கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
நீலம் அரவணைக்க, நிர்மூலம் ஆகிடும்,
காலம் இடம்பொருள் ஏவல்கள், -கோல,
விடமுறங்கி ஆலில், விளையாடும் பிள்ளை,
உடனிருக்க உற்சாக ஊற்று ….
பாதம் பருகவந்த பசுவுக்கு வாத்சல்யத்தோடு
பாதாம் பாலாய் ஆரத் தழுவி அருச்சுனர்க்காக
இயற்றிய கீதையை இயம்புகிறான்….
காலிங்க நர்த்தனக் கூத்தாட வந்ததை,
ஆலிங் கனித்தான், அவதார- மாலிங்கு,
மாதாவை மெய்சுமந்து, காதோடு காதாக,
கீதா ரஹஸ்யம் கொடுப்பு ….கிரேசி மோகன்…