உள்ளமெல்லாம் தள்ளாடுதே…..
–கவிஞர் காவிரிமைந்தன்.
அன்புமொழிபேசி என் ஆசைவலைவீசி
கன்னிமீனை அள்ளிக்கொள்ள கை தாவுதே!
அழகியல் என்பது அகம் சார்ந்தது. எனவேதான் காதல் மனதிற்குள் பூக்கிறது! அந்த ஒற்றை வார்த்தைக்கான அர்த்தம் மட்டும் இந்த உலகமெங்கும் வியாபித்து நிற்கிறது!
எத்தனை முறை இரவுகள் வந்தாலும் அந்த இரவில் ‘நிலா’ அழகுதானே! புத்தம் புதியதாய் காட்சி தருவது ஒன்றும் புதிதில்லையே.. கற்பனைகள் கட்டவிழ்ந்துவிடும்போது உள்ளமெல்லாம் தள்ளாடுவது நியாயமாகிவிடுகிறது!
இன்பம்பொங்கும் வெண்ணிலாவை அன்று எழுதித் தந்தவர் இயற்றியிருக்கும் இன்னொரு பாடலிது! கவிஞர் கு.மா.பாலசுப்பிரமணியன் இயற்றி இந்தி இசையமைப்பாளர் சலீல் செளத்ரி அவர்கள் அமைத்த இசையில் கே.ஜே.யேசுதாஸ், எஸ்.ஜானகி இணைந்து பாடிய பாடல்!
வற்றாத கடலோரம் காதல் வலைக்குள் அகப்பட்ட காதலர்களின் உற்சாக ராகமிதோ..
உள்ளமெல்லாம் தள்ளாடுதே..
உள்ளுக்குள்ளே ஏதோ எண்ணங்கள் போராடுதே..
துள்ளுமலை தொட்டு என் காலை முத்தமிட்டு
வெள்ளிநிலா ஊஞ்சலிலே தாலாட்டுதே!!
உள்ளமெல்லாம் தள்ளாடுதே..
உள்ளுக்குள்ளே ஏதோ எண்ணங்கள் போராடுதே..
அன்புமொழிபேசி என் ஆசைவலைவீசி
கன்னிமீனை அள்ளிக்கொள்ள கை தாவுதே!
விஜய்காந்த் பூர்ணிமா ஜோடியில் ‘தூரத்து இடி முழக்கம்’ திரைப்படத்திற்காக.. கே.விஜயன் இயக்கத்தில் வார்க்கப்பட்ட இப்பாடல் வரிகளாலும் இசையாலும் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது!
http://youtu.be/GzIrzj1X82w
காணொளி: http://youtu.be/GzIrzj1X82w
திரைப்படம்: தூரத்து இடி முழக்கம்
இயக்கம்: கே.விஜயன்
பாடல்: கவிஞர் கு.மா.பாலசுப்பிரமணியன்
இசை: சலீல் சௌத்திரி
பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ், எஸ்.ஜானகிஉள்ளமெல்லாம் தள்ளாடுதே..
உள்ளுக்குள்ளே ஏதோ எண்ணங்கள் போராடுதே..
துள்ளுமலை தொட்டு என் காலை முத்தமிட்டு
வெள்ளிநிலா ஊஞ்சலிலே தாலாட்டுதே!!உள்ளமெல்லாம் தள்ளாடுதே..
உள்ளுக்குள்ளே ஏதோ எண்ணங்கள் போராடுதே..
அன்புமொழிபேசி என் ஆசைவலைவீசி
கன்னிமீனை அள்ளிக்கொள்ள கை தாவுதே!வாய்மொழி சொன்னால் வாழ்வும் ஆரம்பமா
வண்டுவந்து தீண்டாமல் பூவாகுமா
கொண்ட ஆசைகள் கை கூடுமா?..
எல்லையில்லா இன்பங்கள் கொண்டாட்டமா
எண்ணும் யோகங்கள் உண்டாகுமா?ஆண் மனம் வைத்தால் அஞ்சி பின் வாங்குமா
நம்பியுள்ள நெஞ்சங்கள் ஏமாறுமா
எந்தன் சொந்தங்கள் வீணாகுமா?
தாலிகட்டி வேலிகட்டி காப்பாற்றுவேன்
தங்கம் போல் உன்னைப் பாராட்டுவேன்!