கவிஞர் காவிரிமைந்தன்.

t r rajakumari

 

 

ஒருசில தலைமுறைகளுக்கு முன்னர் தமிழ்த்திரையை ஆட்சி செய்த ஏழிசைவேந்தர் எம்.கே.தியாகராஜ பாகவதர் … தமிழ்மக்களின் ஏகோபித்த கதாநாயகன்! மூன்று தீபாவளிகளைத் தாண்டியும் வெற்றிகரமாக ஓடிய திரைப்படம் அவரது என்கிற வரலாறு முறியடிக்கப்பட முடியாத அத்தியாயமாய் இன்றும் உள்ளது!

220px-Haridas_3yearsஇதற்கான காரணங்கள் நாம் அறிந்த ஒன்றே … அந்தக் காலத்தில் அதிக திரைப்படங்கள் தயாரிக்கப்படவில்லை … பொழுதுபோக்கு அம்சங்களும் அதிகமில்லை.. இந்தக் காரணங்கள் ஒருபக்கம் இருந்தாலும் எழுதப்பட்டிருக்கும் வரலாறு நம்மை வியக்கவே வைக்கிறது! ஆம்! ஹரிதாஸ் திரைப்படத்தின் மற்றுமொரு மதுரகீதமிது! மறக்க முடியாத பாடலாகவும்… மக்கள் இன்றைக்கும் முணுமுணுக்கும் பொற்காலப் பாடலாகவும் உருவெடுத்த பாடல்!

பாபநாசம் சிவன், ஜி.ராமனாதன், எம்.கே.தியாகராஜ பாகவதர் கூட்டணியில் விளைந்த கானாமிர்தம்! கருப்பு வெள்ளையில் 1944ல் வரையப்பட்ட அட்டகாசமான காதல் பாடல் என்கிற பெருமையை இப்பாடல் இன்றுவரை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

யுவன்சங்கர் ராஜா இசையில் உருவான இக்காலப் பாடல் ஒன்றின் இடையே இப்பாடலின் ஸ்ருதி சேர்க்கப்பட்டு … இசைக்கோர்வையில் ஒரு புதுமை புகுத்தப்பட்டபோது அதுவும் மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது என்பது கூடுதல் செய்தியாகும்!

https://youtu.be/Lt3MRCvAtao

காணொளி: https://youtu.be/Lt3MRCvAtao

பாடல்: மன்மத லீலையை
படம்: ஹரிதாஸ் (1944)
பாடல்: பாபநாசம் சிவன்
இசை: ஜி. ராமநாதன்
குரல்: எம்.கே. தியாகராஜ பாகவதர்
​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ ______________________________

மன்மத லீலையை வென்றார் உண்டோ?
மன்மத லீலையை வென்றார் உண்டோ?
என் மேல் உனக்கேனோ பாராமுகம்?
மன்மத லீலையை வென்றார் உண்டோ?
என் மேல் உனக்கேனோ பாராமுகம்?
மன்மத லீலையை வென்றார் உண்டோ?

நின் மதி வதனமும் …
நின் மதி வதனமும் நீள் விழியும் கண்டு
ரம்பா! …
ஸ்வாமி! …
நின் மதி வதனமும் நீள் விழியும் கண்டு
நின் மதி வதனமும் நீள் விழியும் கண்டு
என் மதி மயங்கினேன் நான்
என் மதி மயங்கினேன்
மூன்று உலகிலும்
என் மதி மயங்கினேன்
மூன்று உலகிலும் மன்மத லீலையை வென்றார் உண்டோ?

என்னுடனே நீ பேசினால் வாய் முத்துதிர்ந்து விடுமோ?
என்னுடனே நீ பேசினால் வாய் முத்துதிர்ந்து விடுமோ?
உனை எந்நாரமும் நினைந்துருகும் என்னிடம்
வந்தால் மெனக்கெடுமோ? – உனை
எந்நாரமும் நினைந்துருகும் என்னிடம்
வந்தால் மெனக்கெடுமோ?
உன்னை நயந்து நான் வேண்டிய ஓர் முத்தம்
தந்தால் குறைந்திடுமோ?
உன்னை நயந்து நான் வேண்டிய ஓர் முத்தம்
தந்தால் குறைந்திடுமோ?

ஒரு பிழை அறியா என் மனம் மலர்க்கணை
பாய்ந்து அல்லல் படுமோ?
ஒரு பிழை அறியா என் மனம் மலர்க்கணை
பாய்ந்து அல்லல் படுமோ? மனம் கவர்
மன்மத லீலையை வென்றார் உண்டோ?
என் மேல் உனக்கேனோ பாராமுகம்?
மன்மத லீலையை வென்றார் உண்டோ?

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *