images

அன்பு ராம்னாத், வாட்ஸ்-அப்பில் சங்கரரின் ‘’மாத்ரு பஞ்சகம்’’ அனுப்பியமைக்கு நன்றி….கேட்ட குஷியில்….

”அழுதாலும் பிள்ளைக்(கு) அவள்தான் பொறுப்பு
பழுதான பின்பும் பரிவை -விழுதாய்ப்
பொழிவாள் எமது பராசக்தி, நெஞ்சே
தொழுவாய் அவளைத் தொடர்ந்து”….
”கன்னலுன் இன்மொழி மின்னலுன் கண்ணொளி
பின்னலோ பாம்புக்(கு) அடைமொழி -உன்னிலே
தன்னை மறந்து தவம்செய்யும் பக்தர்க்கு
எண்ண உருவம் எதற்கு”….
”அச்சுறுத்தும் பூதமா? அன்றிமாத்ரு பூதமா?
எச்சரிக்கை யோடுன்னை உச்சரிப்பதா? -நச்சரவம்
மாண்டோர் கபாலங்கள் பூண்டோன் இடபாகி
வேண்டாமே வேஷ விருப்பு”….

”நானார் அறிதல் நமக்கெதற்கு அன்னையே
நீயார் உணர்தலே நற்கதி -தாயார்
மகனைத் தொலைப்பாளா மாதா தவிக்கின்றேன்
அகலா(து) இருப்பாய் அணத்து”….

”நின்றிட பூமா நகர்ந்திட ஸ்ரீதேவி
ஒன்றிக் கலந்திட நீளாவாம் -மன்றில்
நடமாட காளி நலம்பாட வாணி
அடநமக்கு ஆயிரம்மா யி”….

”குடைபோல் விரிந்த புடவைக் கொசுவம்
இடையில் சொருகி இளையப் -பிடியாய்
கபாலீசன் கோவிலில் கற்பகத்தைக் கண்டு
உபாசித் தடைவீர் உயர்வு”….கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *