என்னைக் காதலித்தால் மட்டும் போதுமா?

0

கவிஞர் காவிரிமைந்தன்.

aasaimugam

 

ஆசைமுகத்திற்காக கவிஞர் வாலி அன்று வரைந்த பாட்டு! காதல் பாடல் என்று வரும்போது பல்லவி என்ன வைக்கலாம் என்று எண்ணிடத் தோன்றிய கணமெ… அன்பு முகம் நோக்கி காதலன் கேட்கும் கேள்வியாய் முதல் வரி அமைந்திட… இன்பபுரி நோக்கி எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும்… வரியும் இனிக்கிறதே! காதலி கூடுகிறாள்… அவள் தானும் சேர்ந்தே பாடுகிறாள்!!

SM Subbaiah naiduகாதலியிடம் தான் வேண்டுவன எல்லாம் கேட்கும் பாணியைப் பாருங்கள்… அவளும் தருவதைத் தந்து பெறுவதில் குறியாய் இருக்கிறாள்! இன்ப நாமாவளியில் இருவர் இதயங்கள் இணைகின்றன! எஸ்.எம்.சுப்பையா நாயுடு அவர்களின் இசையும் அதற்கேற்ப கவிஞர் வாலியின் வரிகளும் இசைத்தமிழாய் வலம் வருகின்றன! எளிய வார்த்தைகளில் புதிய பாணியில் சொல்லப்பட்ட காதல் பாட்டாக..

கட்டித்தங்கம் வெட்டியெடுத்த மக்கள் திலகத்துடன் அபிநயசரஸ்வதி சரோஜாதேவி திரையில் தோன்றும் இன்பத்தமிழ்த் தேனாறு இசையின்வாயிலாக வழிகிறது! இறைவன் எழுதிவைத்த தேவகுயில்கள் டி.எம்.செளந்திரராஜன், பி.சுசீலா குரல்களில் மற்றுமொரு இன்பநாதம்! தமிழ்த்திரையின் மொத்த ராஜ்ஜியத்தில் இவர்களின் பங்காக… அவற்றுள் ஒன்றே இப்பாடல் என்றாக… இதோ நன்றாக. .. என்னைக் காதலித்தால் மட்டும் போதுமா? வேறென்ன வேண்டுமாம்.. பாடலைக் கேளுங்கள்… பதில் கிடைக்கும்!!

காணொளி: https://youtu.be/l3-cs57NsRg

என்னைக் காதலித்தால் மட்டும் போதுமா
உன் கைகளில் வரவும் வேண்டுமா
இந்தக் கைகளில் வந்தால் போதுமா
நீ கேட்டதைத் தரவும் வேண்டுமா
என்னைக் காதலித்தால் மட்டும் போதுமா

ஊரென்ன சொல்லும்
சொல்லட்டுமே
உறவென்ன பேசும்
பேசட்டுமே
காதலர் நெஞ்சம்
கொஞ்சட்டுமே
காவிய வாழ்வை
மிஞ்சட்டுமே
[என்னைக் காதலித்தால் மட்டும் போதுமா]

காவிரி கெண்டை
கண்களிலே
தாமரைப் பொய்கை
கன்னத்திலே
நாயகன் வந்தான்
பக்கத்திலே
நாயகி விழுந்தாள்
வெட்கத்திலே
[என்னைக் காதலித்தால் மட்டும் போதுமா]

ஆசைகள் தொடங்கும்
நெஞ்சத்திலே
ஆடி அடங்கும்
மஞ்சத்திலே
மாந்தளிர் மேனி என்னருகே
மன்னவன் தோள்கள் என்னருகே

என்னைக் காதலித்தால் மட்டும் போதுமா
உன் கைகளில் வரவும் வேண்டுமா
இந்தக் கைகளில் வந்தால் போதுமா
நீ கேட்டதைத் தரவும் வேண்டுமா
என்னைக் காதலித்தால் மட்டும் போதுமா

____________________________________________

பாடல்: என்னைக் காதலித்தால் ……
படம்: ஆசைமுகம்
கவிஞர்: வாலி
இசை: எஸ்.எம்.சுப்பையா நாயுடு
குரல்: டி.எம்.செளந்திரராஜன், பி.சுசீலா

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.