திருமால் திருப்புகழ்….திருநீர் மலை அணிமா மலர்மங்கை சமேத நீர்வண்ணப் பெருமாள்….
திருநீர் மலை ‘’நீர்வண்ணப்’’ பெருமாளை 3தினங்களுக்கு முன் தரிசித்தேன்….திருமங்கை ஆழ்வார் வந்த போது மலையைச் சுற்றி தண்ணீர் இருந்ததால் பெருமாளை தரிசிப்பதற்காக எதிர் மலையில், சூழ்ந்த தண்ணீர் வற்ற ஒருமாத காலம் காத்திருந்து, பிறகு தரிசித்து…. மலையடிவாரம் நின்ற பெருமாளை ‘’நீர்வண்ணா’’ என்று பாடி மங்களாஸாஸனம் செய்தார் என்பது ஐதீகம்….பூதத்தாழ்வாரும் இவரைப் பாடியிருக்கிறார்….ஆழ்வானாக முடியாவிட்டாலும் பதங்களில் வீழ்வானாக இருப்போமே என்ற ஆசையில் எழுதிய ‘’திருமால் திருப்புகழ்’’….கிரேசி மோகன்….
—————————————————————————————————————–
தனனா தனதந்த தனனா தனதந்த
தனனா தனதந்த -தனதான….
————————————————————————————————–
மரணா வதைவென்ற எமனார் எதிர்நின்ற
ரமணார் வழிசென்று -லகுவாக
எனைநான் அதுவென்று அறிவால் உணர்வென்ற,
அருணா சலர்பங்கு -உமையாளின்,
கரவே லதுகொண்டு திருவா வினன்குன்றில்
அரைகோ வணம்தெண்ட -குருபாலன்
மருமா னவன்கொஞ்ச குறமான் மகள்தந்த
முறைமா மமுகுந்த -அனுபூதி
பெறநான் சுடர்சங்கு கதைவாள் சிலைஐந்து
படையோ டலைமங்கை -உடனேள
புயமா யிரம்கொண்ட படசே டரணைந்த
கடலா டிடும்ரங்க -அருள்வாயே
ஒருநாள் ஜலமங்கை மலைசூழ் தினம்வந்து
திருவாய் மொழிமங்கை, -உபசார
அணிமா மலர்மங்கை அருகே வலம்கொண்டு
திருநீர் மலைநின்ற. -பெருமாளே….கிரேசி மோகன்….
படங்களுக்கு நன்றி : http://enthamizh.blogspot.in/2012/02/450-thiruneermalai.html