கிரேசி மோகன்

Vaatsalyam series. #krishnafortoday - Keshav
Vaatsalyam series. #krishnafortoday – Keshav

கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
———————————————————-
”கண்ணன் வெண்பாக்கள்’’
————————————————–

Krithi drawings - Shambo, Shambo, Shivashambo Swayambo... Keshav
Krithi drawings – Shambo, Shambo, Shivashambo Swayambo… Keshav

பூவிருக்கும் உந்தியா, காவிருக்கும் வேங்கட,
கோவிலுக்குள் வாழ்கின்ற கோவிந்தா, -பாவிருக்கும்,
ஆழ்வார்கள் நாவிருக்கும், ஆண்டவா வாயிருக்க,
தாழ்வான போதுமென்னுள் தாவு….(296)

என்னத்தைக் கண்டேன்நான், உன்பித்தம் கொண்டதால்,
கண்ணைத் திறந்துகேள் கார்முகிலே, -உன்னொத்த,
தெய்வமிங்(கு) இல்லையென்ற, தற்பெருமை தேவையா,
தொய்வுறுமுன் தற்பரமே தோன்று….(297)

குன்றெடுத்த கோவிந்தன், கன்றணைக்கும் கோபாலன்,
என்றுனக்கு கோலங்கள் ஏராளம், -இன்றெனக்கு,
காட்சி அளித்திடுவாய், மோட்ச அரசாங்கம்,
ஆட்சிசெய் சாட்சிபூதம் ஆய்….(298)

வண்டரி யென்றரி, யாமலே வந்திரு,
புண்டரி காட்ஷத்தைப் பார்க்கின்ற, -பண்டரி,
விட்டலா செங்கலை, விட்டுவா வெவ்வினை
கொட்டுதே தேளாய்க் கடுத்து….(299)

நித்திய சூரியாய், நூற்றியெட்டாம் தேசத்து,
முத்தியை வேண்டேன் முளைக்கதிரே, -சத்தியம்,
நன்குணர்ந்து பேத, நிலைகடந்து பூமியில்,
நின்குணமாய் நிற்கவேண்டும் நான்….(300)

வீசும் புயலில், விளையாடும் தென்றலில்,
நாசிக்குள் சென்றுவரும் நம்மூச்சில், -ஓசை,
இலாத பொழுதிலும் ஓமென்(று) ஒலிக்கும்
கலாபக் கடவுளைக் காண்….(301)

—————————————————————————————————————

படத்திற்கு நன்றி:

http://kamadenu.blogspot.in/2013_12_01_archive.html

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.