காவிரி மைந்தன்

stepsஅன்பின் சங்கமம் – ஆண், பெண் இருவரது உறவில் அடிப்படையானது! தன்னை நேசிக்கம் நெஞ்சமது என்கிற போது, தாமாக ஊற்றெடுக்கம் கங்கையாகிறது!  ஊன், உறக்கம் யாவும் மறந்து உறவை நினைக்கிறது! ஏன் எதற்கு என்கிற கேள்விகள் எழுகின்றன!  படபடக்கும் நெஞ்சத்தோடு பார்வை தேடி அலைகிறது!  துடிதுடிக்கும் இதயத்தில் தூவானம் போடுகிறது!  அவனுக்கு அவளென்பதும், அவளுக்கு அவனென்பதும் ஆனந்தப் புதையலாகிறது!  சரியாகச் சொல்லப்போனால், வாழ்க்கை சொர்க்கபுரியாகிறது!  இந்த நிலை தொடர்கிறதா?  பிரிவு வந்து சேர்கிறதா?  பாதிப் பாதியென ஆன இருவருமே பரிதவிக்கும் நிலைதானே பிரிவுவரும் வேலைதன்னில்!  அழுவதுகூட ஆனந்த சுகமென்றே அடிமனம் நினைக்கும்!

காரணம் தெரியாமல் கதறும் நிலைதன்னில்.. கதாநாயகன் பாடுகிறான்! கதையின் ஓட்டத்தில் கதாநாயகி அவனைப் பிரிகிறாள்! எங்கிருந்தோ வந்தாள் என்கிற திரைப்படத்தில் நடிகர்திலகத்தின் மகோன்னத நடிப்பில் – பிரிவுக்கு ஆயிரம் பொருள் சொல்லும் முகபாவனைகளுடன்.. புலம்பலின் வெளிப்பாடுகளுக்கு வார்த்தைகள் வழங்கிய கவியரசு கண்ணதாசன்!  நெஞ்சைப் பிழியும் வண்ணம் இசை அமைத்திருக்கும் மெல்லிசை மன்னர்!!

நான் உன்னை அழைக்கவில்லை என் உயிரை அழைக்கிறேன்
கண்ணை மறைத்துக்கொண்டால் மனதில் எண்ணம் மறைவதில்லை
நான் சின்னக் குழந்தையம்மா சொல்லத் தெரியவில்லை
பிள்ளை மழலையிலே உனக்கும் உள்ளம் புரியவில்லை

தத்தளிக்கும் மனதின் தவிப்புகளிதுவா? இதயத்தின் வலியை உணர்த்தி நிற்கும் வரிகளா?  கண்களிரண்டும் கலங்கித் ததும்பும்..சொல்லும் வார்த்தையில் துயரம் வழியும்!  உயிரூட்டியிருக்கிறார் மெல்லிசை மன்னர்!  உணர்வூட்டியிருக்கிறார் – டி.எம்.செளந்திரராஜன்.

திரைப்பாடலில் பாவங்கள் காட்டி நடிக்க ஒரு நடிகர் திலகமும் .. பாடிக் கொடுக்க ஒரு  டி.எம்.எஸ்-ம்  மெட்டமைக்க ஒரு எம்.எஸ்.வியும் பாடல் வடித்துத் தர கவிஞர் கண்ணதாசனும் – தேவன் தந்த வரங்களா?

இதைப்போன்ற பாடல்கள் எத்தனை தந்தாலும் ரசிப்பதற்கு கோடான கோடி இதயங்களும் – பிரிவு என்கிற கடலில் தள்ளப்படும் ஒவ்வொரு உள்ளதிலும் அலைமோதும் பாடலிது!

என்னை படைத்த தெய்வம் இன்னும் கண்ணைத் திறக்கவில்லை
உன்னை அனுப்பி வைத்தான் ஆனால் உனக்கும் கருணை இல்லை
இருண்ட வீட்டில் அன்பு விளக்கு இருக்க கூடாதா அம்மம்மா.. இரக்கம் பிறக்காதா

http://www.youtube.com/watch?v=XNOjcAZJoSM

Engirundho-Vandhalநான் உன்னை அழைக்கவில்லை என் உயிரை அழைக்கிறேன்
கண்ணை மறைத்துக்கொண்டால் மனதில் எண்ணம் மறைவதில்லை
நான் சின்னக் குழந்தையம்மா சொல்லத் தெரியவில்லை
பிள்ளை மழலையிலே உனக்கும் உள்ளம் புரியவில்லை

நான் உன்னை அழைக்கவில்லை என் உயிரை அழைக்கிறேன்
கண்ணை மறைத்துக்கொண்டால் மனதில் எண்ணம் மறைவதில்லை

என்ன தவறு செய்தேன் அதுதான் எனக்கும் புரியவில்லை
வந்து பிறந்துவிட்டேன் ஆனால் வாழத் தெரியவில்லை
அருகில் இருந்து சொல்லிக் கொடுத்தால் உலகம் தெரியாதா
அம்மா.. .. விவரம் புரியாதா

நான் உன்னை அழைக்கவில்லை என் உயிரை அழைக்கிறேன்
கண்ணை மறைத்துக்கொண்டால் மனதில் எண்ணம் மறைவதில்லை

என்னை படைத்த தெய்வம் இன்னும் கண்ணைத் திறக்கவில்லை
உன்னை அனுப்பி வைத்தான் ஆனால் உனக்கும் கருணை இல்லை
இருண்ட வீட்டில் அன்பு விளக்கு இருக்க கூடாதா அம்மம்மா.. இரக்கம் பிறக்காதா

நான் உன்னை அழைக்கவில்லை என் உயிரை அழைக்கிறேன்
கண்ணை மறைத்துக்கொண்டால் மனதில் எண்ணம் மறைவதில்லை
நான் சின்னக் குழந்தையம்மா சொல்லத் தெரியவில்லை
பிள்ளை மழலையிலே உனக்கும் உள்ளம் புரியவில்லை

பாடல் : நான் உன்னை அழைக்கவில்லை
பாடியவர் : டி.எம்சௌந்தர்ராஜன்
வரிகள் : கண்ணதாசன்
இசை : எம்.எஸ்விஸ்வநாதன்
திரைப்படம் : எங்கிருந்தோ வந்தாள்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *