் பாய்ச்சு நெல்ல வெதெச்சு – நம்ம
ஊரோடு ஒண்ணாக உள்ளதக் கொண்டு நாம் உல்லாசமாக வாழ்வோம்