இல்லம் தேடி வரும் இறைவன் கதைகள் – “பக்தி மன்றம்” – தொலைக்காட்சி நிகழ்ச்சி
ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சியில் ஒவ்வொரு சனிக்கிழமையும் பகல் 12.00 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் நிகழ்ச்சி “பக்தி மன்றம்”
புகழ் பெற்ற பக்தி சொற்பொழிவாளர்கள் வழங்கும் இந்நிகழ்ச்சியில் பகவத்கீதை, இராமாயணம், மகாபாரதம், பக்தவிஜயம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் உபன்யாசங்கள் நிகழ்த்தப்படுகின்றன. பக்தி மணம் கமழும் வகையில் மகா புருஷர்களில் வாழ்கை வரலாற்று நிகழ்வுகளும் பல்வேறு அரிய தகவல்களுடன் இடம் பெறுவதால் வீட்டிலிருந்த படியே உபன்யாசத்திற்கு சென்றுவந்த நிலையை இந்நிகழ்ச்சி ஏற்படுத்துகிறது.
டாக்டர் ரங்கன்ஜீ, பாலாஜி பாகவதர், தாமோதர தீக்ஷிதர், ஈரோடு பாலாஜி பாகவதர் உள்ளிட்ட பல்வேறு ஆன்மீக அறிஞர் பெருமக்கள் தமக்கே உரித்தான தனிப் பாணியில் பல்வேறு சிறு கதைகள் மற்றும் உதாரணங்கள் மூலம் வழங்கும் ஆன்மீக கருத்துக்கள் நமக்கு அரிய பொக்கிஷங்கள்.